உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை…

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி


அச்சில் வந்த கவிதைகளைப் பற்றி
அதிகமாய் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
காதல் தவிர்த்து எழுதலாமே என்கிறீர்கள்.
கவிதையைப் பற்றி எழுதுவதை தவிர் என்கிறீர்கள். இத்தனை கவிதைகளா இதற்குள் என்கிறீர்கள்.இத்தனைக்கும் எப்படி நேரம் என்கிறீர்கள். இன்ஸ்பிரேசன் இதற்கெல்லாம் எது என்கிறீர்கள்?
உணர்வுதளம் தாண்டி ஒன்றும் வரவில்லை என்கிறீர்கள்.

அச்சுநேர்த்தி பற்றியும் அதிகம் சொல்கிறீர்கள்.
அடர்த்தி இன்னமும் வேண்டும் என்கிறீர்கள். செய்த கவிதைகளே நிறைய என்கிறீர்கள்.
அதிகமும் படித்தல் ஆகச் சிறந்தது என்கிறீர்கள்.

எதையும் வாய்மொழியாய் சொல்வதற்கில்லை நான். என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை ஒன்றைஎழுதிவிட்டு வந்து உங்களைஎதிர்கொள்ளவே ஆசை.

Series Navigation

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி