வளர்ந்தேன்
ஆதர்ஷ் ராவ்
அடித்தவனுடன் அடுத்த கணமே குலாவினேன்
திட்டியவை மறந்து மழலையில் கொஞ்சினேன்
கொஞ்சமே அடித்த அம்மாவிடம் சிணுங்கி
நொடிநேரக் கொஞ்சலில் காலைக் கட்டினேன்
கோலி திருடிய நண்பனை ‘போறது போ ‘ வென
மன்னித்து கையிலிரு கோலி கொடுத்தேன்
உன் பேச்சு ‘கா ‘ வெனக் கூறிவிட்டு மாங்காய்க்கென
பழம்விட்டேன்; தின்றவுடன் ‘கா ‘ வென்றேன்
வளரவளர அத்தனையும் தொலைத்து முகமூடிமேல்
முகமூடி அணிந்து இயல்பை இழந்தேன்
நினைத்தாலும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது
வேலைக்காரி எடுத்துவிட்ட பத்து ரூபாயை
‘பணத்துக்காக இல்லைங்க திருட்டு இல்லையா ? ‘ யென
எனக்கே அருவெறுப்பான வாதங்கள் பண்ணினேன்
நேற்றென்னைப் பார்த்தும் முகம்திருப்பிய அண்டை
வீட்டு ராகவனுக்கு பதிலடியாய் இன்றுநான் திருப்பினேன்
மெளனமாய் தியானித்தபின் ‘இயல்பு ‘க்கு மாறினேன்
தெருவில் குழந்தைக்கு இணையாய் ஓடினேன்
கோலியுடன் பம்பரமுமாய் கோதாவில் இறங்கினேன்
ஊரோடு சேர்ந்து என்குடும்பமும் ‘பைத்தியம் ‘ என்றது!
itsaadharsh@hotmail.com
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு
- கடிதங்கள்
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- 50 ரூபாய்க்கு சாமி
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- தாழ் திறவாய், எம்பாவாய்!
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- ஒருசொல் உயிரில்….
- சொறிதல்…
- ஞாபகம்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- பறவைப்பாதம் 3
- சித்திரமே என்னை சிதைக்காதே
- ஒற்றைச் சிறகு
- இந்தி சினிமாவின் பத்துவிதிகள்
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- சத்துள்ள பச்சடி (ராய்த்தா)
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- ‘காலையும் மாலையும் ‘
- மனம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- இலக்கணக்குழப்பம்
- வளர்ந்தேன்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- நான்