எச்.முஜீப் ரஹ்மான்
கண்களின் பார்வையில்
தப்ப முடியாத உலகம்
வேகமான தூரத்தில்
புள்ளியாய்
மறைய
உயர மேலும் உயர
எனது பிரக்ஞையில் மழை நீரருவி
பாய்கிறது
சலசலப்புடன்
உனது காலில் மிதிபட்டு கிடக்கும்
இறுதிநாளை
நோக்கிய தவிப்புடன் காலம்
மணலை குழைத்து
நானுன்னை உருவாக்கினேன்
காலத்தை பூசி
அழகான வேலைப்பாடுகளுடன்
உன்னை அச்சாக
வார்த்தேன்
நான் நினைத்து பார்க்காத
கணம் வந்து
என்னோடு உரையாடுகிறாய்.
நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது ?
உனக்கும் எனக்குமான
தூரம் பிளந்த போது
ஆகாயம் ஒரு காலில்
பாதாளம் ஒரு காலில்
முடிவுற்ற பரப்பில்
வெளியை புதைத்து
நட்சத்திரங்களை நோக்கி
புன்முறுவலுடன்
நெடிதுயர்ந்து நிற்கும்
தோற்றமென.
எனது தேகமும்
அறிவும் யாவற்றையும்
பிடரி நரம்புகளின்
அருகிலிருந்து
கவனிக்கிறாய்.
என் உயிரை பற்றியிழுக்கும்
மரணதேவன்
அகப்படாத வெளியில்
நின்று கொண்டு
உனது உயிரை வாங்க
துடிக்கிறான்
எனக்கிது புரியவில்லை
அற்புதமான வலிமையுடைய
உன்னை
மணலாக உருவாக்கிய போது
தான் மரண தேவன்
வருகிறான்
மரணத்தை கொண்டு
இஸ்லாம் மற்றும் வல்லின மெல்லினங்கள்
ஒன்று
சாந்தியின் கழிவுப்பொருட்கள்
ஜோடனைகளின் இயக்கத்தில்
(அமைதி,சமாதானம் இன்னபிற பெயர்களில்)
ரகசியத்தின் விளிம்பில்
நின்றொரு இதயம் தொடும்
அழகிய உரையாடல்
ஆதியில் தொடங்கி மீதி கூட
இல்லாமல் காலத்தின்
ஒரு விசித்திர சுழற்ச்சி
கவனிப்பு இல்லாமல்
ஆயிரம் நாவுகளில் விரியும்
ஜ்வாலை கீற்றுகள்
சாந்தியின் உருமாற்றத்தில்
அனல் கக்கும் ஒரு சொல்
பாதாளத்தின் கதவிடுக்கிலிருந்து
துருத்திக்கொண்டு
வெளியே
சொற்களுக்கான அர்த்தங்கள்
மொழியில்
ஒவ்வொருபேரின் உடும்பு பிடிக்குள்
உதறி தள்ளி ஓடவே விரும்புகிறேன்
கலையும் வெண்மேகத்தில்
பிரியும் கணங்களில்
வெளியே
எனக்கான சொற்களுடன்
இரண்டு
சொல்லியாச்சா ?
இனி வாயை கழுவு
துர்நாற்றத்தை களை
பூமியில் மணம் மட்டுமல்ல
துர்நாற்றமும் உண்டு
அதனதன் தன்மையுடன்
புரண்டு அழுக்கை அப்பிக்கொண்டு
புழுதியில் நடப்பது
உனக்கு பிடித்திருக்கலாம்
புழுதிவாரியிறைக்கும்
துர்நாற்றங்களின்
தீட்சண்யம்
பூமிக்குள் வேர்விட்டு
படரும் வேகத்தில்
ஒரு மெய்.
மூன்று
நான் போகவே விரும்புகிறேன்
உயிரை உறிஞ்சி
குருதியில் நனைந்து
பெருத்து வளர்ந்து
வெளியே வரும் அட்டையை
காண மனசில்லாமல்
நான்கு
எல்லோருக்குமான அறிவு அவரவர்
ஆழத்தில் வீற்றிருக்கிறது
என் தலையில் மூத்திரம் பெய்யும்
உன் சாமர்த்தியம்
பழக்கப்பட்ட நெறிமுறைகளுடன்
ஒன்றில் துவங்கி
இன்னொன்றுடன் சேர்ந்து
தானொன்றை ஈன்று
வென்று,கொன்று,தின்று
இரண்டிரண்டாகவோ
மும்மூன்றாகவோ
நாநான்கவோ
குறிகளை பிடித்துக்கொண்டு
எனக்கான
குழியில் மரணத்தை
வெட்டிக்கொண்டு
தனிமையுடன்
தேவர்களுடன் உரையாடுகிறேன்
நேர் அநேர் வழிகளை குறித்து.
சூரியனின் சுழற்ச்சியும்
சந்திரனின் உதயமும்
நெருப்பிலிருந்து உருவான
சாத்தானின் துயரமான
தீமையுடையதாக்கும் மேகங்களின்
நடுவிலிருந்து
காயங்களின் வலிகளுக்கு
அமைதியை எட்டிப்பார்க்கும்
துயரசம்பவங்களின் மொத்த
வடிவமான நான்
விலங்குடைய பூட்டுகளை
அதிகரிக்க தேவையான
நம்பிக்கையின்
மழை கண்களுடன்
தருவாயறிந்து கண்களின்
உறுத்தல் ஈரமான போதுதான்
மயக்கமான ஏழுவானங்களின்
நடுவில்
புகைப்போலொரு நீ
மரணகுழியில் வெட்டியெடுத்த
மண்துகள்கள் பரவி
ஏழுவானங்களின் கண்களை மறைக்கிறது
அமைதி பரப்பில் காலூன்றி நிற்கும்
என் கால்களில்
தூசிகளின் பொடிக்கூட்டம்
மேகங்களின் முனையை செதுக்கிய
வர்ண பிரவாகம்
செந்நிறமாய்
மண்துகளில் ஜொலிக்கும்
குழியை வெட்ட வெட்ட
அதன் ஆழம்
எல்லாவற்றையும் தாண்டிப்போகிறது
ஆழத்தில் வீற்றிருக்கும்
இருமையின் அடர்த்தியையும்
கடந்து.
எச்.முஜீப் ரஹ்மான்
mujeebu2000@yahoo.co.in
- கடிதம் – ஆங்கிலம்
- உண்மையின் ஊர்வலங்கள்.. -1
- அவுஸ்திரேலியாவில் தமிழ் போதனாமொழி -மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமித்த எழுத்தாளர் விழா -“ உயிர்ப்பு” நூல் வெளியீடு
- நீதிக்குத் தவித்த நெஞ்சம் – டி.வி.ஈச்சரவாரியாரின் ‘ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள் ‘
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள்-3
- பயணக்கிறக்கம் (Jet lag)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 11 சிஷெல்ஸின் சில முக்கிய தீவுகள்
- பழையத் துறவியும் ஜானி வாக்கரும் !
- விவாதம்:சூபிசம் – வகாபிசம் -உள்ளும் புறமும்
- புனித முகமூடிகள்
- உயிர்மெய் – பெண்கள் காலாண்டிதழ்
- தகவல் பிழைக்கு வருந்துகிறேன்
- பின் நவீன இசை : ஒரு திருப்புமுனை
- கலைச்செல்வன் ஓராண்டு நினைவொட்டிய நாள் – 5 மார்ச் 2006
- மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்
- புலம்பெயர் வாழ்வு (1)
- துக்ளக்கில் வெளிவந்த மலர் மன்னன் கட்டுரையும், கிறிஸ்துவர்கள் விநியோகித்த துண்டுப்பிரசுரமும்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘
- செலாவணியாகாத நாணயங்களைத் திரும்பப் பெறுகிறேன்
- மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2
- இரு கவிதைகள்
- கவிதைகள்
- கீதாஞ்சலி (62) உனை நாடிச் செல்வது! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- வரலாற்றை எழுதுவதை முன்வைத்து
- பூவினும் மெல்லியது…
- பார்வைகள்
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம், பகுதி மூன்று)
- எட்டாயிரம் தலைமுறை
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 9
- வர்க்க பயம்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் மூன்று: நல்லூர் ராஜதானி: வரலாற்றுத் தகவல்கள்!
- காந்தம் போல் எல்லோரையும் கவர்ந்தவர் கோல்வல்கர்
- முஹம்மது நபி(ஸல்) என்ன செய்திருப்பார்கள் ? ( ஆங்கிலத்தில்: இப்ராஹீம் ஹூப்பர் )
- தீக்குளித்து மாண்ட 8000 நகரத்தார் குடும்பங்கள்
- ஹர்ஷன், அவுரங்கசீப், ஐயா வைகுண்டர் மற்றும் விவேகானந்தர் பாறை நினைவாலயத்திற்கு திமுகவின் பங்கு
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-10) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- சில கதைகளும், உண்மைகளும்
- எடின்பரோ குறிப்புகள் – 9
- கவிதைகள்
- கவிதைகள்
- ஒரு பாசத்தின் பாடல்
- பெரியபுராணம் – 77 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- அல்லாவுடனான உரையாடல்
- அருவி
- தியானம் கலைத்தல்…
- நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் கோட்பாடுகள் [100 Years of Einstein ‘s Theories]