யமுனா தீரத்து நந்தக்குமாரன்….
மீராவாணி
கற்றடத்தில்
கனலியாய்
தகித்திருந்ததொருப்
பொழுதில்..
மாமுகில்ளைத் திரட்டி
மழையென பொழிந்திட
செய்திருந்தாய்!
முன்பொரு சமயம்
உன் நீலத்தைப் பிரித்து..
வானுக்கும் கடலுக்கும்
வண்ணம் தந்திருந்தாய்!
மானும் மீனுமாய்
மனம் உன்னுடனான
காதலில் துள்ளிட
புல்லாங்குழலை
நீ.. எனக்கெனவே வாசித்திருந்தாய்!
சூரியப்பிரகாசப் புன்னகைச்
சாயலில்…
காய் கனியானதும்
முல்லை மொட்டாவிழ்ந்ததும்
நிலவு தவழ்திருந்ததும்
குழல் இசைந்திருந்ததுமாய்
ஒருசேர…
என்னுயிரையும்
கொய்து நின்றிருந்தாய்!
சதங்கையணிந்த
உன் பாதச்சிரடிகள்
பதிந்த வனமெங்கும்
நவரத்தின மலர்களிடையே
நற்மணம் வீசிட
பணித்திருந்தாய்!
உன்னிரு பேசும் விழிகளுக்காக
இரவையும் தினம்
பொழுதையும் யான்
யாசிக்க..
மீராவின் கோபாலனாய்
வென்றிருந்தாய் என்னை…!
-மீராவாணி
4/28/2010
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திநாலு
- ஒரு ஆசிரியை பரீட்சை வைக்கிறாள் தன் கணவனுக்கு…..
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -20
- என்ன தவம் செய்தனை
- முள்பாதை 32
- உயர்சாதிமயநீக்கம்
- அங்காடித் தெருவும் தேநீர் இடை வேளை நாவலும்
- இது வெற்றுக் காகிதமல்ல…
- வேத வனம் விருட்சம் 88
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று – கவிதை -11 – பாகம் -2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி -போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் -கவிதை -29 பாகம் -2
- யமுனா தீரத்து நந்தக்குமாரன்….
- நாற்பது நாட்களில் செவ்வாய்க் கோள் செல்லும் அதிவேகப் பிளாஸ்மா ராக்கெட் ! (கட்டுரை -1) (The Superfast Fusion Power Plasma Rocket
- மங்களூரு விபத்து மே 22, 2010
- ரிஷி கவிதைகள்
- கண்ணாடி வார்த்தைகள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -17
- புதுக்கவிதைகளில் தாய்மை
- தள்ளாட்டம்
- 2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது
- கே. எஸ். பாலச்சந்திரனின் கரையைத்தேடும் கட்டுமரங்கள்.
- பெண்ணிய நோக்கில் அறநெறிச்சாரம் காட்டும் கற்பு
- களம் ஒன்று கதை பத்து வரிசை – 3 – அவன்பாடு