தாகூரின் கீதங்கள் – 58 கனல் பொறி எழுப்பட்டும் !

This entry is part [part not set] of 23 in the series 20081204_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


ஒளிமய ரூபனே ! நீயிங்கு
வந்திருக்கிறாய் !
கதவினை
உடைத்து வந்த
உனக்கு வெற்றி !
இருள் குவிந்த
இந்தக் குவலயத்தை
ஊடுருவும் உன்
உன்னதக் காட்சி
பெற்றிடுவாய் அதில் நீ
வெற்றி !

வெற்றி மாலை சூடிய
வீரனே !
புதிய தினம்
புலர்ந்திடும் போது
புது நம்பிக்கை எனும்
உடைவாளை
ஏந்தி யுள்ளாய்
உன் கரங்களில் !
உதை கொடுத்து
வலுவற்ற கோழை
உள்ளத்தை ஊடுருவிப்
பந்த பாசத்தை எனக்கு
வெட்டி விடு !
பெற்றிடுவாய் அதில் நீ
வெற்றி !

வெல்ல முடியா தவனே
வருக ! வருக !
எவருக்கும்
விட்டுக் கொடுக்கா தவனே
வருக ! வருக !
தூயவனே வருக ! வருக !
அச்சம் இல்லா தவனே
வருக ! வருக !
பெற்றிடுவாய் அவற்றில் நீ
வெற்றி !

காலை இளம் பரிதியிலே
காணச் சகிக்காத
போலி வேடத்திலே
புகுந்தி ருக்கிறாய்
துன்பப் பாதையில்
உன் சங்கை முழக்கி !
மரணத்தை அழித்துன்
ஒளிக்கதிர்
கனல்பொறி எழுப்பட்டும்
எனது நெஞ்சில் !
பெற்றிடுவாய் அதில் நீ
வெற்றி !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 1, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா