செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி

This entry is part [part not set] of 36 in the series 20090904_Issue

இலவசக் கொத்தனார்


வழக்கம் போல்

  • இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும்.
  • பதில்களை எனது வலைத்தளமான இலவசம் என்ற தளத்தில் பின்னூட்டமாகச் சொல்லுங்கள். அல்லது எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
  • நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன்.
  • இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.
  • நான் பொதுவாகப் பயன் படுத்தும் அகராதி இது.

புதிரின் இணையாசிரியர் பெனாத்தலாருக்கு என் வந்தனங்கள்.

இனி இந்த மாதப் புதிரின் கட்டவலையும் குறிப்புகளும்.

1 2 3 4 5
6
7
8 9
10 11
12 13
14
15
16

குறுக்கு

3 சளைக்காமல் இருக்க முதல் ராம நாமத்தை முழுங்க வேண்டும்(5)
6 தாகம் தீர்த்திடும் சின்ன சரஸ்வதி (4)
7 அடிக்கடி தம்பியை அழைக்க புறாவா வரும்? (4)
8 நாத்திகம் முடிய பரம்பொருள் தொடங்க ஆடையின்றி அலைவோம் (6)
13 திருவந்தாதி பாடிய இயற்கை விவசாயி (6)
14 இருபாதி தங்கம் ஒன்றாகி ஜொலிக்கும் (4)
15 சுகமான முற்றத்தில் சுற்றிவந்த உறவுகள் (4)
16 வலிப்பொழுதில் வாயரற்றும் தாயை ஈன்றவள் (5)

நெடுக்கு

1 எடைக்குள் சிக்கிய மாற்றாந்தாய் சொன்னாளோ விரதமிரு என்று? (5)
2 ஆசையில் கிளம்பி ஏழுநாளும் பூஜை துவங்க மணக்கும் (5)
4 சதி கிளம்பி அங்கம் உயிரிழந்தால் தமிழ் வளருமா? (4)
5 இந்திரனின் நாட்டில் தருமம் கலையுமா (4)
9 கொடி செழித்துயர தம்முடையதை தந்தானே வள்ளல் (3)
10 பட்டை அடிக்காட்டா வீணாகும் முன்னந்தலை எனப் பாட்டியும் சொன்னாளே (2,3)
11 ஊமையர் முதலும் கடைசியுமாக கிட்டத்தட்ட வரம்பு மீறிப் பேசியது தீ போலப் பரவிடும் (2,3)
12 நான் வாசிச்ச கடம் உருண்டா போச்சு? (4)
13 பெரிய ஊரில் நல்லது ஆரம்பிக்கக் கை வரும் (4)

இது போன்ற புதிர்களுக்கு வாஞ்சி அவர்கள் தந்திருக்கும் ஒரு எளிய அறிமுகத்தை இங்கே படிக்கலாம்.

இந்தப் புதிர் எனது வலைத்தளமான இலவசம் என்ற தளத்திலும் வரும். அங்கு பின்னூட்டமாக பதில்களை தந்தால் சரி தவறு எனச் சொல்ல முடியும்.

இலவசக்கொத்தனார்
elavasam@gmail.com

Series Navigation

இலவசக் கொத்தனார்

இலவசக் கொத்தனார்