களங்கமில்லாமல்..

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


*********************************
மனம் ஒவ்வொரு
உருவமாக உன்னை
வனைந்து பார்க்கிறது..
நீ பிரதிபிம்பங்களுக்குள்
அடங்காமல் மஹிமா
லகிமா அணிமாவாய்
எங்கேயோ அமர்ந்து
என்னை நானறியாமல்
பார்ப்பாயோவென்ற
எதிர்பார்ப்போடு
கழிகிறது நொடிகள்..
எப்போதாவது
நீயறியாமல்
உன்னை அறிய நேர்ந்தால்
அன்று தெப்பம்தான்
திருநாள்தான்
தேரோட்டம்தான்
எங்கே கண்டுபிடித்தாய்
என்னை..?
ஏன் இன்னும்
கண்ணாமூச்சியில்..?
என்னைத் தொலைக்காமல்
களங்கமில்லாமல் உன்னைக்
கண்டு பிடிப்பேனோ என்ற
கவலையிலும்
ஆர்வத்திலும் நான்..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்