கவலையுள்ள மனிதன்!

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

வ.ந.கிாிதரன்


எனக்குச் சாியான கவலை.

எதற்கெடுத்தாலும்

எப்பொழுதும்

ஒரே கவலை தான்.

கவலைக்கொரு எல்லை

வேண்டாமா ?

என்ன செய்வது ?

குப்புறப் படுத்தால் பின்னால்

வானமே இடிந்து விழுத்து

விட்டாலென்ற கவலை.

அதற்காக மல்லாந்து படுக்கவா

முடிகிறது. முடிந்தால்

விழுகிற வானத்தைத்

தாங்குவதெப்படி என்கிற

கவலை.

யாருக்குத் தான் என் கவலை

புாியப் போகின்றதோ ?

சும்மாவா சொன்னார்கள்

அனுபவித்துப் பார்த்தால் தான்

தொியும்

அவரவர் கவலை அவரவருக்குப்

புாியுமென்று.

***
ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்