தாகூரின் கீதங்கள் – 6 உனக்கது வேடிக்கை !

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


எப்படி சூனியம் ஆக்குவது
அப்பொருளை ?
இப்படித்தான் அர்த்தம் என்பார் சிலர் !
அப்படி முழுவது மில்லை
என்பாரும் உளர் !
மீண்டும் மீண்டும் வினாவி என்னைச்
சீண்டுவார் அவர் !
வியப்பில்லை, உனக்கு அது
வேடிக்கைதான் !

நீ யாரெனச் சொல் எனக்கு ?
நீ ஒளிந் திருப்பது எங்கு ?
வீணாகத் தேடி உன்னை
விண்டு போனதென் இதயம் !
பயணி தேர்ந் தெடுத்துச் செல்லும்
எந்தப் பாதைக்கும் நீ
இடையூறு எப்போதும்
இழைக்க வேண்டுமோ ?

முடிவாக அடையும்
குடிசை நோக்கிச் செல்லும்
ஊர்ப்புறப் பாதையை
மேற்கொள் வார் குடியான மக்கள் !
பச்சைப் புல் மேயச் செல்லும்
பசுக்கள் கூட்டம் !
குடத்தில் நீரைக் கொண்டு வருவார்
நூறு முறை
அதே பாதை வழியாக
குமரிப் பெண்டிர் !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 3, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா