மனிதனாக வாழ்வோம்

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

சத்தி சக்திதாசன்


விளக்கைச் சுற்றிப் பறக்கும்
விட்டில் பூச்சிகள் காணீர்
விடியும் முன்னே மறையுமவை வாழ்க்கை
கண்ணைப் பறிக்கும் வண்ண அழகாம்
கவர்ச்சி கொண்ட பட்டுப் பூச்சி பாரீர்
வாழ்வோ ஓர் எட்டு நாட்கள் தான்
ஒவ்வோர் உயிருக்கும் இறைவன் உலகில்
ஓதி வைத்தது அளவான வாழ்க்கையாம்
சிறியதோர் வாழ்க்கையிலும் அவைகள்
சிறப்பாய் அடையும் வாழ்வின் இலக்குகளை
அறிவின் சிகரமாம் , பண்பின் குன்றாம்
ஆயிரம் பெருமை பேசிக்கொள்ளும் மனிதர் கேளீர்
எவற்றை இலக்காய் கொண்டோம் அன்றி
எவர்க்கு பயனாய் வாழ்ந்தோம்
சாம்பலாய் மாறும்வரை இவ்வுலகில் ஓர்
சரியான மனிதனாய் வாழ்வோம் வாரீர்

***
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்