படைப்பாளி

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

ராமலக்ஷ்மி



தூங்கும் மலரைத் தொட்டெழுப்பும்
பனித்துளியைப் பார்த்து வரும்
மேனிச் சிலிர்ப்பும்
தேனின் தித்திப்பும் பாகலின் கசப்பும்
சொல்லிப் புரிவதில்லை

கவிதையில் கசியும் காதலும்
கதையில் துளிர்த்து நிற்கும் கண்ணீரும்
பத்தி எழுத்தில் பற்றித் துடிக்கும்
தார்மீகக் கோபங்களும் வலியும்

அனுபவித்தவருக்கே வாய்க்கும்
முழுமையாய் ரசிக்க
நெருக்கமாய் உணர
தாக்கத்துடன் உள்வாங்க

வருவதில்லையோ ஆதலினாலேயே
ஆதிபகவன் தானே நேரில்
மெய்ப்பொருள் விளக்க?

அடைந்திடு அனுபவத்தில் என
ஒதுங்கிடத் தெரிந்த
ஒப்பற்ற படைப்பாளி!
*** *** ***

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி