சாமிசுரேஸ் , சுவிஸ்
சுகம் கேட்கும் உன் கேள்விக்கு
நீண்ட பதில் தர வேண்டும் நண்பா.
முட்கள் பதியாத
விருப்புக்களை விரும்பும்
ஒரு சிறுகுழந்தையாய் மனம் துடிக்கிறது.
ஐரோப்பிய வீதிகளில்
ஒவ்வொரு துணிக்கைகளிலும் நனைகிறேன்
காலடிகளில் சரசரக்கிறது மணல்.
நீ காணும் காட்சிகளின் நிற மூர்த்தங்களின்
மொழிபெயர்ப்புக்களை பகுப்பது
சுலபமல்லவே நண்பா.
ஒரு மெல்லிய புன்னகையின் வலியைச் சொல்ல
வார்த்தைகள் இல்லாமல் போயிற்றே.
இடைவெளி நோக்கிய விழி
வரவேற்க மனமின்றிச் சிதைய
மௌனங்களை மீறி நெருக்கும் து}றலில்
மெல்ல நனைகிறது மனம்.
பற்றின்றித் தொலைந்த இரவுகளைப் பற்றி
எனக்கென்ன கவலை.
என் மையப்புள்ளியின் நகர்வு
சில கணங்களைத் தொலைத்த தொடுகையாய்
சீரற்ற பாதையில் செல்கிறது.
அழகைப் பருகிப் பின் து}க்கியெறிந்து
அந்தரத்தில் தொங்கும் அக்கினியாய் நான்
குளிர்கிறேன்.
நண்பா நீ வெயிலில் சுடுபவன்
ஐம்பூதங்களும் ஒன்று சேர்ந்து
மெய்யுள் தாக்கும் குளிர்ப்பறவை நான்.
இங்கு சிரிமொழிபேச எழுத்துக்களில்லை கேள்.
சிறிது சிறிதாய் வாழ்க்கைத் துளிகளைச் சேகரித்தபடி
வினாடி விழுங்கும் புழுக்களாய்
முகவெளிச்சத்துடன் உலவுகிறோம்
சில நேரங்களில் என் சுபாவத்தை மீறி
மௌனமாயிருக்கவே விரும்புகிறேன்
காற்றை மொழியாக்கிச் சுவைக்கிறேன்
நண்ப
நீ பதில் தரவேண்டாம்
வலியில்லாச் சிரிப்புக்கொடுபோதும்
மீதமுள்ள மணித்துளிகள் மரணிக்காமலிருக்கும்
25.02.2007
sasa59@bluewin.ch
- விருதுநகரில் விடியல் விழா நாள் 8/3/2007 வியாழன் மாலை 5.30 மணி
- எண்ணச் சிதறல்கள் – சாரு, சாய் பாபா, அமிர்தானந்தமயி, தமிழக முதல்வர், கனிமொழி,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
- தொலைந்த ஆன்மா
- நீர்வலை – (13)
- உண்மை கசக்கும்
- “மும்பை டப்பா வாலாவுக்கு ஜே…ஏஏ!!!”
- சுதந்திரமும் சுதந்திரம் துறத்தலும்
- கடல் மெளனமாகப் பொங்குகிறது
- நியூசிலாந்து பயண நினைவுகள்
- அம்பைக்கு விளக்கு விருது வழங்கும் விழா
- சினிமா – BABEL
- ‘பெரியார்’ வருகிறார்!!
- காதல் நாற்பது (11) காதலுணர்வு எழிலானது !
- புதுமைப்பித்தன் இலக்கியச்சர்ச்சை 1951 – 52 நூல்வெளியீடு
- எரங்காட்டின் எல்லைக்கல்
- அரசியல் கலந்துரையாடல்
- கலவியில் காயம் – நடேசன்
- கடித இலக்கியம் -47
- திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ‘புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்’
- ஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து
- சமுதாய மாற்றத்தில் தமிழ் இதழ்கள்
- கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி
- வாழும் விருப்பமுள்ள மனிதர்கள் ( நாஞ்சில்நாடனுடைய கதையுலகம்)
- கவிதையின்மீது நடத்தப்படும் வன்முறை……
- வால்மீனில் தடம் வைத்து உளவப் போகும் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல்
- கவிதைகள்
- கவிதைகள்
- நாங்கள் புதுக்கவிஞர்கள்
- தூரமொன்றைத் தேடித்தேடி..
- குருதிவடியும் கிறிஸ்து
- பெரியபுராணம்-124 திருமூல நாயனார் புராணம் தொடர்ச்சி
- நிலவு “டால்பின்”
- ஹிந்து குடிமைச் சட்டத்திற்கு அடிப்படை மனு ஸ்மிருதியா?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:2)
- மடியில் நெருப்பு – 27