பட்டுக்கோட்டையார் வலியுறுத்தும் பெண்ணுரிமைகள்

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

முனைவர் சி.சேதுராமன்



முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர்,
மா. மன்னர் கல்லூரி, புதுகோட்டை
malar.sethu@gmail.com

தான் வாழ்ந்த காலத்திற்கு மட்டுமல்லாது எல்லாக் காலத்திற்கும் உரியவனாக ஓங்கி நிற்கும் கவிஞன்தான் தலைசிறந்த கவிஞன். அத்தகைய தகுதிகளுள்ள தலைசிறந்த கவிஞர்கள் வா¢சையில் பொதுவுடைமை இயக்கத்தின் போர்வாளாகப் போற்றப்படுகின்றவர் பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரனார் ஆவார். பாரதிதாசன் வழியில் நின்று பாடல்களைப் பாடியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம். இவ்விருபெரும் கவிஞர்கள் விட்டுச் சென்றவைகளை எல்லாம் மக்கள் கவிஞர் தொட்டு முடித்தார். திரைத்துறையின் மூலம் தமது கருத்துக்களை மக்கள் கவிஞர் முலாம் பூசாமல் கூறினார். பட்டுக்கோட்டையாரின் பாடல்களை,” திரையிசையின் திருக்குறள்” என்பார் கவிஞர் முத்துலிங்கன்.(என் பாடல்கள் சில பார்வைகள், ப.,87). குறைந்த வயதில் நிறைந்த அனுபவ அறிவு பெற்ற பொதுவுடைமைச் சிந்தனையாளராக மக்கள் உரிமைக்குக் குரல் கொடுக்கும் மக்கள் கவிஞராக விளங்குகிறார் பட்டுக்கோட்டை. மனித உரிமைகள் பறிபோவதைக் கண்டு பா¢தவிக்காது, அதற்காக மக்களை ஒன்று திரட்டி உரிமைகளை மீட்டெடுக்கப் போராடியவர் பட்டுக்கோட்டையார் எனலாம். பெண்கள் அடிமைகள் இல்லை என்று கூறி, அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என உணர்த்துகிறார்.
பெண்ணுரிமைகள்:

பெண்ணுரிமைகளும் மனித உரி¨யே ஆகும்.மனிதன் என்பதால் ஆணுக்குக் கிடைக்கும் உரிமைகள்( மனுஷி) என்பதால் பெண்ணுக்குக் கிடைத்து விடுவதில்லை. சில நிபந்தனைகளுக்குட்பட்டே அவள் உரிமைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. மனித வாழ்வு பெண்மையால் மட்டுமே செம்மையடைகிறது. சமுதாயம் முன்னேற்றமடைய பெண்கள் பின்புலமாகச் செயல்படுகின்றனர். சமுதாயத்திற்கு உயர்வு தரும் இத்தகைய பெண்மையினைப் போற்றிப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

சமூகத்தில் பெண்கள் பெற்றுள்ள நிலையிலருந்து அச்சமூகத்தின் நாகா£கத் தன்மையை அறிந்து கொள்ளலாம். அண்ணல் காந்தியடிகள், ‘பெண் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாகும்’ என்று கூறுகிறார். ஒவ்வொரு நாட்டின் உண்மையான சுதந்திரமும், மக்களாட்சியும் செவ்வனே செயல்படவேண்டும் எனில் மக்கள் அனைவரும் சம உரிமைகளையும், மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும். ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைத்துறைகளிலும் பெண்களுக்குச் சமவாய்ப்புகளும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். மேலும் பெண்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டுமெனில், அவர்களுக்குச் சொத்துரிமை, மணமுறிவு செய்யும் உரிமை(விவாகரத்து உரிமை), மறுமணம் செய்து கொள்ளும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு, பதவி உயர்வு ஆகியவற்றில் சமவாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபை தனது மனித உரிமைகள் கொள்கையைப் பின்பற்றுவதற்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. 1946-ஆம் ஆண்டு பெண்களின் நிலைமையைப் பற்றி ஆராய்வதற்கு ஒரு துணைக் குழுவினை அமைத்தது. 1948-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மனித உரிமைகளைப் பற்றிய ஐ.நா. சபையின் வெளியீட்டில் அது பெண்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்குரிய வழிவகைகளைப் பற்றி வலியுறுத்தியது. ஆண், பெண் சமத்துவத்திற்கான வாய்ப்புகள் அளிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை உள்ளடக்கியதாக ஐ.நா.சபையின் இவ்வாய்வறிக்கை அமைந்திருந்தது.

ஐக்கிய நாடுகளின் ச¨யானத பெண்களின் விடுதலைக்காக, 1967-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான ஏற்றத் தாழ்வுகளைக் களையும் பிரகடனத்தையும், பெண்களின் சமத்துவம் மற்றும் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் பெண்களின் பங்கு பற்றிய மெக்ஸிக்கோ பிரகடனத்தை 1975-ஆம் ஆண்டிலும், பெண்களுக்கான அனைத்து ஏற்றத்தாழ்வுகளைக் களையும் ஒப்பந்தத்தை 1979-ஆம் ஆண்டிலும் வெளியிட்டது.

1975-ஆம்ஆண்டு நடத்தப்பட்ட சர்வதேச பெண்கள் மாநாடு ஐக்கிய நாடுகள் சபையின் சிறந்த செயல்பாடாகத் திகழ்கிறது.வளர்ந்த நாடுகளில் கூட பெண்கள் பெருமளவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இ·து கண்டனத்திற்குரியது. மேலும் பெண்களை அடித்தல்; கொடுமைப் படுத்தல், வாலியல் வல்லுறவு கொள்ளுதல், மானபங்கம் செய்தல், பெண்களை அடிமையாக விற்றல் எனப் பல்வேறு கொடுமைகள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்றன. வடகிழக்கு இந்தியாவிலும்,அஸ்ஸாமிலும் இத்தகு நிகழ்வுகளால் சில பகுதிகள் அமைதியற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. மேலும் பீஹார், உத்திரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் தாழ்த்தப்பட்ட இனப் பெண்கள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் கற்பழிக்கப்படுகின்றனர் எனக் கண்டறியப்பட்டு கணக்கிடப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியப் பெண்கள் தங்களது கணவர்களால் பொ¢தும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுபோன்றே உலகின் வல்வேறு நாடுகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து அவர்களைக்காப்பாற்ற பெண்களின் உரிமைகள் குறித்து ஐக்கியநாடுகள் சபை பல விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஐ.,நா.சபை விதிமுறைகளின்படி பெண்கள் பெற்றுள்ள உரிமைகளாவன; 1, சொத்துரிமை, 2. திருமணம் செய்து கொள்ளும் உரிமை, 3, திருமண முறிவு(விவாகரத்து) செய்யும் உரிமை, 4, மறுமணம் செய்து கொள்ளும் உரிமை, 5, கல்வி உரிமை,6, வேலை வாய்ப்பு, பயிற்சி மற்றும் பணி மேம்பாடுகளில் பெண்களின் உரிமை போன்றனவாகும்.

பெண்கள் மேம்பாடடிற்காகக ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகள்

பெண்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ஐக்கிய நாடுகள் சபையானது பல்வேறு நிலைகளில் செயல்பட்டுவருகின்றது. 1945-ஆம் ஆண்டு ஐ.நா. ஒப்பந்தத்தின் முகப்புரையில் “அடிப்படை மனித உரிமைகளில் நம்பிக்கை, , ஆய், பெண், இருவருக்கும் சம உரமை” என்பது மீண்டும் வலியுறுத்திச் சொல்லப்பட்டது. சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பெண்கள் பிரச்சினைகளில் முக்கிய கவனம் செலுத்துமாறு பெண்கள் பி¡திநிதிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது. பொருளாதார சமூக அமைப்பின் (ECOSOC) சார்பில் “பெண்கள் நிலைக்கான துணைக்குழு”(மனித உரிமைக்குழு) அமைக்கப்பட்டது.

1946-ஆம் ஆண்டு ஜுன் மாதம் துணை ஆணையகத்தின் முதலும் முடிவுமாக நடைபெற்ற கூட்டத்தில் பெண்கள் நிலைக்காக முழுமையான அளவில் ஒரு அமைப்பை ஏற்படுத்த ஒருமனதாக முடிவு எசய்யப்பட்டது. பொருளாதார,சமூக அலுவலுக்கான பன்னாட்டு அமைப்பின் ஒரு சிறப்பு பிரிவாக மகளிர் மேம்பாட்டு அமைப்பு(CSW) ஏற்படுத்தப்பட்டது.

1948-ஆம் ஆண்டு உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் பிரிவு 2-இல் “இன, நிற, பாலியல் வேறுபாடுகளின்றி ஒவ்வொருவரும் இந்தப் பிரகடனத்தில் சொல்லப்பட்ட உரிமைகளும் சுதந்திரமும் பெற உரிமையுடையவராகிறார்” என்று கூறப்பட்டது.

1954-ஆம் ஆண்டு இந்த உலகலாவிய பிரகடனத்திற்கு முரண்பாடான பெண்களுக்கெதிரான பழமையான சட்டங்களையும் பழக்கவழக்கங்களையும் அந்தந்த நாடுகளின் அரசாங்கம் மாற்றியமைக்க, ஐ.நா.சபை வலியுறுத்தியது.

1963-ஆம் ஆண்டு பாகுபாடு என்பது தொடர்ந்து நிலைப்பதைக் கண்டு ஐ.நா. சபையின் பொதுச் சபை பெண்களுக்கெதிரான அனைத்து வகையிலான பாகுபாட்டை நீக்குவதற்கான சர்வதேச பிரகடனத்திற்கான அழைப்பு விடுத்தது.

1966-ஆம் ஆண்டு பெண்கள் நிலைக்கான ஆணையம்(UN/CSW) தனது முதல்பிரகடன அறிக்கையைச் சமர்ப்பித்தது.

1967-ஆம் ஆண்டு உலகளாவியஅளவில் ஆண்,பெண் சமத்துவம் என்கிற தத்துவத்தின் உண்மையையும் சட்டத்தையும் ஏற்று ஐ.நா. பொதுச் சபை தித்தியமைக்கபட்ட பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.1968-ஆம் ஆண்டு பிரகடனத்தில் ஏற்றுக் கொண்டவற்றை, அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்துதலைப் பற்றிய அறிக்கைகள் தயாரிக்கும் முறையைப்பொருளாதார சமூ அவை(ECOSOC)துவங்கியது.

1970-ஆம் ஆண்டு பெண்கள் நிலை தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தங்களில் உறுதிப்பாடு அல்லது இணக்கத்தைப் பொதுச் சபை வலியுறுத்தியது. 1973-ஆம் ஆண்டு ஒப்பந்த முடிவுகள் பற்றிவரையறை செய்ய 15 நபர்கள் கொண்ட ஒரு செயல்பாட்டுக் குழுவைப் பொருளாதார சமூ அவை (ecosoc)அமைத்தது.

1975-ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் ஆண்டு (iwy)உலகமாநாடு, மெக்சிகோ நகரம் பெண்களுக்கெதிரான அனைத்து வகையிலான பாகுபாட்டையும் நீக்குவதற்கான சர்வதேச பிரகடனத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான செயல்திட்ட வரைவை தயாரிக்க ழைப்பு விடுக்கப்பட்டது. சர்வதேசமகளிர் ஆண்டு (iwy)முறையீட்டு மன்றம்,மெக்சிகோ நகரம் அரசுசார்பில் நடத்தப்பட்ட மாநாட்டிற்கு இணையாக, அரசு சாராஅமைப்புகளைச் சார்ந்த 6000 மகளிர் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு நடந்ததது.

1976-ஆம் ஆண்டு பெண்களுக்கான ஐ.நா. தன்னார்வ நிதியம் ஒன்று நிரந்தரமாக அமைக்கப்பட்டது 1984-இல் இது பெண்களுக்கான ஐ.நா. வளர்ச்சி நிதியம் என மாற்றப்பட்டது 1975-ஆம் ஆண்டின் அனுபவ மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையாகக் கொண்டு 1976முதல்1985 வரையிலான பத்தாண்டுகளை பெண்களுக்கான பத்தாண்டுகளாக ஐ.நா. பிரகடனப்படுத்தியது.1978-இல் சர்வதேச பெண்கள் ஆண்டிற்கான மாநாட்டில் ஐ.நா.வின் சர்வதேச பெண்கள் மேம்பாட்டுக்கா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (INSTRAW) அமைக்க முடிவு செய்யப்பட்டு, தற்காலிகமாக நியுயார்க்கில் அமைக்கப்பட்டது.பிறகு 1983-இல் சான்டோ டோமிங்கோவில் நிறுவப்பட்டது. 1985-இல் ஐ.நா.சபையால் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

1979 பெண்களுக்கெதிரான அனைத்து வகையிலான பாகுபாட்டையும் நீக்குவதற்கான சர்வதேச பிரகடனத்தின் இறுதி வரைவை பொதுச் சபை ஏற்றுக் கொண்டது1980-ஆம் ஆய்டு பத்தாண்டுகளுக்கிடையேயான பெண்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகளின் உலக மாறாடு டென்மார்க்கில் உள்ள கோபன்வேறகனில் நடைபெற்றது. 1981-இல் பெண்களுக்கெதிரான அனைத்து வகையிலான பாகுபாட்டை நீக்குவதற்கான சர்வதேச ஒப்பந்தம்(VEDAW) உறுப்பினர்களின் ஒருமித்த ஒத்துழைப்போடு நடைமுறைக்கு வந்தது. 1984-ஆம் ஆண்டு வளர்ச்சியல் பெண்களின் பங்கு எனபது குறித்த ஐ.நா. உலக ஆய்வின்படி நுண்ணியல் மற்றும் போ¢யல் வளர்ச்சிப் பணிகளில் பெண்கள் மிகப்பொ¢ய பங்கு வகிக்கின்றார்கள் என்றும், பெண்கள் பிரச்சினைகள் குறித்த ஐ.நா. வரலாற்றில் இரு ஒரு திருப்புமுனையாகவும் கூறப்பட்டது.

1985-ஆம் ஆண்டு பெண்கள் மேம்பாட்டிற்கான தொலைநோக்கு உத்திகள்(ForwardLooking Strategies-FLS) கென்யாவிலுள்ள நைரோபியில் நடைபெற்ற பெண்களுக்கான பத்தாண்டுகள் நிறைவு மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பெண்கள் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்த ஐ.நா. செயல்பாடுகளைச் செயல்படுத்துவதில் தொலைநோக்கு உத்திகளும் சர்வதேசஅளவிலான பெண்கள் இயக்கங்களும் மிகப்பொ¢ய பங்கை வகிக்கின்றன.

1987-இல் பெண்கள் மற்றும் வளர்ச்சி பற்றிய கொள்கை அளவிலான இடைக்கால திட்டம் பொருளாதார சமூக அவையால் (ECOSOC)ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்திட்டம் தொலைநோக்கு உத்தி மற்றும் இதுவரைபர்வேறுபட்ட ஐ.நா.அமைப்புகளினால் செயல்படுத்தப்பட்ட செயல்பாடுகள் மற்றும் திட்டங்களைஅடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டது.
1995-ஆம் ஆண்டு பெண்கள் மற்றும் அரசுசாரா பெண்கள் அமைப்புகளின் நான்காவது உலக மாநாடு சைனாவில் உள்ள பீஜிங்கில் நடைபெற்றது. பெண்களும் வளர்ச்சியும் குறித்த கொள்கை அளவிலான இரண்டாவது இடைக்கால திட்ட வரைவு தயாரிப்பில் உள்ளது இது நைரோபி தொலைநோக்கு உத்தி செயல்பாட்டை ஐ.நா. கொள்கைக்கு உட்பட்டு 2000மாவது ஆண்டுகளில் என்ற காலவரையறைக்குப் பிறகாவது அடையும வகையில் இருக்கும். 1999-இல் 1995-ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றிய பொது செயல்பாட்டுத் தளம் ஐந்தாண்டு நி¨வு அடைவதை ஒட்டி அதன் செயல்பாடு குறித்த பன்னாட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

1995-,ல் சீனத் தலைநகரான பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடு பெண்களுக்கிழைக்கப்படும் அனைத்துயவகைக் கொடுமைகளும் பிற நடைமுறைகளில் காட்டப்பட்டு வரும் வேறுபாடுகளும் களையப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன், பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்குச் சமமனான வாய்ப்புகளும், உரிமையும், சம ஊதியமும், வாழ்க்கைக்குத் தேவையான பிற பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.

இவ்வுலகின் மொத்த மக்கள் தொகையில் ஐம்பது சதவிகிதம் பேர் பெண்களாவர் என ஐ.நா.வின் புள்ளிவிவரம் தொ¢விக்கின்றது. இதில் மூன்றில் ஒருபகுதியினர் தொழிலாளர்கள். மூன்றில் இருபங்குப் பகுதிநேரம் பெண்களின் வேலை நேரமாகும். பத்தில் ஒரு பகுதி பெண்களின் உழைப்பினால் ஈட்டிய ஊதியமாகும். நூறில் ஒரு பங்கு சொத்துக்களே பெண்களுக்கு உரியவை என்பவை ஐ.நா. புள்ளிவிவரங்களில் இருந்து அறியக் கூடிய செய்திகளாகும்.

ஐ.நாவின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள நாடுகளின் சமூக,பொருளாதார அரசியல் மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்குப் பெண்களின் உரிமைகள் பேருதவியாக இருக்கும் என்பது மறக்கபட்டு விட்டது. மேற்குறிய வளர்ச்சியை உண்மையாக உலக நாடுகள் பெற வேண்டுமானால் அந்தந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டங்களம் அரசியல்வாதிகளும் தனியாரும் மற்றும் அனைவரும் ஒட்டுமொத்த முயற்சிகளை மேற்கொண்டு, ¦ழுத்து வடிவிலேயே தொடர்ந்து இருந்து வரும் பெண்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்தி, நாட்டு நலனைப் பெருக்க வழி செய்ய வேண்டும். ஐ,நா,வின் கொள்கைகள் வெற்றி பெற இன்னும் நீண்ட கால அசகாசம் தேவைப்படும் என்று கூறலாம்.

மக்கள் கவிஞர் குறிப்பிடும் பெண்ணுரிமைகள்

பெண்மையால் மட்டுமே மனித வாழ்வு செம்மையடைகிறது. மனிதகுல வாழ்விற்கு உயர்வு தரும் அப்பெண்மையைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இதனை நன்கு உணர்ந்திருந்த பட்டுக்கோட்டையார், “பெண்மையில்லாத வாழ்வில் செம்மையில்லை-அதைப் பேணி வளர்க்காமல் நன்மையில்லை” (பட்டுக்கோட்டையார் பாடல்கள் ப.,172)என்று கூறுகிறார். பெண்மையைப் போற்றுக என்கிறார். இது, “தையலை உயர்வு செய்” எனும் பாரதி கூற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கதாகும்.

பெண்களை இச்சமூகம் மென்மையானவர்கள் என்று கருதி வருகின்றது.மேலும் பெண்களால் எதுவும் செய்ய இயலாது எனச் சிலர் கருதுகின்றனர். பெண்கள் மென்மையானர்வர்கள் என்று கூறி பெண்களுக்குரிய வாய்ப்பினை இன்று மறுக்கின்றனர். இங்ஙனம் செய்தல் கூடாது; அவர்களால் எதுவும் செய்ய இயலும். அவர்களுக்கு உரிய வாய்ப்பினைக் கொடுத்தல் வேண்டும் என்பதை மக்கள் கவிஞர்,

“கோழைக்கும் வீரத்தைக் கொடுப்பவள் மங்கை
கொய்யாக் கனியாய் இருப்பவள் மங்கை
மன்னனைச் சகுந்தலை போல் மதிக்கவும் முடியும்
மணிமேகலைபோல் வெறுக்கவும் முடியும்” (ப.கோ. பாடல்கள், ப.,195)

என்று தெளிவுறுத்துகிறார். இப்பாடலின் மூலம் பெண்கள் சமூகத்தில் உரிய விதத்தில் மதிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்துகிறார். பட்டுக்கோட்டையார் தமது பாடல்களில் பின்வரும் பெண் உரிமைகள் குறித்துத் தெளிவாக எடுத்துரைக்கிறார். அவையாவன,1, ஆண்-பெண் சமத்துவ உரிமை, 2. குடும்பத்தில் சமத்துவ உரிமை, 3. திருமணம் செய்து கொள்ளும் உரிமை, 4. மறுமணம் செய்து கொள்ளும் உரிமை, என்பனவாகும்.

1, ஆண்,பெண் சமத்துவ உரிமை (Equality between men & women)

இச்சமூகத்தில் ஆண்- பெண் என்ற வேறுபாடு காலங்காலமாகக் காணப்படுகிறது. பெண்களுக்கு ஆண்களுக்குக் கிடைப்பதைப் போன்று எந்த உரிமைகளும் சுலபத்தில் கிடைத்துவிடுவதில்லை. ஏனெனில் பெண்களுக்குச் சில நிபந்தனைகளுக்குட்பட்டே உரிமைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. பெண்ணின் நடத்தை குறித்த சமூகப் பார்வையே அவளுடைய உரிமைகளை நிர்ணயிக்கிறது.”பெண்கள் மீது மரவுநீதியாக உருவாக்கப்பட்டிருக்கும் முன் தீர்மானக் கருத்துக்களை, உயர்வு, தாழ்வு கற்பிக்கும் கற்பிதங்களைப் போக்க பன்னாட்டு அரசுகள் முயல வேண்டும்” என 1979-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்சபையினால் கொண்டு வரப்பட்ட பெண்கள் மீதான அனைத்து வகைப் பாகுபாட்டிற்கெதிரான உடன்படிக்கையின் ஐந்தாவது பிரிவு எடுத்துரைக்கிறது.

அவ்வுடன்படிக்கையின் ஒன்றாவது பிரிவு, பாலியல் அடிப்படையில் மனித உரிமைகளை அடிப்படைச் சுதந்திரங்களைப் பெண்கள் அனுபவிப்பதிலிருந்து பாகுபடுத்தவோ, ஒடுக்கவே கூடாது என்று மொழிகிறது. மேலும் அதன் இரண்டாவது பிரிவானது, ஐ.நா.வின் உறுப்புநாடுகள் தங்கள்அரசியல் சாசனங்களில் ஆண், பெண் என இரக்கின்ற பெண்கள் உரிமைகளுக்கெதிரான சட்டங்களை அகற்ற வேண்டும். என்த ஒரு நபராலோ, நிறுவனத்தாலோ பெண்கள் பாகுபடுத்தப்படுவாராயின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இருக்கின்ற சட்டங்கள், பழக்க வழக்கங்கள், ஒழங்குகள், பெண்கள் மீதான பாகுபடுத்தலுக்குத் துணை போகுமானால் அச்சட்டங்கள் ஒழக்கப்படவேண்டும் என தெளிவுறுத்துகிறது. இதனை மக்கள் கவிஞர்,

“ஆணுக்குப் பெண்கள் அடிமைகள் என்று
யாரோ எழுதி வைச்சாங்க – அதை
யாரோ எழுதி வைச்சாங்க- அதை
அமுக்கிப் பிடிச்சுக்கிட்டு விடமாட்டேன்னு
ஆண்கள் ஒசந்துகிட்டாங்க-பெண்கள்
ஆமைபோல ஒடுங்கிப் போனாங்க” (ப.கோ.பா, ப., 187)

என எடுத்துரைத்து ஆண்,பெண் எனப் பாகுபாடு பாராது அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு வழங்க வேண்டும். அவர்களை அடிமைப்படுத்துதல் மனிதஉரிமை மீறலாகும் எனத் தெளிவுறுத்துகிறார்.பெண்ணடிமை என்பது எழுதப்பட்ட வேதமாகவே கடைபிடிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி,பெண்கள் வேறுவழியின்றி இதற்கு அடிமையாதல் கூடாது என்ற விழிப்புணர்வையும் மக்கள் கவிஞர் மொழிகிறார்.

பல்வேறு அரசாங்கங்கள் கடந்த சில ஆண்டுகளாக முனனேற்றமான சட்டங்களையும் சர்வதேச உடன்படிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டுள்ள போதிலும் பலஇலட்சக்கணனான பெண்கள் தொடர்ந்து ஆண்களின் கைகளில் வன்முறைகளுக்கு உள்ளாகி வருகிறார்கள். இல்லங்கள் அலுவலகங்கள், அகதிகள் மகாம்கள், உள்ளிட்டவற்றில் பெரும்பாலும் கண்களில்கசிந்தும் விழிகளுடனேயே வாழ்ந்து வருகுன்றனர். அவர்களது மெளனம் காரணமாக இக் கொடுமைகள் வெளி உலகிற்குத் தொ¢வதில்லை. சில சந்தர்ப்ப சூழல்களினால்அவர்கள் வாய்விட்டு அழும்போதுமட்டும் அவர்களது கண்ணீர்க் கதைகள் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்திகளாக வெளிவருகின்றன.

பெண்களுக்கெதிரான பாகுபாடுகளை ஒழிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் இப்பொழுது 179 நாடுகளால் அங்கீகா¢த்து ஏற்றுக் எகாள்ளப்பட்டுள்ள போதிலும் அதிகா¢த்த இராணுவ மயமாக்கல், புதிய -தாராள பொருளாதாரக் கொள்கைகளின் ஆதிக்கம் எழுச்சி பெற்று வரும் அடிப்படைவாதஇயக்கங்கள் போன்றவை உட்பட பல்வேறு உலகப் போக்குகள் பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கு முட்டுக்கட்டையான சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளன.

ஆண்,பெண்,என்ற பால் வன்முறைப் பிரச்சினைகள் மிக மோசமாக அதிகா¢த்து வருவது குறித்து விளங்கிக் கொள்வதற்கென ஐக்கிய நாடுகள் முகவர் நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து வெளியிடப்பட்ட புள்ளி விபரங்கள் அதிர்ச்சி தருவனவாக இருக்கின்றன.ஒவ்வொரு ஆண்டும் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்காக உலகெங்கும் 7 இலட்சத்திலிருந்து 40 இலட்சம் வரையிலான பெண்கள் பணம் கொடுத்து வாங்கப்படுகிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் ஆய்வாளர்கள் தொ¢விக்கின்றனர். இவர்களில் 120,000க்கும் மேல் 500,000 வரையிலான ஐரோப்பிய நாடுகளில் மட்டும் விற்கப்படுகிறார்கள். அதிகமான பெண்கள் விபசார விடுதிகளை நடத்துவோராலும் தரகர்களாலும் வடிக்கையாளர்களாலும் மட்டுமின்றி இந்தப் பெண்களைப் பாதுகாக்கும் பொருப்பு ஒப்படைக்கபட்டட காவல்த்துறையினராலும் அடித்துத் துன்புறுத்தப்படுகிறார்கள்((மனித உரிமைக் கண்காணி ஜனவா¢2006 இதழ், ப.,8)தேசிய பெண்கள் ஆணையம் இந்தியா முழுவதும் 28 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் ஈடுபடும் பெண்களில் 2.4சதவீதம் பேர் 15-35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 43 சதவீதம் பேர் சிறுமிகள். பெரும்பாலும் பின்தங்கிய பகுதியில்தான் பாலியல் தொழில் அதிகம் நடக்கிறது. வறுமையும் ஏழ்மையும் தான் அப்பாவிப் பெண்களை இத்தொழிலுக்கு இட்டுச் செலலும் முக்கியக் காரணிகளாக உள்ளன. பிளன்தங்கிய வேலைவாய்ப்பற்றப் பகுதியில்தான் பெண்களுக்கு உதிராகப் பிற அநீதிகளும் அதிகம் அரங்கேறுகின்றன. பெண்களுக்கெதிரான அநீதிக்குப் பாலினப் பாகுபாடும் முக்கியகாரணமாக உள்ளது எனத்தொ¢வித்துள்ளது.(5.10.2009 தினமணிச் செய்தி)இச்சூழல் மாற வேண்டும். பாலின வேறுபாடு பாராது அனைத்துத் துறைகளிலும் ஆண், பெண் இருவருக்கும் அதிகார உரிமைகள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். இதனை மக்கள் கவிஞர்.

“இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம்
அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்”(ப.கோ.பா. ப., 150)

என்று கூறுகிறார். இப்பாடலில் உலகத்தில் உள்ளவை அனைத்திலும் ஆண்,பெண் இருவருக்கும் சம உரிமை உள்ளதை கவிஞர் சுட்டிக்காட்டி இருப்பது நோக்கத்தக்கது. மேலும்,பாலின வேறுபாடு காரணமாக பெண்களை இழிவுபடுத்தும் நிலை களையப்பட வேண்டும் என்பதை,

“ஆளப்பிறந்தது பெண்ணரசு அது
வாழ நினைத்துக் கொண்டாடுவோம்” (ப.கோ.பா. ப., 102)

என்றும்,

“பெண்மையில்லாத வாழ்வில் செம்மையில்லை-அதைப்
பேணி வளர்க்காமல் நன்மையில்லை”

(கே.ஜீவபாரதி(தொகு,ஆ. ப.கோ.பாடல்கள், பக்., 172,173)

எனவும் சுட்டுகிறார் பட்டுக்கோட்டையார். உண்பது,உடுத்துவது, சமைப்பது, குழந்தைகளைக் கவனிப்பது உள்ளிட்டவை மட்டுமே பெண்களுக்கு உரியதல்ல. நாட்டை ஆள்வதற்கும் பெண்மைக்கு உரிமை உண்டு என இப்பாடலில் வலியுறுத்திக் கூறுகிறார். நாடளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகிதம் என்று கூறப்படும் நிலையில் பட்டுக்கோட்டையார் அனைத்திலும் 50 சதவிகிதம் எனக் கூறியிருப்பது நோக்கத்தக்கதாக அமைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான அநீதியைத் தடுக்க வேண்டுமெனில் பெண்கள் என்பவர்கள் சமுதாயத்தில் மதிக்கப்படக்கூடியவர்கள் என்ற மனநிலையை அனைவருடைய மத்தியிலும் உருவாக்க முயலவேண்டும்.அப்போதுதான் பெண்களுக்கெதிரான குற்றங்களைக் குறைக்கலாம்.

2,குடும்பத்தில் சமத்துவ உரிமை:

“ஆண்-பெண் சமத்துவம் நிகழ வேண்டிய முதலிடம் குடும்பமே; அது பொய்யாது நிகழ்ந்தால் புவியெல்லாம் மகிழ்வே” என்றார் இங்கர்சால். 1979-ஆம் ஆண்டு ஐ.நா.பொதுப்பேரவை இயற்றியுள்ள, பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளை நீக்குவதற்கான ஒப்பந்தத்திலும் இதேபோன்று (Convention on the Elimination of all forms of Discrimationagainst Women) குடும்பத்தில சமத்துவம் நிகழவே பொ¢தும் வலியுறுத்தப்பட்டிருப்பது ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது. மனித குல முன்னேற்றத்திற்கு ஆய-பெண் கூட்டுவறவில் சிறக்கும் இல்லற வாழ்வும், அதன் ஏற்பாடாக விளங்கும் குடும்பமும்தான் உறுதியான அடிப்படை என்பதையே ஐ.நா. வலியுறுத்துகிறது.

திருமண வாழ்க்கையில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவர் மற்றவருக்காக வாழும் உயர் பண்பைப் பெற்றிருக்க வேண்டும் என இங்கர்சால் வலியுறுத்துகிறார் (இராஜ.முத்திருளாண்டி, இலக்கியத்தில் மனித உரிமைகள், ப., 96) ‘குடும்பத்தலைவர்’ என்பது ஆணுக்கு மட்டும் எப்போதும் உரித்தானதெனக் கொள்வது இகழ்வானதொரு உணர்ச்சி(infamous feeling) என்று அறிஞர் இங்கர்சால் குறிப்பிடுவது உன்னற்பாலதாகும்.

குடும்பமே சமுதாயத்தின் இயற்கையான அடிப்படையான அலகு ஆகும். சமுதாயத்திடமிருந்தும், அரசிடமிருந்தும் பாதுகாப்புப் பெறும் உரிமை குடும்பத்திற்குண்டு என அகில உலக மனித உரிமைப் பிரகடனத்தின் 16-வது பிரிவு எடுத்துரைக்கிறது. மனித இனத்தின் சா¢பாதியாய் உள்ள பெண்களின் செயல்பாட்டை முடக்கவே ‘குடும்பம்’ எனும் நிறுவனம் செயல்படுகிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் பள்ளிக்கூடம் தனது குடும்பம் தான். இந்தப் பள்ளிக்கூடத்தில் விடைபெறும்நாள் கிடையாது. மனிதனின் வாழ்நாள் முழுவதும் பாடங்களும், படிப்பினைகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்தக் குடும்பம் என்னும் பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்களை இடைக்காலத்தில்நாம் நுழைந்து திரும்பும் பள்ளியோ, கல்லூரியோ மாற்றுவதில்லை.மாற்றும் விதமாய் நம் கல்வித்திட்டங்களும் அமையவில்லை. மேலும்பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் படிக்கப்படும் பாடங்களுக்கு, இந்தக் குடும்பப் பள்ளிகளிலிருந்து நாம் பெறும்பாடங்களை மாற்றும் சக்தி கிடையாது. காரணம் நம் பாடத்திட்டங்கள் வாசித்து மனப்பாடம் செய்த அதைத் திரும்பி ஒப்புவித்துத் தேர்வு பெறும் முறையில் அமைந்துள்ளன. இத்தகைய கருத்துக்கள் ஒரு வேளை நம் அறிவை வந்தடையலாமே தவிர மனதை வந்தடைவதிலலை. அறிவைச் சென்றடையும் பாடங்களைவிட, மனதைச் சென்றடையும் பாடங்களே மனிதவாழ்க்கையை மாற்றவல்லவை. உதாரணமாக நமது குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும் பாடப் புத்தகங்களில் காணப்படும் குடும்பங்களின் நிலை எவ்வாறு உள்ளது? அம்மா சமைப்பாள், அப்பா நாளிதழ் படிப்பார், தம்பி விளையாடுவான், அக்கா வீட்டு சூவலை பார்ப்பாள். இவ்வாறாகவே குடும்பத்தைப் பற்றிய கருத்து நம் குழந்தைகளின் மனதில் விதைக்கப்படுகிறது. நமது பங்கேற்புடைய குடும்பமும் இத்தகைய அமைப்பு முறையிலேயே காணப்படுகிறது. தாய்க்கும் குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்களான கணவன், குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் இடையிலான உறவு அன்பு, பாசம் என்ற தளைகள் மூலம் கட்டப்பட்டவைகளாக உள்ளன. இத்தகைய உறவு குடும்பம் நிலைத்து நிற்கவும் தொடர்ந்து இயங்கவும் உறுதுணையாக அமைகின்றன.

மேலும் குடும்பத்தில் ஆண், பெண் என்றும் கணவன் அனைத்து உரிமைகளையும் உடையவன், மனைவியானவள் அவனுக்குக் கீழ் அடங்கிப் போகவேண்டும் என்று கருதுவது குடும்ப வன்முறையைத் தூண்டும், உரிமையை மீறும் செயலாகும்.’ஓருயிர் ஈருடல்’ ஆகியது உண்மை எனில் ‘நானே தலைவன்’ என ஆண் எண்ணுவது அகந்தையே தவிர, மலரும் அன்பின் வெளிப்பாடாக அது மணக்காது. ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும், ‘அன்பு தவழ்கின்ற’ மகிழ்ச்சி வாழ்க்கை அவனுக்கு இல்லாவிடில் வாழ்க்கை பொருளற்றதாக ஆகிவிடும். குடும்பத்தில் உருவாகும் மகிழ்ச்சிதான் செல்வம்; அதுவே உயிர். குடும்பம் என்ற அமைப்பில் ஆண-பெண் சமத்தும் உறுதி பெற்றால் தான்அங்கிருந்து மகிழ்வு பெருக்கெடுக்கும். அடிப்படைச் சமுதாய அமைப்பான குடும்பம் நன்றானால், உலகம் நன்றாகும் என்று இங்கர்சால் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கதாகும். குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் சம உரிமை உடையவர்கள். ஒருவரை ஒருவர் மதித்து நடந்து கொள்ளல் வேண்டும். குழந்தை பெறுவது முதல் குடும்பத்தின் வரவு செலவுத் திட்டம் வரை இருவரும் சேர்ந்தே திட்டமிடுதல் வேண்டும். இதனை,

“பொறப்பு வளர்ப்புச் சட்டம்!
நாம-சேர்ந்து போட்டுக்கணும்”

“பொழப்பு இருப்பு நோட்டம்
அதையும் சேர்த்துப் போட்டுக்கணும்
அட வரவுசெலவுத் திட்டம்
ஒண்ணா சேர்ந்து போட்டுக்கணும்”

என்று கூறுகின்றார். குடும்பத்தில் வன்முறை இல்லாது அதனைக் குடியரசு போன்று நடத்துதல் வேண்டும் என்கிறார் கவிஞர். குடும்பத்தில் ஆண்,பெண் இருவரும் சம உரிமையுடன் வாழ்தல் வேண்டும் என்று குடும்ப வன்முறைச் சட்டம் அவர் வாழ்ந்த காலத்தில் வரும் முன்னதாகவே அதனை உணர்ந்து கவிஞர் பெண்களுக்குரிய உரிமையை நிலைநாட்டுகிறார்.

குழந்தை பெறுவது பெண்களின் தார்மீக் பொறுப்பு என்றும் குழந்தைகளை வளப்பதும், அவளது கடமை என்றும் பெண்ணைக் கட்டாயப் படுத்தும் கொடுமை இன்று சமுதாயத்தில் நிகழ்கிறது. மக்கள் தொகை அதிகா¢ப்பதற்குப் பெண்ணே பிரதான குற்றவாளியாக்கப்பட்டு குடும்பநலத் திட்டங்களும் அவளையே குறிவைக்கின்றன. குடும்பக்கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சைகளில் 96 சதவிகிதம் பெண்களே செய்து கொள்கின்றனர். இத்தகைய பொறுப்புகளை ஆணும், பெண்ணும் சமமாகப் பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும்(மைதிலி சிவராமன், பெண்ணுரிமைகள் சில பார்வைகள், ப., 58) என்ற கருத்தினையும் பட்டுக்கோட்டையாரின் இப்பாடல்வா¢கள் எடுத்தியம்புகின்றன. குடும்பநலத் திட்டத்தைச் செயற்படுத்துவதிலும் பெண்களுக்குச் சுய முடிவெடுக்கும் உரிமை உண்டு என்பதையும் கலியாணசுந்தரனார் இதன்வழி எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கர்சாலின் கருத்தானது பட்டுக்கோட்டையாரின் கருத்துடன் ஒத்திருப்பது ஒப்பிட்டு நோக்குதற்குரியதாகும்.

ஆண்கள் செய்யும் அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக் கொள்வது பெண்களுக்குரிய விதிமுறையல்ல. அவர்கள் செய்வதைப் பெண்களும் திருப்பிச் செய்தால் ஆண்களின் பாடு திண்டாட்டமாகிவிடும். அதனால் ஆண்கள், பெண்களின் உரிமைகளில் தலையிடும் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்; குடும்ப வன்முறையைக் கைவிடல் வேண்டும் என்பதைப் பட்டுக்கோட்டையார்,

“ஆம்பளைக் கூட்டம் ஆடுற ஆட்டம்
அத்தனையும் பார்த்தோம் கேட்டோம்-அதை
ஆரம்பிச்சா தொ¢யும் திண்டாட்டம்” (ப.கோ.பா. ப., 187)

என எடுத்துரைக்கிறார்.

குடும்பத்தைக் குடியரசு போல் (Republicanism of the family), நடத்துதல் வேண்டும் என்ற இங்கர்சாலின் கருத்திற்கேற்ப, பட்டுக்கோட்டையார்,

“அவரவர் மகைவிகளே அவரவர்களுக்கு மந்திரிகள்
அன்பு கொண்டு குடியரசு புரிந்திடணும்
ஆவதெல்லாம் பொதுவாய்த்தான் நடந்திடணும்”

என்று மொழிவது உன்னற்பாலதாகும். கணவன், மனைவி இருவரும் சம உரிமையுடன் அனைத்தையும் பொதுவாகச் செயல்படுத்திக் குடும்பத்தைக் குடியரசுபோல நடத்துவதால் குடும்பம் சிறக்கும் எனவும் கவிஞர் வலியுறுத்துகின்றார்.

3. திருமணம் செய்துகொள்ளும் உரிமை

தங்களின் எதிர்கால வாழ்க்கையைத் தக்க திருமணத்தின் வாயிலாக உறுதி செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு. பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, கட்டாயத் திருமணங்கள் நிகழ்த்தப்படக் கூடாது.அகில உலக மனித உரிமைப் பிரகடனத்தின் 16-வது பிரிவு, “மணமக்களின் முழுமையான சுய இசைவோடுதான் திருமண உறவு ஏற்படுத்தப்பட வேண்டும்” என்று தெளிவுறுத்துகிறது. மேலும்,மணம் புரிந்து கொள்வதற்கும் குடும்பம் அமைத்துக் கொள்வதற்குமான உரிமை உரிய வயதடைந்த அனைத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் உண்டு” எனப் பெண்களுக்குத் திருமணம்செய்துகொள்ளும் உரிமை உண்டு என ஐ.நா.சபையின் அகில உலக மனித உரிமைப் பிரகடனம் பிரிவு 16 எடுத்துரைக்கிறது. இத்திருமணம் செய்துகொள்ளும் உரிமையினை மக்கள் கவிஞர்,

பெண்:”போட்டுக்கிட்டா ரெண்டுபேரும்
சேர்ந்து போட்டுக்கணும்
………. ………………. ……….
ஆண்: போட்டுக்கிட்ட – ஆமா
போட்டுக்கிட்டா – தாலி
போட்டுக்கிட்டா ரெண்டுபேரும்
சேர்ந்து போட்டுக்கணும்
பெண்:போட்டுக்கிடும் முன்னே நல்லா
பொண்ணும் புள்ளையும் பாத்துக்கணும்
புடிக்குதான்னு கேட்டுக்கணும்
ஆண்:புரிஞ்சுக்காம ஆரம்பிச்சா
ஆபத்திலே மாட்டிக்கணும்” (ப.கோ.பா. ப., 206)

என்று நவில்கிறார். மணமக்களின் முழுமனச் சம்மதத்துடன்தான் திருமணங்கள் நிகழ்த்தப் பெற வேண்டும். அப்போதுதான் இல்லறம் நல்லறமாக இருக்கும். இத்திருமண உரிமை பெண்ணுரிமையாகும். பெற்றோர்கள் விருப்பப்படி, கட்டாயத்தின் போ¢லும் விருப்பமின்றிப் பெண்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. குடும்பத்தில் உள்ள பொ¢யோர்கள் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதில் விருப்பமா? என்பதைக் கேட்டுத் தொ¢ந்து கொண்ட பின்னர்தான் பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தல் வேண்டும். மணமகனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு உண்டு என்ற திருமணம் செய்துகொள்ளும் உரிமையை இப்பாடல் வழி மக்கள் கவிஞர் எடுத்துரைக்கிறார். இங்கு தாலி என்பது ஆண்- பெண் சமத்துவ உரிமையைக் குறிக்கும் குறியீடாகக் கவிஞரால் கையாளப் பெற்றுள்ளது எனலாம்.

4. மறுமணம் செய்துகொள்ளும் உரிமை

கணவன், மனைவி இருவருக்கும் எல்லா விதத்திலும் சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமைகள் அமைப்பின் கோட்பாடுகளுக்கு ஒப்ப, பெண்களுக்கு மறுமணம் செய்துகொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ள, கணவனைத் தொ¢வு செய்ய, தேவையில்லையெனில் நிராகா¢க்க, குழந்தைகள் பெறுவதைத் தீர்மானிக்க, குழந்தைகளுக்கு வேண்டிய கல்வியைத் தொ¢வு செய்திட, குடும்பப் பெயரைத் தொ¢வு செய்ய உரிமையுண்டு என தேசிய இன, மொழி,சமய சிறுபான்மையோர்க்கான ஐக்கிய நாட்டவையின் உரிமைப் பிரகடனம் பிரிவு 16 தெளிவுறுத்துகிறது.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பில் சரத்து(6,2)இல் இது பற்றி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவாகரத்து செய்து கொண்டபின், பெண் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாகிறாள். திருமணமுறிவு பெற்ற பெண் விரும்பினால் தான் விரும்பும் மற்றொருவனை மறுமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டு. ஆண்கள் இவ்வுரிமையைத் தங்கு தடையின்றி காலங்காலமாக அனுபவித்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மறுமணம் செய்து கொண்டபின் தன் முதல் கணவன் மூலம் தனக்குப் பிறந்த குழந்தைகளைத் தான் விரும்பினால் வளர்க்கும் உரிமையும் அவளுக்கு உண்டு. இதற்குத் தனது இரண்டாவது கணவன் போதிய பாதுகாப்பு வசதிகளும் செய்து தரவேண்டும். குழந்தைகளை வளர்த்து, கல்வியளித்து, வேலைவாய்ப்புகளைத் பெற்றுத் தரவேண்டியது அவர்களுடைய பொறுப்பாகிறது. இது பிரிவு (16:1)இல் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கக் கூடாது என்பதையும், பெண்களின் திருமண நிகழ்வுகளிலும், குடும்பம் பற்றி விஷயங்களிலும் அவர்களுக்கு சமத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பதையும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் இப்பிரிவு உள்ளடக்கியுள்ளது. பெண்களுக்குக் கட்டாயத் திருமணத்தை இ·து மறுத்துரைக்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 494-வது பிரிவு மறுமணம் பற்றிக் குறிப்பிடுகிறது. அதன்படி பெண் தன்னுடைய கணவனை, சட்டத்தில் அனுமதிக்கப்பட்டள்ள ஏதேனும் காரணத்தால் விவாகரத்து செய்தபின், மறுமணம் செய்து கொள்ளும் உரிமைஉண்டு என்றும், அவ்வாறு மறுமணம் செய்து கொண்ட பெண்ணுக்குத் தன் முதல் கணவனால் திருமணமுறிவு பின் வழங்கப்பட்டு வந்த ஜீவனாம்சத் தொகை நீதிமன்ற முறைப்படி நிறுத்தப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது. எனவே இவ்விதி இந்துப் பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமையைச் செயல்படுத்த பாதுகாப்பும் வழங்கியுள்ளது. இந்தியாவில் விதவைகள் மறுமணத்திற்காகவும் அவர்தம் நல்வாழ்விற்காகவும் பாடுபட்டவர்களுள் ஒருவரான ஈஸ்வர சந்திர வித்யாசாகர் விதவை மறுமணத்தை ஆதா¢த்து,சங்கம் ஒன்றை அமைத்து அதன் மூலம் தனது கோரிக்கைகளையும் ஏற்குமாறு அரச¨க் கேட்டுக் கொண்டார். 1856-ஆம் ஆண்டில்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் விதவை மறுமணம் சட்ட ¡£தியாக அங்கீகா¢க்கப்பட்டது.இதன் மூலம் சமூகத்தில் விதவைகள் பயன்பெற வழி ஏற்பட்டது. அவர்களுக்கு இழைக்கப்பட்டுவந்த ‘சதி’ என்பன போன்ற கொடுமைகளிலிருந்து விடுபட்டனர். ‘பெண்கள்’ பெண்களாகக் கருதப்பட்டதுடன் மனித இனமாகவும் அவர்கள் கருதப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமணம் தொடர்பாக உள்ள பிரச்சினையை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவையாவன, 1. திருமண உறவு முறியும்போது, 2. கணவன் இறந்தபோது என்பனவாகும். இவ்விரு நிலைகளில் இந்து சமயத்தைச் சேர்ந்த மகளிர் கணவன் உயிருடன் இருக்கும்போது உள்ள திருமண உறவு அவன் இறந்த பிறகும் தொடருவதாக கருதுகின்றனர். இதனால் கணவன் இறந்தபிறகு உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்தது. இக்கொடுஞ்செயலை இராசாராம் மோகன்ராய் போன்ற சீர்திருத்தவாதிகள் எதிர்த்தனர். வில்லியம் பெண்டிங் இவ்வழக்கத்தை ஒழிக்க 1829-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தார். விதவை மறுமணச்சட்டம் வந்தபின்னர் உடன்கட்டை ஏறும் வழக்கம் மறைந்தது. 1856-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதவை மறுமணச் சட்டம், விதவைகளுக்கு மறுமணம் செய்துகொள்ள உரிமை கொடுத்த போதிலும், முதல் கணவா¢டம் பெற்ற சொத்துக்களை இழக்க வகை செய்தது. சமுதாய மறுமலர்ச்சி மாநாடு இச்சட்டத்தில் மாறுதல் மேற்கொள்ள விழைந்தது. மும்பையில் மாகாண சமுதாய மறுமலர்ச்சிக்குழு என்ற அமைப்பு 1938-ஆம் ஆண்டில் மறுமணச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வர எண்ணியது. அதனைத் தொடர்ந்து சட்டம் நிறைவேறியது.

இவ்விதவையர் மறுமணச் சட்டம் உயிர் வதையால் வாடிய பெண்களுக்கு உயிர் வாழ வழிகோலியது. இது பெண்களின் நிலையை உயர்த்தும் சட்டமாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டம் சமத்துவக்கோட்பாட்டை வலியுறுத்தியது. ஆண்கள் மற்றொரு மணம் புரிய வாய்ப்புள்ளது போன்று பெண்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. பட்டுக்கோட்டையார் கணவன் இறந்தபின் வாடிவருந்திய இளம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ளவேண்டும் எனத் தெளிவுறுத்தினார். பாவேந்தர் இவ்வுரிமையை,

“பேடகன்ற அன்றிலைப்போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல் செயப் பெண் கேட்கின்றான்
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால்பின் மணத்தல் தீதோ…?”

என்று வலியுறுத்துகிறார். பாரதிதாசனிடம் பயின்ற பட்டுக்கோட்டையாரும் அவரைப் பின்பற்றி,

“மன¨வி இறந்தபின் வயதான தாத்தாவும்
மறுமணம் பண்ணிக்கிட உரிமை யுண்டு இளம்
மங்கையை முடிப்பதுண்டு மண்டைவரண்டு-தன்
கணவனை இழந்தவள் கட்டழகியானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமையுண்டு-இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு” (ப.கோ.பா.ப.,)

என்று எடுத்துரைக்கிறார். ஆணுக்கு உள்ள உணர்வுகளே பெண்ணிற்கும் இருக்கும்; அதனால் பெண்கள் ஆண்களைப் போன்று மறுமணம் செய்து கொள்வதற்கு உரிமை உடையவர்கள் என்று மக்கள் கவிஞர் தெளிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பெண்களுக்குச் சம உரிமை கொடுத்து அவர்களைப் பேணவேண்டும். சமுதாயத்தில் பாலின வேறுபாடு பார்த்தல் கூடாது. குடும்பத்தைக் குடியரசு போன்று நடத்துதல் வேண்டும். ஆண்களுக்கு வழங்கப்படுதல் போன்று பெண்களுக்கும் சமஅளவில் அதிகாரப் பகிர்வினை வழங்குவது சமுதாய முன்னேற்றத்திற்கு வழிகோலும்; இளம்விதவைப் பெண்கள் மறுமணம் புரிந்துகொண்டு உரிமையுடன் வாழவேண்டும் எனவும் பட்டுக்கோட்டையார் பெண்களுக்கு உரிய உரிமைகள் குறித்துத் தெளிவுற எடுத்துரைக்கிறார். மக்கள் கவிஞர் கூறும் மகத்தான வழியில்நடந்து பெண்மை நலம் பேணி உரிமைகளைப் பகிர்ந்து கொண்டு உரிமைகளுடன் வாழ்வோம்,

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.