இனி ஒரு ஓவியம்

This entry is part [part not set] of 30 in the series 20090423_Issue

ஹெச்.ஜி.ரசூல்



மரண ஓலங்களால் நிரம்பிய
வனப் புழுதிப் பரப்பில்
கடித்துக் குதறப்பட்டு
மல்லாந்து கிடக்கிறேன்.
என் மார்புக் காம்புகளை
வெறிபிடித்து கடித்துத் துப்பினான் ஒருவன்.
யோனி துவாரத்தில் துப்பாக்கி நட்டு
தன் தேசீயக் கொடியை
அசைத்துக் காட்டினான் இன்னொருவன்.
எனக்கு அடைக்கலம் தரப் போவதாய்
ஒவ்வொரு நாளும்
குரைத்துக் கொண்டிருக்கிறாய் நீ.
வெட்டப்பட்டு
ரத்தம் பீறிட துண்டிக்கப்பட்ட
கால்களால்
கைகளால்
தலைகளால் வரைந்து கொள்
இனி என் ஒவியத்தை.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்