ஸி. செளாிராஜன்
1. ஆடு
ஆடு
நடமாடும் ஆயிரம் ரூபா நோட்டு
மார்கழிமாதக் காலைப் பொழுதின்
இளவெயிலில்
கண்மூடித் தவம் செய்து கொண்டிருந்தது
மெளன ஜீவிதம் குறித்துக்
கடவுளிடம் புகாரா ? நன்றி தொிவிக்கிறதா ?
அதைப் பார்த்த என்னை
அதுவும் உற்றுப் பார்த்தது
கரையும் மெளனத்தில்
‘இறந்தும் நான்குபேர் பசி போக்குவேன்’
என்ற பெருமிதம்
சொல்லால்
செயலால்
யாருக்கும் தீங்கு செய்யாத
தூய்மையை ஊருக்குச் சொல்கிறதோ
மெல்லிய வால் ஆட்டுதல் ?
விட்டமாய் அமைந்த கோடு
இருவிழிகளிலும் எத்தனை கேள்விகளை முன்வைக்கிறது ?
மனிதர்கள் தந்த முட்டாள் பட்டத்தை
அலட்சியம் செய்து விட்டு
மெல்ல நகா;ந்தது அந்த ஞானப் பொக்கிஷம்.!
2. நாளை
நாளை நம் அருகில்தான் இருக்கிறது
அது முற்றிலும் திறந்து கிடக்கவில்லை
மூடிய பகுதியை
நாம் அறிய செய்யும் முயற்சிகள் சில
எஃகுச் சுவாில் முட்டி மோதி
உடைந்து போகின்றன.
ஆனாலும் நாளை
நம் அருகில்தான் இருக்கிறது
காலை நண்பகல்
மாலை இரவு என
அதன் கரணைகளின்
இடைக் கோடுகள்
இயல்பாய் நழுவுகின்றன
இன்று போலவே நாளையும்
தெளிவும் மர்மமும் ஆன
இந்தப் பின்னல்
ஒவ்வொருவருக்கும் ஒன்றை
வித்தியாசமாய்ச் சொல்லிக் கரையும்
வழக்கம் போல்
தாவரங்களும் விலங்குகளும்
மனிதனின் ஆறாவது அறிவை
எண்ணிச் சிாிக்கும் – அழும்
வெளிச்சத்தைத் துரத்தும் இருளும்
இருளைத் துரத்தும் வெளிச்சமுமாக
நாளையும் இருக்கும்
அடுத்த நாளைப் போலவே….
—-
srirangamsourirajan@yahoo.co.in
- உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல் – நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல் ‘
- நனையத்துணியும் பூனைகள்
- அமைதியுறுவாய்
- அடுத்தவன் மனைவியை கவர்வதெப்படி ?
- வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூள்கள் ஆய்வு -2 (Stardust Program: Comet ‘s Coma Sample Analysis)
- சி. கனகசபாபதி நினைவரங்கு
- நான் கண்ட சிஷெல்ஸ் -8. நீதித் துறையும் மற்றவையும்
- குறளும் பரிமேலழகர் உரையும்
- ஜெயந்தி சங்கரின் மூன்று நூல்கள் வெளியீடு : ஒரு பார்வையாளனின் பார்வை
- அந்த நாள்
- நடிகர்திலகம் ‘சிவாஜி ‘யும் ரஜினியின் ‘சிவாஜி ‘யும்
- சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)
- தவமாய் தவமிருந்து
- கடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்
- பிளவுண்ட இந்து சமூகம்… எதிர்வினை
- கடிதம்
- ஜோர்ஜ் எல். ஹார்ட்டுக்கு இயல் விருது
- ஒரு திருத்தம்
- விவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்
- காசாம்பு
- எ ரு து ( மூலம் : யே ஷெங்டவோ(சீனா))
- ப்ளூஸ்(1) பாடல்களுக்கான நேரம்.* (மூலம் : தொனினோ பெனக்கிஸ்ட்டா (Tonino BENACQUISTA))
- காதல்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 6
- மதமாற்றம் எனும் செயல் குறித்து
- அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ?
- அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ? – 2
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-7) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- யூத மெஸையாக்கள் (Messiahs)
- மார்க்கோ போலோ பயணக் குறிப்புகளிலிருந்து.
- ஆப்பிள் பெண்ணுள் எாியும் நிலவுகள்–(1) (பாப்லோ நெருடாவின் கவிதை தமிழாக்கம்)
- மின்சாரப்பூக்கள்…
- ஸி. செளாிராஜன் கவிதைகள்
- சாதனை
- கீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )