யார் முதலில் செய்வது?

This entry is part [part not set] of 35 in the series 20100305_Issue

நாவிஷ் செந்தில்குமார்


ஐந்து நட்சத்திர ஹோட்டலின்
வரவேற்பறையில்
வைக்கப்பட்டிருந்த
முகக்கண்ணாடியின் உள்ளேயும்
வெளியேயும்
இரு குழந்தைகள்
அழுதுகொண்டிருந்தன…
அழுகையை நிறுத்துங்கள்
என்றேன்
‘அதை நிறுத்தச் சொல்
நான் நிறுத்துகிறேன்’ என
மாறிமாறிச் சொல்லின.

Series Navigation

நாவிஷ் செந்தில்குமார்

நாவிஷ் செந்தில்குமார்