மழையும்…..மறுக்கப்பட்ட நானும்………..

This entry is part [part not set] of 27 in the series 20091113_Issue

தினேசுவரி


கனத்த மழை…..
கண்ணாடி
சாளரம்
வழியே
மழையைக் கண்டேன்…..

மழைத்துளி
கண்ணாடியில்
தெரித்து….
கண்ணீராய்
ஓடியது…….
நான்
அழுது
முடித்ததை
மழைத் தொடர்ந்தது…..

இந்த
கண்ணாடிக்குப் பின்னே
வாழ்க்கையென
நிர்ணயிக்கப்பட்டது
யாரால்…….??

மழைக்கு
மறுக்கப்பட்டது
போல்
எல்லாவற்றுக்கும்
நானும்
மறுக்கப்படுகிறேன்…..
சிரித்தும்
அழுதும்……

– தினேசுவரி

Series Navigation

தினேசுவரி,மலேசியா

தினேசுவரி,மலேசியா