கண்ணதாசனின் வெளிநாட்டுப் பயண அனுபவங்கள்

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

ஜி.பி.முருகானந்தம்


ஆய்வுமாணவர்- ஜி.பி.முருகானந்தம்

தமிழ்த்திரையுலகில் கவியரசாகவும், அரசியல் களத்தில் அதற்கு எதிர்நிலையிலுமாக வாழ்ந்த கவியரசு கண்ணதாசன் 1927-ஆம் ஆண்டு சிறுகூடல் பட்டியில் தோன்றி உலகத் தமிழ்நெஞ்சங்களில் தம் கவிதைகளாலும் திரைஇசைப் பாடல்களாலும் நீங்கா இடம் பிடித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது ஷசுயசரிதை| அவர் குறித்த பன்முகப்பதிவாக உள்ளது. அவற்றுளிருந்து அவரது வெளிநாட்டுப் பயணத்திற்கான நோக்கம், பயண அனுபவம், கண்ட, கேட்ட சம்பவங்கள், இந்தியாவுடன் அவற்றை ஒப்புநோக்கும் தன்மை ஆகியன குறித்தக் கருத்துக்களை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

வெளிநாட்டுப் பயண நோக்கம்
வெளிநாடுகளுக்கு பயணம் கொண்ட காலமென்பது ஏறத்தாழ திரையுலகின் உச்சத்திலும், அரசியல் களத்தில் எச்சத்திலுமாக இருந்த காலகட்டம் என்றே எண்ணத் தோன்றுகிறது. இக்கால கட்டத்தில் நிறைந்த வருவாய் இருந்தது என்றபோதும் அது தனக்கோ, தனது குடும்பத்தின் மகிழ்ச்சிக்கோ பயன்படுவதற்குப் பதிலாக கடனுக்காகவும், கவலையை மறக்க மது, மாதுயென விரையமானதாகவுமே தமது சுயசரிதையில் குறித்துள்ளதும் எண்ணத்தக்கது. எனவே இதிலிருந்து மீட்சிபெறும் நோக்கம் தான் தமது வெளிநாட்டுப்பயணம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கண்ணாதசன் ஆசை கொண்ட தேசங்கள்; சென்ற தேசங்கள்;
உலகத்திலேயே அவன் பார்க்க விரும்பிய நாடுகள் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனே~pயா, ஹாங்காங், ஜப்பான், கம்போடியா ஆகியவையே1.

சோவியத் யூனியன்
கண்ணதாசனின் நண்பர் மோகன் குமாரமங்கலம் கேட்டுக்கொண்டதற்கிணங்க கண்ணதாசனும் இசையமைப்பாளர் விஸ்வநாதனும் சோவியத் யூனியனுக்குச் சென்றனர். அவ்வனுபவத்தை ஷஆப்கானிஸ்தான் விமானமான ஹரியானா-ஆப்கானிஸ்தான் ஏர்லைன்ஸில் புறப்பட வேண்டும். காபூலில் ஒரு நாள் தங்கி, பிறகு சோவியத் விமானத்தில் போகவேண்டும் என்றார்கள். இதுதான் காபூலா! இந்தியாவைத் திணறடித்த கஜினி முகமதுவும், கோரிமுகமதுவும் இங்கிருந்தா புறப்பட்டார்கள்? ஒரே வறுமையின் ஏகபோகம்; எங்கு பார்த்தாலும் பழுப்புநிற மணற்காடு; பச்சைப்பசேல் என்று அங்கு கிடைக்கும் கீரை இந்தியாவில் கிடைத்தால் மாமிசமே தேவையில்லை; கீரைமட்டுமா? மாமிச வகைகளிலும் கைபர் ஹோட்டல் தயாரிப்பு போல் இந்தியாவில் எங்கும் காண முடியாது. காபூலிலேயே ஒரு பிரமாண்டமான ஏரிக்கரைக்குப் பிராமண நண்பர்கள் அவர்களைக் கூட்டிச் சென்றார்கள். மனிதக் கூட்டமே இல்லாத அந்த ஏரிக்கரை எவ்வளவு அழகாக இருந்தது தெரியுமா? அன்று இரவு ஏழு மணிக்கு காபூல் நகரத்துக் கடைத் தெருவைப் பார்வையிட்டார்கள். நூற்றுக்கு அறுபது சதவிகிதம் இந்தியாவில் செய்யப்பட்ட பொருள்களே அங்கு விற்பனை ஆகின்றன.

இரவு அதே ஹரியானா – ஆப்கான் விமானத்தில் ஏறி உட்கார்ந்தார்கள். விமானம் பறந்துவிட்டது. காலை ஏழு மணிக்கு துர்க்மினிஸ்தான் தலைநகரான அஸ்காபாத்தில் விமானம் இறங்கிற்று.

சோவியத் யூனியனில் துர்க்மேனியா ஓர் அழகான மாநிலம், பன்னிரெண்டு மாதங்களும் பெங்க@ரைப்போல் சீஸன். குளிர்ந்த காற்றும் மஞ்சள் வெயிலும் அற்புதம். ஒவ்வொரு வீட்டுப் பந்தலிலும் கேட்பாரில்லாமல் பழுத்துக்கிடக்கும் திராட்சைக்கு விலையில்லை. சோவியத் யூனியனில் பண்ணைமட்டுமல்ல் பண்ணையாளும் வெற்றி பெற்றிருக்கிறான். அவனது வீட்டுக்குள் டெலிவி~ன் என்ன, ரத்தினக் கம்பளம் என்ன, பதப்பெட்டி என்ன, அவனுக்குச் சொந்தமாகச் தரப்பட்டிருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தில் அவன் விருப்பம்போல் பயிரிடப்பட்டிருப்பது என்ன, அவன் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் என்ன, ஆடை அணிமணிகள் என்ன,2 கண்டக்டர் இல்லாத பஸ், கள்ளத்தனம் இல்லாத பிரயாணிகள். மாஸ்கோவிலிருந்து திரும்பும்போது ஜெர்மனி வழியாக ஒரு விமானம் வருகிறது. அவனிடம் அதற்கான டிக்கெட் இல்லை. ஆகவே, டில்லி வந்து இறங்கினான்|3 – எனக் குறிப்பிடுகின்றார்.

இவ்வனுபவத்திலிருந்து சிலவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. காபூலைப் பற்றி கண்ணதாசன் கஜினிமுகமது, கோரிமுகமது ஆகியோரை நினைவு கூர்பவர்; அதன் வறுமையை ஷஎங்கும் ஒரே வறுமையின் ஏகபோகம்; எங்கு பார்த்தாலும் பழுப்புநிற மணற்காடு| என்பவர் அடுத்த வரியிலேயே அதன் செழுமையைக் குறிப்பிடுகையில் ஷபச்சைப் பசேல் என்று அங்கு கிடைக்கும் கீரை இந்தியாவில் கிடைத்தால் மாமிசம் தேவையில்லை; மாமிச வகைகளிலும் கைபர் ஹோட்டல் தயாரிப்பு இந்தியாவில் எங்கும் காண முடியாது| என்கிறார். இந்தியா, காபூல் ஓப்பீட்டு நோக்கில் கூறும் இச்செய்தியில் ஒரு பக்கம் ஏகமான வறுமையும் மறுபக்கம் செல்வச் செழிப்புமாக இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவைப் போலவே காபூலும். அதே வேளையில் இந்தியாவைக் கொள்ளை கொண்டு சென்ற கஜினி, கோரி ஆகியோருக்குப் பின்னும் காபூல் சந்தைகளில் விற்கப்படும் இந்தியத் தயாரிப்புக்கள் இரு நாட்டுக்குமான பகை மறைந்த வாணிபத்தொடர்பை எடுத்துக்காட்டுகிறது. மேலும், காபூலில் மருந்துக்குக்கூட பெண்களைக் காண்பது அரிதெனவும் நினைவு கூர்கிறார்.
சோவியத்யூனியன் துர்க்மேனியாவைப் பற்றி அதன் அழகைப், பெருமையைச் சுட்டிவருபவர் அங்கே உள்ள பண்ணை; பண்ணையாள் ஆகியோரின் உன்னதமான வெற்றியை, பொதுவுடைமை சமூகத்தின் சிறப்பை வியந்து பாராட்டியிருப்பதையும் காண முடிகிறது. அதற்குள் நம் தேசத்தில் அப்படி இல்லையே என்கிற குறையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஷகண்டக்டர் இல்லாத பஸ்|; ஷகள்ளத்தனம் இல்லாத பிரயாணிகள்| இவ்வரிகளில் மக்கள் தம் தேசத்தின் சொத்தைக் களவு கொள்ளவோ, ஏமாற்றவோ மாட்டார்கள் என்பதும், அவர்களின் தேசப்பற்றும், தனது கண்ணைத் தானே ஒருவன் திருடவவோ, அழிக்கவோ எண்ணுவானோ என எண்ணத்தோன்றுகிறது.

மலேசியா, தாய்லாந்து
ஷமலேசியாவில் போய் இறங்கி அந்த மண்ணை மிதித்ததும் இந்த நாட்டினுடைய அழகு இந்தியாவுக்கு வரவில்லை என்று முதல் குறை தோன்றிற்று. உள்ளே போகப் போக, ஒவ்வொருவரையும் பார்க்க, பார்க்க| இந்த நாட்டினுடைய ஒற்றுமை இந்தியாவுக்கு வரவில்லையே| என்று தோன்றுகிறது. சாமான்கள் வாங்க, ஷஅடடே! இந்த நாணயம் இந்தியாவில் இல்லையே! ஹோட்டலுக்குள் நுழைந்து சாப்பிடும்போது, ஷஅடடா! இந்த உணவும் சுவையும் இந்தியாவில் இல்லையே என்ற குறை தட்டுப்பட்டதே தவிர, இதைவிட இந்தியா தேவலை என்ற உணர்வு ஏற்படவில்லை| என்பவர் அந்நாட்டின் வானொலி, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்தையும், அங்கு உள்ள கோயில்கள் மாரியம்மன், தண்டபாணி ஆகியன குறித்தும் சொல்பவர், தண்டபாணிக்கு கோயில்கள் எண்ணிக்கை அதிகம், அதற்குக் காரணம் குடும்பத்தைப் பிரிந்து சென்று வாழ்பவர்களின் மனஓட்டத்தின் பிரதிலிப்போ! எனவும் உளவியல் சார்ந்த தம் கருத்தைக் பதிவுசெய்கிறார்.

தாய்லாந்தின் கிராமமான ஹட்ஜய்க்கு போனது மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சியாகும். பினாங்கிலிருந்து அலோஸ்டார் சென்று, அங்கிருந்து புறப்பட்டுப் போனால் தாய்லாந்துக்குள்ளே போகப்போக ஏதோ இந்தியாவிலே தஞ்சாவூர்குள்ளே போவதாக தோன்றிற்று. அந்தப் பக்கமெல்லாம் ஒரே நெற்களஞ்சியங்கள். சுமார் ஒண்ணரை மணிநேரத்தில் ஹட்ஜை பிடித்து விட்டார்கள். வெளிநாட்டு செலாவணி சம்பாதிப்பதற்காகத் தாய்லாந்து அரசாங்கம் செய்திருந்த ஏற்பாடு. எல்லா வகையான வசதிகளையும் அவர்கள் உண்டாக்கியிருந்தார்கள். மாமிச வகைகள், மது வகைகள், பெண்ணினங்கள் – எதுவானாலும் சட்டபூர்வமாக ஏற்பாடு செய்திருந்தார்கள். தான் தாய்லாந்தில் சந்தித்தப் பெண்களை ஷதாய்லாந்து கிளிகள்| என்றே அவன் ஒரு கவிதை எழுதினான். தாய்லாந்து வறுமையிலும் இல்லை; பணக்காரத் தன்மையிலும் இல்லை; நடுத்தர தன்மையில் ஒரு நாணயம் இருந்தது|4 – என எழுதுகிறார்.

மேற்காணும் நாடுகளில் பயணம் மேற்கொண்ட அனுபவங்களை கண்ணதாசன் எழுதியவைகளிலிருந்து நோக்கும் தேடலும் கண்டுகொள்ள முடிகிறது. யாதெனில் முன்பே கூறியதுபோல் தான் திரைத்துரையில் உச்சத்திலிருந்தும் பயன்கொள்ள முடியாத ஏமாளித்தனமான வாழ்க்கை; அரசியல் களத்தில் தான் வஞ்சிக்கப்பட்டதன் மன இறுக்கம், மன அழுத்தம் ஆகியவற்றின் விடுதலை அல்லது குறைந்தபட்சம் மனமாற்றம் ஆகியவற்றைத் தேடியே வெளிநாடுகளுக்குச் சென்றதால் தன் மனம் அவ்வவ்நாடுகளின் பெண்களையும் மது வகைகளையும் உணவு வகைகளையும் முதன்மை கொண்டு ரசிக்கும் கண்ணதாசன், தன்னை வஞ்சித்த அரசியல் களம் அந்நாடுகளில் மக்களின் வாழ்நிலைகளை எப்படி வைத்துள்ளது எனும் தேடலும் அத்தேடலில் இந்திய ஒப்பீடும் வெளிப்படுகிறது. அவ்வெளிப்பாட்டில் துர்க்மேனியா, மலேசியா, தாய்லாந்து மூன்றிலுமே இந்தியாவைவிடவும் மக்களின் வாழ்க்கை வளமானதாகவும், நேர்மைமிக்கதாகவும் இருப்பதாகச் சுட்டியுள்ளார். குறிப்பாக சோவியத் யூனியனின் பண்ணைமுறை இந்தியாவைப் போல் தொடமுடியாத ஏற்றதாழ்வு உடையதாக இல்லை; மாறாக எல்லா செல்வங்களும் எல்லோரிடமும் இருக்கும் சமதர்மப் பொதுவுடைமை வாழ்க்கை இருப்பதை வியந்து பாராட்டியுள்ளார்.

பார்வை நூல்கள்
1. கண்ணதாசனின் வனவாசம்
2. கண்ணதாசனின் மனவாசம்
மேற்கோள்
1. கண்ணதாசனின் மனவாசம், பக்.214-226
2. மேலது, பக்.153-164
3. மேலது, பக்.170-171
4. மேலது, பக்.214-226

Series Navigation

ஜி.பி.முருகானந்தம்

ஜி.பி.முருகானந்தம்