சொல்வதெப்படியோ

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

என் சுவாமிநாதன்


அருகே அருகே வருகிறாய் நீ
அன்புடன் உன்னை விலக்கி நகருகிறேன் நான்

இதழோடு இதழ் பதிக்க வருகிறாய்
இதற்கேன் இப்போ அவசரம் என்கிறேன் நான்

காதோடு வந்து கிசுகிசுக்கிறாய்
காதில் விழாதது போல இருக்கிறேன்

கண்ணால் சேதி பல சொல்கிறாய்
கண்மூடி காண மறுக்கிறேன்

மூக்கருகே முகம் பதிக்கவருகிறாய்
மூச்சடக்கும் ஞானிபோல் மோனத்தவம் செய்கிறேன்

வாய் திறந்து பேசச்சொல்கிறாய்
வாயடைத்துக் கிடக்கிறேன்

எழுதிக் காட்டச் சொல்கிறாய்
எழுத்தறியாதது போல் நடிக்கிறேன்

சிரித்தே சிறையிலடைப்பதேன் என்று வினவுகிறாய்
சிரித்து சிரித்து மழுப்புகிறேன்

மனத்திலுள்ளதச் சொன்னால்
மறுபடியும் என்னிடம் வருவாயோ
மாறாத அன்புடன் இருப்பாயோ
மாற்றிவிட்டு மற்றோர் உறவு காண்பாயோ ?
துணிந்து சொல்லிடத் துணிவில்லையே ?ி
தாலிகட்டினால் தன்னால் வருமோ துணிவு

ஆதலின் அருமைக் காதல !
நேரில் சொல்லத் துணிவில்லாமல்
எழுதிக் காட்டவும் அஞ்சி
இளித்து சாடையிலேயே காட்டி
ஒளித்ததை மனத்திலேயே கேட்டுக் கொள்கிறேன்
‘குளோசப் இன்னும் வாங்கலியா ‘

==============
nswaminathan@socal.rr.com

Series Navigation

டாக்டர் என் சுவாமிநாதன்

டாக்டர் என் சுவாமிநாதன்