யாரடியோ ?

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

அனந்த்


யாரும் எண்ணிப் பார்க்காத

அழகைக் கூட்டி அந்தியினை

அழித்த ழித்தே எழுதுகிற

அந்தக் கலைஞன் யாரடியோ ?

சேரும் முகிலாம் மங்கையவள்

செறிவில் மகிழ்ந்து அவளருகே

சென்று மறைந்த நிலவினைப்பின்

திரும்பத் தருவோன் யாரடியோ ?

ஊரும் உலகும் உவகையிலே

ஊறித் திளைக்க வீழ்ந்தமழை

உடன்நின் றதன்பின் தொடுவானில்

ஒளிவில் வரைவோன் யாரடியோ ?

பாரும் அண்டம் பலப்பலவும்

படைத்துக் காத்துப் பின்னழித்துப்

பார்த்துப் பார்த்து விளையாடும்

பரமன் அவனே அவனேதான்!

————————————————————————————————————————-
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்