ப.வி.ஸ்ரீரங்கன்
கைகளை நீட்டியபடி வா
அவையெம்மைச் சூடாக்கும்
உன் தலையை விரல் நகங்களுக்குள் திணித்துவிடு
உன் நீண்ட நினைவுகளை
கபாலத்துள் போட்டு வை
கைகளை நீட்டி வா
கைகளோடு கைகள் உரசும்போது
கலைந்துவிடும் நம் காழ்புணர்வுகள்
பூக்களின் வாசம்
இதயங்களுக்குள்ளும் உதிக்கும்
உன் செவிகளுடாக நானும்
என் செவிகளுடாய் நீயும் உலகின் நித்தியமான ஓங்காரயொலியைக் கேட்பது உறுதி
உன் இதழ்களோடு முத்தமிடும் என் உலர்ந்த மடல்
உரசிக்கொள்ளும் நொடியே
விடியலின் கட்டியக் காரன்
உன் இதழசைத்து நான் பேசுவேன்
நல்லிணக்கம் உனக்கு மட்டுமல்ல எனக்கும்தாம்
ஒரு பூனையின் பாச்சலுக்குள் முடங்கிவிட்ட இந்தப் பிரபஞ்சம்
இதற்குள் நீ-நான்,அது-இது ?
அம்புக்குறியாய் நீ
நீட்டிடும் ஆட்காட்டி விரல் மடிவதற்குள்
உலகத்தின் முடிவு நெருங்கி விடும்
சுடலையின் சுவர்கள்
பூனையைக் குற்றக் கூண்டில் ஏத்துகிறது
நிழல்களின் கரும் விரல்களால் மரணத்தையெண்ணியபடி
கைகளை நீட்டி வா
இதயத்துள் கூடிட்டு
கால் மடக்கி
கண்ணயர்வோம் ;
அனைத்தையும் மறந்து
குலைதலும் கூடுவதும
கூடுவதும் விலகுவதும்
உயிர்ப்பினது உறவுதாம்
உன் விழித்தடத்தில் உருளும் நீர் குமிழ் வெடிப்புள்
அமிழ்ந்தது ‘நான் ‘
கைகளை நீட்டி வா
மழலை மலரால்
இதயங்களை ஒத்திக்கொள்வோம்.
05.04.2005 -ப.வி.ஸ்ரீரங்கன்
- விம்பம் – குறும்படவிழா
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II
- தெளிவு
- சுவாசம் தரும் மராத்தியத் திரைப்பட உலகம்
- கவிஞர். எஸ்.வைதீஸ்வரனின் 70வது வயது நிறைவை ஒட்டி சென்னையில் நடந்தேறிய சிறப்பு இலக்கியக் கூட்டம்….
- எழுத்தில் ஒளிரும் பெருஞ்சுடர்
- 24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005
- திறந்திடு சீஸேம்!
- கேள்வி-பதில்
- அறிவுஜீவிகளின் குஷ்பி(வி)சம்.
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க ஆலயங்கள் -4 (The Great Abu Simbel Temples of Egypt)
- நண்பர் சுரா அவர்களுக்கு
- கைகளை நீட்டி வா!
- பெரியபுராணம் – 62
- கற்புச் சொல்லும் ஆண்!
- இதயம் முளைக்கும் ?
- புதுமையும்,பெண்ணியமும்!
- இலையுதிர் காலம்
- அலறியின் மூன்று கவிதைகள்
- காலம்
- கவிதைகள்
- பூவக பூலோக வாழ்க்கை ! (Earth Life in Florida)
- ஆயிரத்து முன்னூறு ரூபாய்
- பால்வீதி
- 4: 03
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து)
- என் புருஷன் எனக்கு மட்டும்
- கண்காணிப்பு சமுதாயம்
- அமெரிக்க தகவல் மையத்திற்கு ஒரு ‘ஸி.ஐ.ஏ. ஏஜெண்ட் ‘(!) எழுதிய கடிதம்
- தொழிற்றுறை விரிவும்,மனிதவதையும்!
- தேசியப் பொருளாதாரம்
- பெண்ணீயம் என்பது
- மழலைச்சொல் கேளாதவர்
- புத்தக அறிமுகம் – பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல்
- ஒரு கடல் நீரூற்றி
- கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை
- ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு
- தீயில் கரையத்தானே
- சாவி ? ? ?
- தீயில் கரையத்தானே
- கீதாஞ்சலி (46) – வாசல் முன் நீ வந்தாய்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- இதயம் முளைக்கும் ?