சாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்

This entry is part [part not set] of 49 in the series 20110320_Issue

ஹெச்.ஜி.ரசூல்


திருவனந்தபுரம் வயலோப்பில் சன் ஸ்கிருதி பவனில் இந்திய அரசு சாகித்திய அகாடெமி சார்பில் நடைபெற்ற வ்டகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் பங்குபெற்ற இலக்கிய கலைநிகழ்வு மார்ச் 5- 6 தேதிகளில் நடைபெற்றது.
முதல்நாள் அமர்வில் சாகித்திய அகாடெமி செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றிட மலையாள இலக்கிய சிந்தனையாளர் எம்.தோமஸ் மேத்யூ அறிமுகவுரை ஆற்றிட வடகிழக்கு எழுத்தாளர் தெமுசுல அஒ தலைமையுரை நிகழ்த்த மலையாள கவிதைப்படைப்பாளி ஒ.என்.வி.குரூப் நிகழ்வை துவக்கிவைத்தார்.
முதல் அமர்வு கவிதை வாசிப்பில் அசாமிய கவிஞர் தனந்தா தேவி,கன்னடக் கவிஞர் பிரதிபா நந்தகுமார், மலையாளக் கவிஞர் ஜெயகுமார், மணிப்புரி கவிஞர் ஜோஸ்வார் வைகவ, மிசோரம் கவிஞர் தன்மவி தமிழ்கவிஞர் ரவிசுப்ரமணியன், தெலுங்கு கவிஞர் ஷிவரெட்டி ஆகியோர் பங்கேற்று கவிதை வாசித்தனர்.சாகித்திய அகாதெமி துணைச் செயலாளர் கே.எஸ் ராவ் நன்றி கூறினார்.

இரண்டாம் அமர்வு கதை வாசிப்பு அரங்காக நடைபெற்றது. அசாமிய எழுத்தாளர் லட்சுமி நந்தன் போரோ தலை ஏற்றிட போடோ மொழி கதையாளர் ஜனில் குமார் பிரம்மா,மலையாளம் கதையாலர் பிரகாஷ்,தமிழ் கதையாளர் பொன்னீலன்,தெலுங்கு கதையாளர் குடிபதி கலந்து கொண்டு தங்களின் கதை வாசிப்பை நிகழ்த்திக் காட்டினர்.

மாலைநேர மூன்றாம் அமர்வில் கவிதைவாசிப்பு மலையாளக் கவி சுகதகுமாரி தலைமையில் நடைபெற்றது.போடா மொழிக் கவிஞர் பிரேமானந்தா முச்சாரரி,செக்மா கவிதைப் படைப்பாளி பிரகதி சக்மா,கன்னட கவிஞர் சிந்தாமணி கொடலீகர,மலையாளம் அனிதாதம்பி,தமிழ்கவி இளம்பிறை, தெலுங்கு கவி சங்கவேணி ரவீந்திரா ஆகியோர் பங்கேற்று கவிதைகளை வாசித்தனர்.
தொடர்ந்து லோகா – த மெனி வாய்ஸஸ் என்ற முத்திரையோடு அசாமிய மக்களின் பிகு பாடல்கள் நடனங்கள் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இரண்டாம்நாள் காலை அமர்வுக்கு தெலுங்கு எழுத்தாளர் கேது விஸ்வநாத ரெட்டி தலைமை ஏற்றிட எனது உலகம் எனது எழுத்து என்ற பொருளில் உரையரங்கு நடை பெற்றது.அசாமிய எழுத்தாளர் சிபானந்தா கக்கோட்டி, ஆங்கில எழுத்தாளர் முகுந்த் ராவ், மலையாளம் எழுத்தாளர் சேதுமாதவன், மணிப்புரி எழுத்தாளர் நபகுமார் நான்ங்மெய்கபம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தமிழககவிஞர் சிற்பி பாலசுப்ரம்ணியம் தலைமையில் இலக்கியப் போக்குகள் எனும் பொருளில்கருத்தமர்வு நடைபெற்றது. மலையாளம் எழுத்தாளர் சிறீதேவி கே. நாயர் ,வடகிழக்கு மாநில எழுத்தாளர் ரஞ்சித் தேவ் கோஸ்வமி, தெலுங்கு எழுத்தாளர் நாகமாலேஸ்வரா ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.

இறுதி அமர்வாக வடகிழக்கு பிராந்திய எழுத்தாளர் மமாங் தை தலை ஏற்றிட கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அசாமிய கவி பிரஞ்சித் போரா, பொங்சர் மொழிக் கவிஞர் கமல் பொங்சர்,கன்னடக் கவிஞர் ஆரிப் ராசா,கோக்பொரோக் கவி பிரதிப் முர சிங் , மலையாளம் கவிஞர் அன்வர், வினயச்சந்திரன் நேபாளி கவிஞர் தக்கால் ,தமிழ் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,தெலுங்கு கவிஞர் ரமணா ஆகியோர் கவிதைகளை வாசித்தனர்.

நிகழ்வின் இறுதியாக மணிப்புரி மார்ஷல் கலை மற்றும் மிரிடங்கா நடனங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. பொதுவாக வடகிழக்கு மாநிலங்களின் கலைஞர்கள் படைப்பாளர்களின்படைப்பு வாசிப்புகளும் ,பழங்குடி மொழிசார்ந்த படைப்புலகமும், பாரம்பர்ய நடனங்களும் கலைகளின் பன்மைத்தன்மையை அங்கீகரிக்கவும் கலாச்சார பரிவர்த்தனை செய்வதற்குமான மிகப் பெரிய களமாகவும் அமைந்திருந்தன். கவிதை அமர்வுகளில் பெரும்பாலான கவிதைகள் அவரவர் தாய்மொழியிலும் பின்னர் ஆங்கில மொழி பெயர்ப்பிலும் வாசித்தளிக்கப்பட்டன். இந்தியக்கலாச்சாரத்தை ஒற்றைப்படுத்தி மேலாதிக்கப் பண்பாட்டை நிலைநிறுத்தும் அதிகாரங்களுக்கு மாற்றுதிசையில் பன்முக கலாச்சாரவெளியை இந் நிகழ்வு உருவாக்கிக் காட்டியது.

இந் நிகழ்வில் பங்கேற்று வாசிக்கப்பட்ட எனது மூல மொழி தமிழ் கவிதை களும் அதன் மொழிபெயர்ப்பும்
Tamil Poems : H.G.Rasool

English version : R.Premkumar

1)நூலகத்தில் பூனை

நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தது பூனை
பூனையின் மொழியைவிட
தமிழ் எளிதாக இருப்பதாக சொல்லிக் கொண்டு
மொழிபெயர்ப்புகதைகளை வாசிக்க துவங்கியது.
விடுமுறைநாளென்பதால்
நூலகத்தில் யாரும் இல்லாதது வசதியாகிவிட்டது.
பரபரப்பு செய்திகளை தாங்கியிருந்த
அன்றாட செய்தித் தாள்களும்
அங்கங்கே அடுக்கியும் வைக்கப்பட்டிருந்தன.
பூனை அவற்றையும் கலைத்துப்போட்டு படித்தது
பெரிய பெரிய ரேக்குகளில்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின்மீது
அது மெய்மறந்தகாதலை
வெளிப்படுத்த தவறவில்லை.
பகல்நேரம் இருட்டாக இருந்ததால்
ஏற்கெனவே அது விளக்கை போட்டிருந்தது.
பேன்சுற்றிக் கொண்டிருந்தாலும் வியர்த்தது.
காலியாக கிடந்த நாற்காலிகள்
ஒவ்வொன்றிலும் உட்கார்ந்து பார்த்தபூனைக்கு
உட்கார்ந்து படிப்பது பிடிக்கவில்லை.
சன்னல்களும்
அறைக்கதவுகளும் தாளிடப்பட்ட நூலகத்தில்
எப்படி நுழைந்தேன் என்பதை
பூனை திரும்ப திரும்ப யோசித்துப் பார்த்தது.
நாளைகாலையில்
நூலகத்தை திறந்துபார்க்கும் பணியாளன்
அடையாள அட்டை இல்லாத தன்னை
இங்கிருந்து வெளியேற்றிவிடுவானென்ற
பீதியும் பயமும் கண்களில்
தொற்றிக் கொள்ளாமல் இல்லை.
என்றாலும் குட்டிரேவதியும்
நவீன தமிழ்கவிகளும் தன் இனம்பற்றி
இவ்வளவு எழுதிகுவித்திருக்கிறார்களா
என்பது பற்றிய ஆச்சர்யத்தால்
பூனை மிரண்டு போயிருந்தது.

CAT IN THE LIBRARY

The cat was reading in the library

Saying that Tamil is simpler than

Its own language

It started reading translated sakkaarias stories

It was comfortable

To have nobody in the library

On that holiday

Sensational newspapers were also

Kept in series here and there

The cat dismantled them and read

It didn’t fail to explicit

Its self negated love upon

The books in the bigger racks.

Since the daytime was dark

It had switched on the lights

Eventhough the fan was revolving it was sweating

After sitting on all the empty chairs

The cat hated sitting for reading.

The cat was thinking again and again

Hoe did it enter the library

Whose wndows and doors are shut

There was fear and horror in its eyes

Thinking about tomorrow morning

When the library employee may

Drive him away

For being without identity card

Anyhow the cat was astonished

To know about

Kuttirevathi and other modern Tamil poets have

Written so much about its race.

2)என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்

என் கவிதை ஒரு துப்பாக்கிக்கு சமம்.
அதிலிருந்து பாயும் குண்டுகள்
எதிரிகளை ஒவ்வொன்றாக
சுட்டு வீழ்த்திக் கொண்டிருக்கின்றன.
புத்தனை கொன்றுவிட்டு வந்த
சீடனொருவன் பிணமானான்.
காந்தியை படுகொலை செய்த
இந்தியன் ஒருவன் பிணமானான்
மாவோவை கொன்று புதைத்துவிட்டு
ஆயுதத்தோடு வந்தவனும் அப்படியே.
என் இருப்பிடத்திலிருந்து
முன்னோக்கிச் செல்ல எத்தனிக்கிறேன்
பரவும் புகை மண்டலங்களில்
எதிரியின் முகம் துல்லியமாய் தெரியவில்லை.
ஏற்கெனவே என்மீதுபட்ட காயங்களிலிருந்து
ரத்தம் பீறிட்டு கிளம்புகிறது.
நெற்றிப் பொட்டிலும் நெஞ்சுக் குழியிலும்
குண்டுகள் துளைத்திருக்கின்றன.
என் விரல்களின் வேகம் குறைய
என்னுடல் தளர்ச்சியுற்று தடுமாறுகிறது.
தூரத்தில் ஒரு பொம்மைத் துப்பாக்கிவைத்து
என் மகளும் விளையாடிக் கொண்டிருக்கிறாள்
அவளுக்கும் தெரியாது
அது பொம்மை துப்பாக்கியல்ல என்பது.
குண்டுகள் தீர்ந்த பின்னரும்
என்கவிதை சுட்டுக் கொண்டேஇருக்கிறது.

CORPSES SHOT BY MY GUN

My poetry is equal to a gun

Bullets emanating from it are

Killing the enemies one by one

A disciple returning after killing Budha

Was killed

An Indian who mured Gandhi

Was dead

It was the same for the man

Who buried Mao and coming with weapons

I am trying to go forward

From my dwelling

The enemys face is blurred

By the spreading layers of smoke

Blood oozes from my injuries

Bullets have rifted my Forehead and heart

My fingers are slowing down and

My body shivers with weakening

My daughter is also playing at a distance

With a toy gun

She doesn’t know it is Not a toy gun

Even after the bullets are finished

My poetry is going on firing

3)ஹவ்வா

தனது இடப்பக்க விலாஎலும்பை
தேடிக் கொண்டிருந்த ஆதம்
எதிரே நின்ற ஹவ்வாவைப் பார்த்து
மூர்ச்சையாகி விழுந்தான்
தன்னிடம் இல்லாத மார்பகங்கள்
ஹவ்வாவிற்கு எப்படி முளைத்தன..?

Eve

Caressing and searching his

Left rib

Adam looked upon Eve

Opposite to him

And fell down unconscious

How breasts sprout upon Eve

Which he didn’t possess.

4) ஒரே உதையில் தூரப் போய்விழுந்த
பொம்மை சொன்னது
இப்படி எல்லாம் நடந்திருக்காது
எனக்கும் ஒரு உம்மா இருந்திருந்தால்

Mom

Upon falling away in a single kick

The toy said

This would not have happened

If I had a umma

5)சிங்கத்தை கொலைசெய்வதற்கு
என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை

எனது தூக்கம் கலைந்தபோது அதிர்ந்து போனேன்
ஒரு சிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு
படுக்கையில் கிடந்திருக்கிறேன்
எனது இரவையும் படுக்கையையும்
பகிர்ந்து கொள்ள அது எப்போது
என்னிடம்வந்து சேர்ந்ததென்று தெரியவில்லை
மிதமிஞ்சியபயத்தால் அசைவற்றுக் கிடக்க.
சிங்கத்தின் திமிருக்குள்
என்னுடல் நொறுங்கத் தொடங்குகிறது.
என்னை இறுக கட்டியணைக்கும்
சிங்கத்தின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை.
சிங்கத்தை கொலைசெய்வதற்கு
என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை.
ரத்தவாடை கசிந்துபரவ
என்னை புணர்ந்து முடித்த
மகிழ்ச்சியை கொண்டாட நினைத்த சிங்கம்
என்னுடலை கடித்து தின்ன ஆரம்பித்தது.

I Don’t Have Weapons To Kill The Lion

When my sleep was disturbed I was shocked

I was reclining in the bed embracing a Lion

I don’t know when did it come

To share my bed and night.

Lying motionless with excessive fright

My body started deconstructed

Within the aggression of the Lion

I could not escape from the embracement of the Lion

I don’t have any weapon to kill the Lion

Spreading the aroma of blood

I was finished seduced

Decided to celebrate the joy

The Lion initiated eating my body..

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்