இன்னும் கொஞ்சம் வெண்பா

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue

மத்தளராயன்


பகல் நகரம்

படுத்து நகர எடுத்துச் சுமப்போர்
விடுத்துச் சிதறும் மலரே – அடுத்து
நடக்கும் பொலீசு உடுப்பில் படியும்;
கடக்கும் மெதுவே தெரு.

இரவு நகரம்

அடைத்த கதவுகள் அங்கங்கு தட்டிக்
கடைத்தெரு ஓரம் களைத்து நடக்கிறான்.
கேட்பாள் புதுமனைவி நாட்டில் எனவுயரும்
நேப்பாளி கூர்க்கா விசில்.

‘அச் ‘சனை

நச்சத் திரமென்ன ? கேட்டார் தெரியலை.
மிச்சம் அவர்தான் நிரப்பியே சொச்சம்
அடுக்கிலே தும்மியம் பாளை யழைப்பார்
க்ஷடுப்பிலே செல்ஃபோன் மணி.

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்