பூசை வைக்கும் தொழில் – உரைவெண்பா
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்
தேவ ஊழியம். நல்ல மேய்ப்பனின் மந்தையிலிருந்து ஆடுகள் வழிதப்பாமல் நல்வழி காட்டிப் போவது. எல்லாம் சரிதான். எங்களையும் மாதச் சம்பளக்காரர்கள் என்று அறிவித்துப் போடுங்களேன்.
இங்கிலாந்தில் பாதிரியார்கள் இப்படிக் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். புராட்டஸ்ட்ண்ட் கிறிஸ்துவ மதம் நான்கு நூறு வருடமாக அரசாங்க மதமாக இருக்கும் இங்கே, இந்தக் கோரிக்கையை விடுத்திருப்பவர்கள் கத்தோலிக்க பாதிரியார்கள். இவர்கள் கூடவே பாப்டிஸ்ட், செவண்த் டே அட்வெண்டிஸ்ட், பெந்தகொஸ்தே என்று இதர குருக்களும் போராட்டக் கொடி உயர்த்தி இருக்கிறார்கள்.
பின்னே என்ன ? இந்தப் பங்குத் தந்தைகளுக்கு மேலே அதிகாரம் செலுத்தும் பிஷப்புகளின் தொல்லை தாங்க முடியலை. அதிக நேரம் வேலை பார்க்கச் சொல்லி உயிரை வாங்குகிறார்கள். செய்கிற வேலைக்கு ஏகப்பட்ட நொட்டச் சொல். பிஷப் என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போட வேண்டி இருக்கிறது. இல்லையா, பாதிரி உடையைப் பிடுங்கிக் கொண்டு விரட்டி விடுவேன் என்று மிரட்டுகிறார்கள் (defrocking of the priest என்பதை அதிரடியாக மொழிபெயர்க்க முடியாது).
பாதிரி வேலையை விட்டுப் போகச் சொன்னால், வேறு என்ன வேலை செய்து காலத்தை ஓட்ட முடியும் ? மடாலயம் கொடுத்த வீடு இல்லாவிட்டால் எங்கே போய் ஒண்டுவது ?
இதையெல்லாம் யோசித்து யோசித்து இத்தனை நாள் பொறுமை காத்த பாதிரியார்கள் பொங்கி எழுந்து விட்டார்கள்.
அமிக்கஸ் என்று தொழிற்சங்கம் அமைத்து, ‘பாதிரித் தொழிலையும் ‘ தொழில்துறைச் சட்டத்துக்குள் (Employment Relations Act 1999) கொண்டு வரவேண்டும் என்று போராட்டம். தொழில்துறை அமைச்சரைச் சங்க நிர்வாகிகள் சந்தித்துக் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்கள். போராட்டம் என்று இன்னும் தெருவில் இறங்கவில்லை.
சட்டம் என்ன சொல்கிறது ? தொழிற்துறைச் சட்டப்படி, இந்த மண்ணில் இருக்கும் ஒரு நிர்வாகிக்கும் அவருக்குக் கீழே வேலை பார்க்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் இடையே இரண்டு பேரும் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தம் இருந்தால்தான் அவர்களைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியுமாம். மடாலயத்தில் வீடு கொடுத்திருக்கிறார்கள் என்பதை எல்லாம் வைத்துப் பாதிரியாரைத் தொழிலாளர் என்று சொல்ல முடியாது. (There is no contract that the priest in question will serve a terrestrial employer.).
கடவுள் எங்கும் இருக்கிறார் என்பது எல்லாம் சரிதான். ஆனால் சட்டப்படி அவர் terrestrial employer இல்லையாம்!
‘பாவத்தின் சம்பளம் ‘ பாதியில் வ்ிட்டவர்
‘மீதத்தை நாளைக்கு ஓதலாம் – வேகமாப்
போகணும் போராட்டம் போதலை ஊதியம் ‘
வாகனம் பாதிரியே றுவார்.
அன்புடன்,
மத்தளராயன் (என்னும்) இரா.முருகன்
- முரண்பாடு
- கனவு நதியும் நிஜ மீன்களும்
- ஆடம் ஸ்ட்ரீட் அழகி
- தேவதை
- 3-D
- அது ஒரு மழை நேர இரவு..!
- நேர்த்திக்கடன்….
- பூர்வீகம் இந்திரலோகம், பேரு தேவகுமாரன்
- சேவியரும் குஜராத்தின் ஆதிவாசிகளும்
- போருக்குப் பின் அமைதி
- நினைத்தேன்…சொல்கிறேன்…தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி…
- கடிதங்கள்
- சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களிடம் கருத்துக்கணிப்புகள்
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 12 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- மானுடம்
- இதுவும் வேறாக
- பகட்டு
- ‘உயிரோடு தமிழ்கூடும் போது ‘
- மழைக்கால நினைவுகள்
- ஒவ்வாமை என்னும் எரிமலை (ஆதவனின் ‘ஒரு அறையில் இரண்டு மனிதர்கள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 49)
- ஓர் நாள்
- தீக்குள் விரலை வைத்தால்….
- இலக்கணம் மாறுதோ ?
- பூசை வைக்கும் தொழில் – உரைவெண்பா
- அறிவியல் துளிகள்-15
- கதிரியக்கச் சூழ்நிலையில் மனிதர் கவனமாய் வாழ முடியுமா ?
- நா.முத்துக்குமாரின் ‘குழந்தைகள் நிறைந்த வீடு ‘. – கவிதைப்புத்தக விமர்சனம்
- இந்த மனசு
- கசடதபற இதழ் தொகுப்பு by சா.கந்தசாமி – ஒரு பார்வை
- தப்பித்தலின் கணங்கள் -லியோ டால்ஸ்டாயின் அன்னா காினீனா குறித்து
- நாவலும் வாசிப்பும் – நூலின் முன்னுரை
- வாயு (குறுநாவல் -அத்தியாயம் இரண்டு )
- க்ரிக்கெட் கடவுள்
- காதலர் தினக் கும்மி
- இணைய(ா) நட்பு!
- அணைப்பு