நான்கு கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

விக்ரமாதித்யன்


ஏன்
எண்ணென்றால்
கணக்கு
எழுத்தெனில்
கவிதை
எண்ணுக்குப் பிறகுதான்
எழுத்தை வைத்திருக்கின்றார்.

**

நிச்சயமற்ற
இருப்பு
நிச்சயமற்ற
வாழ்வு
நிச்சயமற்ற
எழுத்து
நிச்சயிக்கப்பெற்ற
மரணத்துள்.

**

படிக்காது
கெட்டவர்கள் யாருமில்லை
படித்து
கெட்டவர்கள்தாம் பாவம்.

**

நிறுத்த
தெரியாது
தொடங்கத்தான்
முடியும்

**

Series Navigation

விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன்