புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 4 சென்ற வாரத் தொடர்ச்சி….

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

கே.ஜே.ரமேஷ்


லியூவும் டெங்கும் சேர்ந்து மா சே துங்கை அதிகாரத்திலிருந்து விலக்கி விட்டு அவரைப் பெயருக்காக ஒரு பொம்மைத் தலைவராக வைத்திருக்கத் திட்டம் தீட்டினார்கள். இதை மோப்பம் பிடித்த மா அந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கான வழிமுறைகளை ராய்ந்தபோது அவருக்குக் கிடைத்த யுதம் தான் சமூகக் கல்வித் திட்டம் (Social Education Movement). 1963ம் ண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் பள்ளிக் குழந்தைகளைக் குறிவைத்தே தொடங்கப்பட்ட ஒன்றாகும். அதனால் அத்திட்டம் அரசியலில் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் இத்திட்டத்தால் ஒரு புதிய தலைமுறையே தனக்கு தரவாக வளரப்போவதை மா உணர்ந்திருந்தார். அதே நேரம் லியூவுக்கும் டெங்குக்கும் எதிராக வர்க்கப் போராட்டமாக ரம்பித்த ஒன்று பின்னர் ‘நான்கு துப்புரவு இயக்கமாக ‘ (Four Cleanups Movement) மாறியது. அத்திட்டத்தின் நோக்கம் அரசியல், பொருளாதாரம், எண்ணங்கள் மற்றும் அமைப்பு கிய நான்கையும் தூய்மைப்படுத்துவதே. 1965ம் ண்டு மா CCP கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவந்து விட்டார். உடனடியாகத் தனக்கு எதிரானவர்களை இனம் கண்டு ஒழிக்கும் வேலை ரம்பமாயிற்று. வளர்ந்து வரும் அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்து CCPயை மீட்பதற்கு இடைவிடாத புரட்சியால் மட்டுமே முடியும் என்று மா நம்பியதன் விளைவு டெங் •ஸியோபெங் போன்றவர்கள் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

1966ம் ண்டு கஸ்ட் மாதம் 8ம் நாள் CCPயின் மத்திய கமிட்டியில் ‘பாட்டாளி மக்களின் கலாச்சாரப் புரட்சி பற்றிய முடிவுகள் ‘ என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் கலாச்சாரப் புரட்சி பற்றிய அரசாங்கத்தின் பூரண தரவு நிலைப்பாட்டை சந்தேகத்திற்கிடமின்றி சொல்லியிருந்தார்கள். கலாச்சாரப் புரட்சியின் நோக்கம் ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் ஒழிப்பது என்று கூறியபோதிலும் அதன் உண்மையான நோக்கம் அறிவாளிகள், மேல்தட்டு வர்க்கத்தினர், மாவோவுக்கு எதிரானவர்கள் கியோரைத் தீர்த்துக் கட்டுவது தான். இந்த வேலையைச் செய்ய தன்னைக் கடவுளாக மதிக்கும் ஒரு தொண்டர் படை தேவை என்பதை மா உணர்ந்தார். அதன் விளைவாக உருவாக்கப்பட்டது தான் ‘Red Guards ‘ என்றழைக்கப்பட்ட சிகப்புப் பாதுகாவற் படை (இனி இப்படையை இந்த கட்டுரையில் சிகப்புப் படை என்றே குறிப்பிடுவோம்). மில்லியன் கணக்கில் பள்ளி மாணவர்களையும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களையும் அந்த சிகப்புப் படையில் சேர வைத்து அவர்களுக்கு மிதமிஞ்சிய அதிகாரங்களையும் வழங்கினார். மா சே துங்கிற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அவர்களைத் தாக்கும் பணியை இச்சிறுவர்கள் செவ்வனே முடித்தனர். இங்கு தான் மாவின் நான்காவது மனைவியான ஜியாங் சிங் தனது திருவிளையாடல்களைத் தொடங்கினார். சிகப்புப் படையினர் ஜியாங் சிங்கின் தலைமையில் தான் பல அராஜகச் செயல்களைச் செய்தனர். எல்லா பள்ளிகளும் பல்கலைக் கழகங்களும் மூடப்பட்டன. பொறியியல் வல்லுனர்கள், விஞ்ஞானிகள், மேலாளர்கள், தொழில்நுட்பத் திறன் படைத்த தொழிலாளர்கள் என்று எந்த பேதமுமின்றி எல்லோரும் உடல் உழைப்பை அளிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். தொழிற்சாலைகளின் நிர்வாகம் எந்த விதப் பயிற்சியோ அனுபவமோ இல்லாத புரட்சிக்காரர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனால் அந்த வருடம் தொழிற் சார்ந்த உற்பத்தி பதினான்கு விழுக்காடு குறைந்துவிட்டது. 1966 தொடங்கி 1969 வரை சிகப்புப் படை சீனாவின் எல்லாப் பகுதிகளிலும் தனது திக்கத்தைச் செலுத்தத் தொடங்கிவிட்டது. ரம்பத்தில் கம்யூனிஸத்தைப் பற்றிய கையேடுகளை வினியோகித்தும், கம்யூனிஸப் பிரச்சாரத்தில் ஈடுபட்டும், புரட்சிக்கு எதிரானவர்களை இனம் கண்டு அவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு பெயர்ப்பலகைகளில் ஒட்டுவதுமாக இருந்த சிகப்புப் படையினர் மா சே துங்கின் தரவோடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டனர். பின்னர் புரட்சிக்கு எதிரானவர்களின் வீடு புகுந்து கொள்ளையடித்தல், அவர்களை சித்திரவதை செய்தல், அவர்களின் உறவினர்களைக் கொல்லுதல் என்று படிப்படியாகத் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கி எதிரிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றுவது வரை சட்டத்தைக் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டனர். படித்த மேல்தட்டு வர்க்கத்தினரை விசாரணயின்றி கொல்வதும், சட்டங்களை மீறுவதும் சாதாரண நிகழ்ச்சிகளாகிவிட்டது. இந்த அக்கிரமங்கள் போதாதென்று கோவில்களையும், மசூதிகளையும், தேவாலயங்களையும் தீ வைத்துக் கொளுத்தினர். பழம்பெருமை வாய்ந்த ஓவியங்கள், சிற்பங்கள், கலைப்பொருட்கள், புத்தகங்கள் என்று எது பழமையாக இருந்தாலும் அவற்றை அழித்தனர். பழைய கட்டிடங்களையும் விட்டு வைக்கவில்லை. புத்த பிட்சுக்கள், கன்னியாஸ்த்ரீகள், மதப்பிரசாரகர்கள் கியவர்களையும் சித்திரவதை செய்து தொழிலாளர் முகாமுக்கு அனுப்பினார்கள் அல்லது இந்த உலகை விட்டே அனுப்பினார்கள். சிகப்புப் படையில் இருந்த அந்த பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி சிரியர்களையே துன்புறுத்தி, பணம் பறித்து மிகவும் இழிவு படுத்தினார்கள். நடப்பதைக் கண்டு தாங்க முடியாத பலருக்கு சித்தப்பிரமை பிடிக்க, இன்னும் பலர் தற்கொலையும் செய்து கொண்டார்கள். அதிபராக இருந்த லியூ ஷெளகி சிறையில் அடைக்கப்பட்டார். பட்டினியால் அவர் 1969ம் ண்டு சிறையிலேயே இறக்க நேரிட்டது. டெங் •ஸியோபெங்கும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்ய அனுப்பப்பட்டார். பல காலம் கழித்து சூ என்லாய் டெங்கை மறுபடியும் அரசியலுக்கு அழைத்து வந்தார்.

இந்தளவுக்கு அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்ட சிகப்புப் படையினரை மா பெரிதும் பாராட்டினார். மா தனது அறிக்கை ஒன்றில் காவற் துறையினர் சிகப்புப் படையினரை எந்த கேள்வியும் கேட்கக் கூடாது என்றும் அவர்கள் பணியைத் தடுக்கும் விதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டார். மீறி நடந்த காவற் துறையினரை புரட்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரைக்குத்தி தீர்த்துக் கட்டினார்கள். PLA என்ற ராணுவம் இருந்ததோ, சீனா பிழைத்ததோ. கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் நடந்த அக்கிரமங்களால் அரசாங்கமும் CCPயும் நிலைக்குலைந்து போகாமல் இருந்ததற்கு ஒரே காரணம் PLAயின் தலையீடு தான்.

ஒரு சினிமா நடிகையாக இருந்த ஜியாங் சிங் (மா சே துங்கின் நான்காவது மனைவி) அரசியல் பக்கமே தலை வைத்துப் படுத்ததில்லை. னால் கலாச்சாரப் புரட்சிக்காக சிகப்புப் படையைத் தலைமை தாங்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் அதிகாரப்பலமும் சேர்ந்து கொண்டு அவரை நிஜ வாழ்க்கையில் வில்லியாக்கிவிட்டது. தன்னுடன் சாங் சுங்கியாவ், யாவ் வென்யுவான் மற்றும் வாங் ஹோங்வென் கியோரையும் சேர்த்துக்கொண்டு கலச்சாரப் புரட்சியை வழி நடத்திச் சென்றவர் மா சே துங் இறந்த போது கட்சியின் தலைமைப் பதவியைக் கைப்பற்ற சதி செய்ததாகக் கூறப்படுகிறது. மா இறந்த பிறகு கைது செய்யப்பட்ட இந்நால்வரையும் ‘நான்கு கில்லாடிகள் ‘ (Gang of Four) என்று குறிப்பிட்டனர்.

1968ம் ண்டு சோவியத் யூனியனுடனான உறவு மேலும் சீர்கெட்டுப் போனது. அந்த உறவை மேம்படுத்த புரட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் கட்டாயத்திற்கு மா உள்ளானார். மேலும் மா கலாச்சாரப் புரட்சியின் உபயோகங்களை மறுபரிசீலனை செய்ய முற்பட்டதன் விளைவு அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர உதவி செய்தது. சிகப்புப் படையின் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பல்கலைக் கழகங்கள் திறக்கப்பட்டன. திறன் மிக்க தொழிலாளிகளும் மற்றவர்களும் எங்கிருந்து அகற்றப்பட்டார்களோ அதே இடத்திற்குத் திரும்ப அனுப்பப்பட்டனர். சில முக்கியத் திட்டங்களில் அயல் நாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டன. 1969ம் ண்டு நடந்த CCPயின் 9வது தேசிய மாநாட்டில் மா சே துங் ஒப்பில்லாத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கலாச்சாரப் புரட்சி மேலும் முடக்கப் பட்டது. மாவின் தரவாளர்கள் முக்கியப் பதவிகளுக்கு நியமிக்கப் பட்டார்கள். மாவோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட லின் பியாவ் CCPயின் உதவி சேர்மனாகப் பதவியேற்றார். அவரையே மாவோவின் வாரிசாகவும் அறிவிக்கப்பட்டது.

புரட்சியை முடிவுக்குக் கொண்டு வர தீர்மானம் ஏற்பட்டாலும், ஜியாங் சிங்கின் தலைமையில் வன்முறை தொடர்ந்து கொண்டிருந்தது. கட்சிக்குள்ளே ஜியாங் சிங்கை தரிக்கும் தீவிரவாதப் பிரிவு ஒன்று கிளர்ந்தது. அந்த நேரத்தில் சூ என்லாய் தலைமையில் மிதவாதப் பிரிவு ஒன்று என்றும் இரு வேறு பிரிவுகளாகக் கட்சி பிளவுபட்டது. சூ என்லாய் கலாச்சாரப் புரட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பவில்லையே தவிர அதை அவர் ஒப்புக்கொள்ளவும் இல்லை. அதனால் மிதவாதப் போக்குள்ளவர்கள் அவரை தரிக்கத் தொடங்கினர். மாவோவிற்கும் வயதாகிக் கொண்டிருந்ததால் மூத்த தலைவர் என்ற அந்தஸ்த்தில் அரசுக்கு லோசனை கூறுவதுடன் நிறுத்திக் கொண்டார். மேலும் இந்த இரு பிரிவுகளுக்கும் ஒரு தூதுவர் போலவும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

1971ம் ண்டு மாவோவால் தேர்ந்தெடுக்கப்பட்ட லின் பியாவ் மாவோவுக்கு எதிரான சூழ்ச்சியில் இறங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார் என்றும் அதைத் தொடர்ந்து தான் கைது செய்யப்படுவோம் என்று உணர்ந்த லின் பியாவ் மங்கோலியாவிற்குத் தப்பிக்கும் பொருட்டு விமானம் ஏறினார் என்றும் கூறப்படுகிறது. அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி லின் பியாவ் மரணம் அடைந்தார். லின்னின் மரணத்திற்குப் பிறகு PLAவிம் கமாண்டர்கள் சீனா-சோவியத் யூனியன் எல்லை அபாயகரமான நிலையில் இருப்பதாகக் காரணம் காட்டி நாட்டின் சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்று முடிவெடுத்தனர். அது தான் தருணம் என்று சூ என்லாய் டெங் •ஸியோபெங்கை வரவழைத்து மீண்டும் அவரைக் கட்சித் தலைவராக க்கினார். அதைத் தொடர்ந்து கட்சிக்குள் மிதவாதப் பிரிவினரின் திக்கம் மெதுவாக உயர்ந்தது. அதன் பயனாக உலக நாடுகளின் தரவும் கிடைக்கப் பெற்ற CCP ஐ.நா சபையில் சீனாவுக்குரிய இடத்தை தாய்வானிடமிருந்து மீட்டது. மேலும் CCPயின் மிதவாதப் போக்கும் மாவோவின் சோவியத் யூனியன் மீதான சந்தேகமும் அமெரிக்கர்களுடனான சமரசத்திற்கு வழி வகுத்தது. இது 1972ம் ண்டு ரிச்சர்ட் நிக்ஸனின் விஜயத்தின் போது உறுதி பட்டது. அதே வருடம் ஜப்பானுடனும் ராஜதந்திர உறவு புதுப்பிக்கப்பட்டது.

ஜியாங் சிங்கின் பிரிவுக்கும் மிதவாதப் பிரிவுக்கும் இடையே இருந்து வந்த சண்டை 1976ம் ண்டு ஜனவரி மாதம் சூ என்லாய் இறந்த போது உச்சத்தை அடைந்தது. அந்த நான்கு கில்லாடிகளும் டெங்கிற்கு எதிராக நடத்திய ர்ப்பாட்டத்தை அதிகாரிகள் அடக்கி ஒடுக்கியது டெங்கிற்கு இருக்கும் தரவைத் தெளிவாகக் காட்டியது. இந்த அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த மா டெங்கைப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார். னால் அக்கோரிக்கையை உதாசீனப்படுத்திய கட்சியும் அரசும் மாவின் வயதைக் காரணம் காட்டி அவரை தனிமைப் படுத்தத் தொடங்கின. அதே ண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி மா சே துங் மாரடைப்பால் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து அக்டோபர் 6ம் தேதி நான்கு கில்லாடிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களை இழிவு படுத்தும் நோக்கத்துடனே நான்கு கில்லாடிகள் என்ற பெயரையும் சூட்டி, கலாச்சாரப் புரட்சியின் போது நடந்த அராஜகங்களில் அவர்களின் பங்கை தோலுரித்துக் காட்டினர். நாட்டு மக்கள் எல்லோருக்கும் இச்செய்தி போய்ச் சேரவேண்டும் என்று இதை ஒரு மாபெறும் இயக்கமாகவே செய்தனர். பின்பு 1981ம் ண்டு நடந்த ஒரு விசாரணையில் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து தண்டனையும் வழங்கினார்கள். ஜியாங் சிங்கிற்கும் சாங் சுங்கியாவிற்கும் மரண தண்டனை அளிக்கப்பட்டது. மற்ற இருவருக்கும் 20 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ஜியாங்கிற்கு வழங்கிய தண்டனையை இரண்டு வருடங்கள் வரை தள்ளிப் போடலாம் என்றும் தீர்ப்பாகியது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்பாகவே அது யுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பின்னர் 1991ம் ண்டு ஜியாங் சிங்கின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அவர் விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்பட்டு பத்து நாட்கள் கழித்து அவரது வீட்டிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது. னால் அவர் இறந்த சூழ்நிலையும் இறந்ததாகச் சொல்லப்பட்ட இடத்தைப் பற்றிய கருத்து வேறுபாடுகளும் அவர் இறந்த விதத்தைப் பற்றிய சந்தேகங்களைத் தூண்டுவதாகவே அமைந்து விட்டன.

கே.ஜே.ரமேஷ்

kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 3 சென்ற வாரத் தொடர்ச்சி….

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

கே.ஜே.ரமேஷ்


1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா ஜப்பான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியதும் இரண்டாம் உலகப்போருடன் இரண்டாம் சீன-ஜப்பானியப் போரும் ஒரு முடிவுக்கு வந்தது. இந்த இரண்டு போரிலும் பல மில்லியன் கணக்கான சீன மக்கள் மடிந்து போயினர். ஆனால் இவ்வளவு அழிவுக்குப் பிறகும், அரசியலில் ஈடுபட்ட சீன மக்கள் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. கோமிண்டாங்குக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்குமான உள்நாட்டுப் போர் மீண்டும் ஆரம்பமாகியது. இந்த முறை கம்யூனிஸ்ட்டுகளின் கை ஓங்கியிருக்கத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஜப்பானியர்களிடமிருந்து மீட்டிய நிலப்பரப்பும், சரணடைந்த ஜப்பானியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போர் ஆயுதங்களும் போர்த்தளவாடங்களும் ஆகும். மேலும் இப்போது கம்யூனிஸ்ட்டுகளின் ராணுவமும் 1 மில்லியனுக்கு மேல் வீரர்களைக் கொண்டிருந்தது. இருந்தும் கோமிண்டாங்கின் ராணுவம் அந்த நிலையிலும் கம்யூனிஸ்ட்டுகளை விடப் பெரியதாக இருந்தது. ஆனால் அவர்களின் அரசாங்கத்தில் தலைவிரித்தாடிய ஊழலும் அதைத் தொடர்ந்த நிச்சயமற்ற தன்மையும் அந்த ராணுவத்தின் பலத்தை வலுவிழக்கச் செய்தது. அமெரிக்கா ஒரு பக்கம் கோமிண்டாங்கிற்கு உதவிகளைத் தொடர்ந்த போதிலும், மறுபக்கம் சண்டையிடும் இரண்டு தரப்பினர்களை பேச்சுவார்த்தைக்கும் தூண்டியது. ஆனால் பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல், 1946ம் ஆண்டு இரு தரப்பினருக்கும் இடையில் முழு அளவிலான உள்நாட்டுப் போர் வெடித்தது. அந்த உள்நாட்டுப் போரில் சியாங்கின் போர்த் தலைவர்கள் ஒவ்வொருவராக கம்யூனிஸ்ட்டுகளிடம் சரணடையவும் கோமிண்டாங்கின் ராணுவம் தோல்வியைத் தழுவியது. 1949ம் ஆண்டு ஜனவரி மாதம் மாவின் கம்யூனிஸ்ட்டுகள் பெய்ஜிங்கை எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் கைப்பற்றினார்கள். சியாங்கும் ஆயிரக்கணக்கான அவரது வீரர்களும் தாய்வான் தீவிற்கு தப்பியோடினர். தப்பிப்பதற்கு முன் அரசு கஜானாவிலிருந்து சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் சுருட்டிக் கொண்டு போய்விட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு சென்று, தாய்பேய்யை (Taipei) சீனாவின் தற்காலிகத் தலை நகராக அறிவித்துக்கொண்டனர். அதன் பிண்ணனியாக இன்றளவும் சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையே சீரழிந்த உறவே நிலவி வருகிறது. உறவு மேம்படும் போல் இருந்த போதெல்லாம் பிரிவினைக்குத் தூண்டும் தாய்வான் அரசியல் வாதிகளால் நிலைமை மோசமாகிவிடும். பின்னர் சிலகாலம் கழித்து உறவில் முன்னேற்றம் தெரியவாரம்பிக்கும். அப்படிப்பட்ட ஒரு சமயம் தான் இது. தாய்வானின் தற்போதைய அதிபர் சென் சூ பியான் சீனாவுக்கு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாகச் சென்று வந்த பிறகு அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் சீனாவுக்குச் சென்றிருக்கிறார். இம்முறையாவது இருநாட்டு உறவில் ஏதாவது சமரசம் ஏற்படுகிறதா என்று பார்ப்போம்.

1949ம் வருடம் கோமிண்டாங் கட்சியினர் தாய்வானுக்குத் தப்பியோடியதைத் தொடர்ந்து அதே வருடம் அக்டோபர் முதல் தேதி நடந்த ஒரு நிகழ்ச்சியில் மா சே துங் அதிகாரப்பூர்வமாக சீன மக்கள் குடியரசை (People ‘s Republic of China – PRC) அறிவித்தார். அவர் தலைமையின் கீழ் CCP சீனா முழுவதையும் ஆளவாரம்பித்தது. அப்போது CCP சுமார் 4.5 மில்லியன் உறுப்பினர்களையும் அதில் 90 விழுக்காடு விவசாயிகளையும் கொண்ட ஒரு மாபெறும் கட்சியாகத் திகழ்ந்தது. மாவின் வலது கரமாக விளங்கிய சூ யென்லாயை அதிபராகக் கொண்ட அரசு மிதமான மறுமலர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களின் ஆதரவைப் பெற்றது. உலக நாடுகளின் அங்கீகாரத்தையும் பெற்ற சீன அரசு பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி, நிதி நிலைமையைச் சீராக்கி, போரில் பாழடைந்த தொழிற்சாலைகளையும் கட்டுமானத் தளங்களையும் சீர் செய்தது. அந்த வருட கடைசியில் மா தனது அதிகாரப்பூர்வமான முதல் பயணமாக சோவியத் யூனியனுக்குச் சென்றார். ஜோச•ப் ஸ்டாலினிடம் பேச்சு வார்த்தை நடத்தி நிதியுதவியும் ராணுவ உதவியும் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஆனால் 1950ம் ஆண்டு சீனா கொரிய தீபகற்பத்தின் விவகாரங்களில் எடுத்த முடிவுகளால் ஐக்கிய நாட்டுச் சபையின் அதிருப்திக்கும் அமெரிக்காவின் சீற்றத்திற்கும் உள்ளாயின. மா வட கொரியாவின் தலைவரான கிம் II சுங்கின் வேண்டுகோளுக்கிணங்கி வட கொரியாவையும் தென்கொரியாவையும் மீண்டும் ஒருங்கிணைக்கும் அவரது போர் முயற்சிக்கு ஆதரவு அளித்தார். அந்த வருடம் ஜூன் மாதம் 25ம் தேதி தொடங்கிய கொரியப் போர் 3 வருடங்கள் நீடித்தது. ஆனால் இறுதியில் ஒரு முடிவும் ஏற்படவில்லை. சுமார் 3 மில்லியன் மக்கள் மடிந்தது ஒன்றே அந்தப் போர் கண்ட பலனாகும். மேலும் அந்தக் கொரியப் போரில் சீனாவின் நேரடிப் பங்கும் 40 வருடகால திபேத்திய சுயாட்சியை முடிவுக்கு கொண்டுவந்த சீனாவின் திபேத் மீதான ஆக்கிரமிப்பும் உலக நாடுகளின் ஆதரவை சீனா இழக்கக் காரணமாயிற்று. 1951ம் ஆண்டு ஐக்கிய நாட்டுச் சபை சீனாவை ஒரு ஆக்கிரமிப்பாளர் என்று அறிவித்து உலக நாடுகள் சீனாவுக்கு போராயுதங்களையும் போர்த்தளவாடங்களையும் அனுப்புவதற்குத் தடையும் விதித்தது. இதனால் ஐக்கிய நாட்டுச் சபையில் சியாங்கின் கோமிண்டாங்கை நீக்கிவிட்டு மாவின் CCPஐ அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் வாய்ப்பு கை நழுவிப்போயிற்று.

அதே நேரம் உள்நாட்டு விவகாரங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்படலாயின. மிதவாத போக்கைக் கைவிட்டு மாவுக்கு எதிரானவர்களை நாட்டின் எதிரிகள் (enemies of state) என்று முத்திரைக் குத்தி அடக்கி ஒடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாட்டவர்களும் கிறிஸ்துவ மதப் பிரசாரகர்களும் உளவாளிகள் என்று இழிவு படுத்தப்பட்டனர். நிலச்சுவாந்தர்களிடமிருந்தும், வசதியான விவசாயிகளிடமிருந்தும் அவர்களுக்குச் சொந்தமான நிலங்கள் பிடுங்கப்பட்டன. அறிவாளிகள், திறமை மிக்க அதிகாரிகள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என்று எந்த பாகுபாடுமின்றி கம்யூனிஸ சித்தாந்தகளைப் பரப்புவதில் அவர்கள் அடைந்த தோல்விகளை சுயவிமரிசனம் செய்துகொள்ளவும் பொதுமன்னிப்பு கோரவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். திறமையில்லாதவர்களும் அரசியலில் நம்பகத் தன்மையிழந்தவர்களும் நீக்கப்பட்டனர். ஊழல் மிகுந்த வணிகர்களும் தொழிலதிபர்களும் அப்புறப்படுத்தப் பட்டனர். பணம் படைத்த நன்கு படித்த மேல்தட்டு மக்கள் அரசின் சந்தேகத்துக்குள்ளாயினர். இந்த காலகட்டத்தில் 1 முதல் 3 மில்லியன் வரையிலான சீன மக்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

1953ம் ஆண்டு அறிமுகப்படுத்திய முதல் ஐந்து ஆண்டு திட்டம் சீனாவை சோஷியலிஸ பாதைக்கு இட்டுச் சென்றது. சோவியத் யூனியனை பின்பற்றி சீனாவும் எ•கு போன்ற முக்கிய தொழிற்சாலைகளை நிறுவியது. பாதுகாப்புத் துறையின் ஆற்றலைப் பெருக்கி தனது ராணுவத்தை வலிமைப் பொருந்தியதாக ஆக்கியது. வங்கிகளையும், தொழிற்துறை, வணிகத்துறை ஆகியவற்றையும் தேசிய மயமாக்கியது. அதே சமயம் விவசாயத்திற்கும் முன்னுரிமை வழங்கி சீனா ஒரு சோஷலிஸ நாடாக உருமாறிக்கொண்டிருந்தது. இந்த முதல் ஐந்து ஆண்டு திட்டக் காலத்தில் சீனாவின் மொத்த உள்நாட்டு வருமானம் வருடத்திற்கு 8.9% ஆக உயர்ந்து கொண்டிருந்தது. 1954 முதல் 1956ம் ஆண்டு வரை மா சே துங் மறுபடி படித்தவர்களையும் அறிவாளிகளையும் ஊக்குவித்து கட்சிப் பணிகளிலும், அரசாங்கத்திலும் பங்கு பெற வைத்தார். மாவோயிஸத்திற்கு மாறான சிந்தனைகளையும் அனுமதிக்குமளவுக்கு சகிப்புத் தன்மையையும் பரந்த மனப்பாண்மையையும் வெளிக்காட்டினார். ஆனால் மிகக்குறுகிய காலமே இந்த பெருந்தன்மை நீடித்தது. இந்தப் போக்கினால் கட்டுப்பாடு கை மீறிப் போய்விடுமோ என்ற அச்சத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அரசாங்கத்தையும் கட்சியையும் விமர்சிப்பவர்களை மேல்தட்டு வலதுசாரிகள் என்று இழிவு படுத்தும் இயக்கம் மீண்டும் தலை தூக்கியது. மேலும் 1957ம் ஆண்டு சோவியத் யூனியனுக்கு இரண்டாவது முறையாகச் சென்று வந்த மா ரஷ்யர்களின் ஆட்சி முறை சீனாவுக்கு ஒத்து வராது என்று முடிவெடுத்து நாட்டை ஒரு புதுப் பாதையில் வழிநடத்திச் செல்ல முனைந்தார். அணு ஆயுதப்போர் குறித்தான அவரது கருத்துகளும் மாற்றமடைந்திருந்தன. அணு ஆயுதப்போரால் மனிதச் சமுதாயத்தில் பாதிக்குப் பாதி அழிந்தாலும் மீதமுள்ளவர்கள் ஏகாதிபத்தியம் முற்றிலும் ஒழிந்து சோஷலிஸத்தை அனுபவிக்க முடியும் என்று நம்பினார். அதற்குப் பிறகு தான் 1958ம் ஆண்டு தனது ‘Great Leap Forward ‘ என்ற அதிவேக தொழிற்துறை முன்னேற்றத்திற்கானத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அத்திட்டம் எதிர்ப்பார்த்ததற்கு மாறாக முரண்பாடான விளைவுகளை உண்டாக்கியதை முன்பே பார்த்தோம். மேலும் மா அமெரிக்காவிற்கு எதிரான பிரசாரத்தினால் அவர்களுடைய அதிருப்திக்கு ஆளானார். இவை போதாதென்று சோவியத் யூனியனுடனான உறவும் மோசமடையத் தொடங்கியது. ஸ்டாலினுக்குப் பிறகு வந்த சோவியத் யூனியனின் அதிபர்கள் சோஷலிஸ கோட்பாடுகளை மாற்றுவதாக மா நினைத்ததால் அவர்கள் மேலிருந்த நம்பிக்கையையும் இழந்து கொண்டிருந்தார். இவை எல்லாவற்றினாலும் அவருக்கு உட்கட்சி எதிர்ப்புகள் வலுவடைந்து பின்னர் ஒரு கட்டத்தில் தான் அறிமுகப்படுத்திய திட்டம் தோல்வியடைந்து விட்டதாகவும் அத்தோல்விக்குத் தானே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும் CCPயின் மத்திய கமிட்டியிடம் ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார். அதைத் தொடர்ந்து குடியரசின் சேர்மன் பதவியையும் ராஜினாமா செய்தார். ஆனால் கட்சியின் சேர்மன் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். லியூ ஷெளகி, டெங் •ஸியோபெங் போன்ற மிதவாதத் தலைவர்கள் நாட்டை வழி நடத்திச் சென்று பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து தடுத்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றனர்.

லியூவும் டெங்கும் அமல் படுத்திய பொருளாதார மறுமலர்ச்சித் திட்டம் வெற்றியடையவே மக்கள் மத்தியிலும் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் அவர்கள் செல்வாக்கு அதிகரித்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து மா சே துங்கை அதிகாரத்திலிருந்து விலக்கி விட்டு அவரைப் பெயருக்காக ஒரு பொம்மைத் தலைவராக வைத்திருக்கத் திட்டம் தீட்டினார்கள். இந்த சூழ்ச்சியை மா எவ்வாறு முறியடித்தார் ? அதை முறியடிக்க அவர் கையாண்ட ஆயுதம் எப்பேர்ப்பட்ட அழிவுகளை ஏற்படுத்தியது என்ற விவரங்களை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

கே.ஜே.ரமேஷ்

kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 2

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

கே.ஜே.ரமேஷ்


சென்ற வாரத் தொடர்ச்சி….

சியாங் கை ஷெக் கோமிண்டாங் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின் CCPயின் மேல் உள்ள தனது வெறுப்பை மறைக்க எந்தவிதத்திலும் முயலவில்லை. பல CCP தலைவர்களையும் சுமார் 3500 கட்சி ஆதரவாளர்களையும் கொன்று குவித்தார். அவரது இந்த செய்கை கோமிண்டாங்கின் CCPயுடனான உறவு பூரணமாகத் துண்டிக்கப்பட ஏதுவாயிற்று. இது நடந்தது 1927ம் ஆண்டு ஜுலை மாதம். ஆனால் இந்த நெருக்கடியினால் மா மனம் தளரவில்லை. மாறாக சீனப் புரட்சி வெற்றி பெற வேண்டுமென்றால் அது கிராமப்புற விவசாயிகளிடமிருந்து தான் தொடங்கவேண்டும் என்ற அவரது நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது. இதனால் மலைப்பிரதேசமாக விளங்கிய ஹூனான் மற்றும் ஜியாங்ஸி மாகாணங்களுக்கு இடையே எல்லைப் பகுதிகளில் ‘சோவியத்ஸ் ‘ எனப்படும் மாநில அரசுகளை நிறுவினார். விவசாயிகளையும் தொழிலாளர்களையும் கொண்டு கொரில்லாப் படையையும் தோற்றுவித்தார். அந்த ஆண்டின் இறுதிக்குள் 10000 பேரைக் கொண்ட கொரில்லாப் படையாக அது உறுவெடுத்தது. பின்னாளில் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்பட்ட சிகப்பு ராணுவத்திற்கும் (red army) அந்த கொரில்லாப் படையே ஆதாரமாக விளங்கியது. மா மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுவதைக் கண்ட கோமிண்டாங் ராணுவம் அவரைப் பிடித்துச் சுட்டுக் கொல்வதற்காக கொண்டு செல்கையில் அவர்கள் கண்களில் மண்ணைத் தூவி சாவிலிருந்து மயிரிழையில் தப்பினார். அவரது விடாமுயற்சியினால் அடுத்த ஆண்டிற்குள் CCPயில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 40000மாக உயர்ந்தது. மேலும் கோமிண்டாங்கின் செய்கைகளால் ஆத்திரமடைந்த சோவியத் யூனியன் தனது முழு ஆதரவை கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கொடுக்க முடிவெடுத்தது.

இதற்கிடையில் சியாங்கின் கோமிண்டாங் கட்சி நான்ஜிங்கைத் தலைநகராகக் கொண்டு ஏறக்குறைய சீனாவின் எல்லாப் பகுதிகளையும் ஆண்டு கொண்டிருந்தது. இந்த சமயத்தில் கோமிண்டாங் சீனாவை ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டைப் போடும் நோக்கத்தில் ஜப்பான் தனது படைகளை அனுப்பி வைத்தது. ஆனால் மஞ்சூரியாவில் இருக்கும் தனது ராணுவம் ஆலோசனைக் கூறியும் ஜப்பான் சூழ்நிலை தனக்குச் சாதகமாக இல்லாத காரணத்தால் சீனாவின் மேல் படையெடுக்க மறுத்துவிட்டது. ஜப்பானின் இந்த முடிவினால் அதிருப்தியடைந்த ஜப்பானிய ராணுவத்தைச் சேர்ந்த சில சதிகாரர்கள் 1931ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெற்கு மஞ்சூரியாவில் ரயில் தண்டவாளங்களை வெடி வைத்துத் தகர்த்து பின்னர் பழியை சீனர்களின் மேல் போட்டுவிட்டனர். இதனால் கோபமுற்ற கோமிண்டாங் ராணுவம் அந்தப்பகுதியில் படையெடுத்து முக்டென் (இன்றைய ஷென்யாங் பகுதி) மற்றும் ஜப்பானியர்களின் வசம் இருந்த ஷாண்டோங் மாகாணத்தின் தெற்குப் பகுதியான ஷாங்காய் ஆகியப் பகுதிகளைக் கைப்பற்றியது. பின்னர் சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் ஜப்பான், சீனாவின் கடைசிப் பேரரசரான ‘புயி ‘யின் தலைமையில், மஞ்சூரியாவை மையமாகக் கொண்டு மஞ்சுகுவோ என்ற கைப்பாவை அரசை நிறுவியது.

அதே காலகட்டத்தில் மா சே துங்கிற்கும் பல சோதனைகள். கோமிண்டாங் அரசு மாவின் தமக்கை மற்றும் அவரது இரண்டாம் மனைவியான யாங் கைஹூய் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றி கொன்றுவிட்டது. மேலும் CCPயின் கொரில்லாப்படையைச் சேர்ந்த வீரர்கள் ஜியாங்ஸி மாகாணத்தில் இருக்கும் ஃபூஷியான் என்ற இடத்தில் மாவுக்கு எதிராக கிளர்ச்சி உண்டு பண்ணவும், மாவின் ஆணைப்படி 2000க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொன்று கிளர்ச்சியை அடக்க வேண்டியதாகி விட்டது. இவை போதாதென்று ஜப்பானிய தாக்குதல்களை எதிர்கொண்டு போரிடுவதற்குப் பதிலாக கோமிண்டாங் கம்யூனிஸ்ட்டுக்களை சுற்றி வளைப்பதிலேயே குறியாக இருந்தன. அந்தத் தாக்குதலைச் சமாளிக்க மா தனது கொரில்லாப் படைக்கு நாலு அம்சம் கொண்ட போர் வியூகத்தை அமைத்துக் கொடுத்தார். அந்த நாலு அம்சத்தையும் இப்போது பார்ப்போம் :

1. எதிரிகள் முன்னேறும்போது கொரில்லாப் படை பின்வாங்க வேண்டும்

2. எதிரிகள் இளைப்பாறும்போது அவர்களை சீண்டி மன உளைச்சலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்

3. எதிரிகள் களைத்திருக்கும் போது அவர்களை கொரில்லாப் படை தாக்கவேண்டும்

4. எதிரிகள் பின் வாங்கும் போது, கொரில்லாப்படை தாக்குதலை உச்சப்படுத்தி முன்னேற வேண்டும்

இந்த நாலு அம்ச போர் வியூகம் பல வெற்றிகளுக்கு வழி வகுத்தது. இதற்கிடையில் கம்யூனிஸ்ட்டுகள் ஜியாங்ஸி மாகாணத்தில சீன-சோவியத் குடியரசை நிறுவி அதற்கு மா சே துங்கை சேர்மனாகவும் தேர்ந்தெடுத்தது. மா நிலச் சீர்திருத்தங்களை ஏற்படுத்தி அந்தக் குடியரசில் உள்ள ஏழை விவசாயிகளின் ஆதரவையும் அதனால் அடைந்த புகழினால் கம்யூனிஸத்தின் ஆதிக்கத்தையும் விரிவு படுத்தினார். ஆனால் அவர் அந்தப் பதவியில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்க முடியவில்லை. CCPயின் மத்திய கமிட்டி ஷாங்காயிலிருந்து ரூயிஜின்னுக்கு இடம் பெயெர்ந்த போது மாவுடைய அதிகாரங்களும் பதவியும் பறிக்கப் பட்டிருந்தன. மாவின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட அவரது உட்கட்சி எதிரிகள் கோமிண்டாங்குடனான சண்டையில் மா அறிமுகப்படுத்திய கொரில்லா போர் முறையைக் கைவிடுத்து நேர் எதிர் தாக்குதலில் ஈடுபடுமாறு கம்யூனிஸ்ட்டுக்களை வற்புறுத்தினார்கள். கோமிண்டாங் ராணுவத்துடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் மிகக் குறைந்த சிகப்பு ராணுவம் இந்த மாற்றத்தால் பெருத்த சேதத்துக்குள்ளாயின.

1934ம் ஆண்டு கோமிண்டாங் ஐந்தாவது முறையாக கம்யூனிஸ்ட்டுகளை சுற்றி வளைக்க முற்பட்ட போது சிகப்பு ராணுவத்திற்கும் CCPக்கும் பின் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது. அதனால் மா தனது படையுடனும் ஆதரவாளர்களுடன் சீனாவின் தென் கிழக்கு பகுதிலிருந்து வட மேற்குப் பகுதிக்கு ஒரு நீ….ண்ட பயணம் (The Long March) மேற்கொண்டார். 18 மலைத்தொடர்கள், 11 மாகாணங்கள், 24 நதிகளைக் கடந்து முடிந்த அப்பயணம் சுமார் 9600 கிலோமீட்டர் துரத்தைக் கடந்து ஒரு வருடம் கழித்து ஷான்க்ஸி மாகாணத்தில் முடிவடைந்தது. 10000 பேருடன் தொடங்கிய அப்பயணம் சுமார் 8000 பேருடனேயே முடிவடைந்தது. மீதமுள்ளவர்கள் கோமிண்டாங் படைகளின் தாக்குதல்களுக்கும், பற்பல மாகாணங்களின் சிறிய படைகளின் தாக்குதல்களுக்கும் கடுமையான பயணச்சூழ்நிலைக்கும் பலியாயினர். ஆனால் வழியில் சேர்ந்துகொண்டவர்களையும் சேர்த்து சுமார் 22000 கம்யூனிஸ்ட்டுகள் ஷான்க்ஸின் மாகாணத்தை அடைந்தனர். அந்தப் பயணத்தின் வெற்றி மா ஒரு சிறந்த தலைவனாக உருவெடுக்க உதவியது. மேலும் சூ யன்லாய் போன்றவர்களின் ஆதரவையும் பெற வழி வகுத்தது. சுன்யி என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் மா கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு ராணுவத்திற்கும் தலைமை தாங்கினார்.

1937ம் ஆண்டு இரண்டாம் சீன-ஜப்பானிய போர் தொடங்குவதற்கு முன் கோமிண்டாங் ராணுவம் ஜப்பானியர்களுக்கு எதிரான போரில் கம்யூனிஸ்ட்டுகளுடன் ஒன்றுபட்டு போரிட்டால் தான் வெற்றி பெற முடியும் என்பதைப் புரிந்து கொண்டது. ஆனால் அதற்கு கட்சியின் தலைவரான சியாங் கை ஷெக் உடன்படாததால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளும் வரை அவரை பலவந்தமாகக் காவலில் வைக்கவும் துணிந்தது. ஜூலை மாதம் 7ம் தேதி தொடங்கிய இரண்டாம் சீன-ஜப்பானிய போரில் பெய்ஜிங்கைக் கைப்பற்றிய ஜப்பானிய ராணுவம் அடுத்த இரண்டே நாட்களில் தியான்ஜின்னையும் கைப்பற்றி ஆகஸ்ட் 13ம் தேதி ஷாங்காய் நகரை முற்றுகையிட்டது. அடுத்த மூன்று மாதங்களில் ஷாங்காய் நகரமும் ஜப்பானியர்களின் வசம் வந்துவிடவே கோமிண்டாங் ராணுவம் தனது தலைநகரான நான்ஜிங்கை நோக்கி வடமேற்காகப் பின்வாங்கியது. டிசம்பர் மாதம் 10ம் தேதி நான்ஜிங்கை முற்றுகையிட்ட ஜப்பானியத் தாக்குதலை மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாத கோமிண்டாங் ராணுவம் நான்ஜிங்கை விட்டு ஓடியது. அந்த வெற்றிக்குச் சில மணி நேரங்களுக்குப் பிறகு தொடங்கிய ஜப்பானிய ராணுவத்தின் ரத்த வெறி பிடித்த, மிருகத்தனமான வெறிச் செயல்கள் இன்றளவும் அவர்களை உலகச் சமுதாயத்தின் முன்னால் தலைகுனிய வைத்துள்ளது.

கமாண்டர் அசாகாவின் தலைமையில் நான்ஜிங்கைக் கைப்பற்றிய ஜப்பான் ராணுவம் 20000 முதல் 350000 வரை சீனப்பொதுமக்களையும் சரணடைந்த சீன வீரர்களையும் கொன்று குவித்தது. 20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரத்தவெறி தாக்குதல் இது. நிராயுதபாணிகளான மக்கள் மீது நடந்த இந்த தாக்குதலை விட மோசமான படுகொலை வேறெதுவும் இருக்க முடியாது. ஜப்பானிய ராணுவ வீரர்கள் நகரத்தைக் கொள்ளையடித்து பின்னர் தீ வைத்துக் கொளுத்தினர். பிடிபட்ட சீன மக்களை வித விதமாக சித்திரவதைச் செய்து கொன்றனர். உயிருடன் எரித்தும், உயிருடன் புதைத்தும் அங்கங்களை வெட்டியும் துப்பாக்கி முனையில் இருக்கும் கத்தியால் குத்தியும் கூட்டம் கூட்டமாக நிற்க வைத்து துப்பாக்கியால் சுட்டும் அந்த அப்பாவி மக்களைக் கொன்று குவித்தனர். அப்படியும் வெறி அடங்காதவர்களாக சுமார் 20000 முதல் 80000 வரை வயது வித்தியாசமில்லாமல் பெண்களையும் சிறுமிகளையும் கற்பழித்தனர். கற்பழித்த பெண்களில் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் மீதமுள்ளவர்களை பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்திக் கொண்டனர். உலகிலேயே மிகப்பெரிய அளவில் நடந்த கற்பழிப்புக் கொடுமை இது. அவர்களது அராஜகத்தைக் கண்ட சீன மக்கள் பீதியால் உறைந்தனர். முன்னேறும் ஜப்பானிய ராணுவத்தை தடுக்கும் வழி தெரியாமல் வேடிக்கைப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டனர்.

சமீபத்தில் ஜப்பானியப் பள்ளிப் பாட நூல்களில் ஜப்பானிய ராணுவம் நான்ஜிங்கில் நடத்திய மிருகச்செயல்கள் மறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டதும் அதனைத் தொடர்ந்து சீனாவில் உள்ள ஜப்பானியத் தொழில் நிறுவனங்கள் தாக்குதல்களுக்கு உள்ளான செய்திகளையும் நீங்கள் படித்திருப்பீர்கள். ஒரு முன்னேற்றமடைந்த நாடு, மனித நாகரீகத்தின் உச்சத்தை அடைந்த நாடு என்று கருதப்படும் ஜப்பானின் இந்த பொறுப்பற்ற செயலும் அதைத் தொடர்ந்த விளைவுகளுக்கு அதன் எதிர்வினைகளும் நம்பமுடியாதவைகளாக இருந்தன.

சரி, மா நடத்திய புரட்சி வரலாறுக்கு மீண்டும் வருவோம். 1937 முதல் 1945 வரைத் தொடர்ந்த இரண்டாம் சீன-ஜப்பானிய போரில், மா தனது யானான் ராணுவ மையத்திலிருந்து ஜப்பானியர்களுக்கு எதிரான போரை நடத்திச் சென்றார். மாவின் வழிமுறைகளை சியாங் மட்டுமின்றி அமெரிக்காவும் எதிர்த்து வந்தது. அமெரிக்கா சியாங்கை ஒரு முக்கியமான ஆதரவாளராக நினைத்தது. அவரது துணை கொண்டு ஜப்பானியர்களின் தாக்குதல்களை முறியடிப்பதுடன், போரை மிகச் சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வருவதும் அமெரிக்காவின் திட்டம். ஆனால் சியாங்கின் திட்டமோ வேறு விதமாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தவுடன் கம்யூனிஸ்ட்டுகளின் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதை சியாங் உணர்ந்திருந்தார். அதனால் ஜப்பானியப் போருக்கு அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் நிதி உதவிகளையும் தளவாட உதவிகளையும் கொண்டு தனது ராணுவத்தை பலப்படுத்தும் திட்டத்துடன் சியாங் இருந்தார். அமெரிக்காவால் அவரது இந்தத் திட்டத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த பிறகும் அமெரிக்கா சியாங்கிற்கு உதவி செய்வதைக் கை விடவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. சீனாவின் உள்நாட்டுப் போரில் மாவின் தலைமையில் போராடும் கம்யூனிஸ சிகப்பு ராணுவத்திற்கு எதிராக சியாங்கையும் அவரது கோமிண்டாங் கட்சியையும் உபயோகப்படுத்திக் கொள்வது தான் அது. மாவின் தலைமையில் போராடும் கம்யூனிஸ்ட்டுக்களை ஒடுக்கிவிட்டால் கம்யூனிஸம் தழைப்பதை தடுக்க முடியும் என்று அமெரிக்கா நம்பியது. அமெரிக்கர்கள் நிலைக்கு எதிராக சோவியத் யூனியன் மா சே துங்கிற்கு உதவ முடிவு செய்து தளவாடங்களை அதிக அளவில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கொடுத்து உதவியது. ஆனால் அமெரிக்காவுடனான நேரடி மோதலைத் தவிர்க்கும் பொருட்டு சோவியத் யூனியன் மாவுக்கு மறைமுகமாக உதவிகளை அளித்தது.

ஜப்பானியர்களுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருக்கும்போது மா 1939ம் ஆண்டு தனது மூன்றாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, திரைப்பட நடிகையான ஜியாங் சிங்கை மணந்தார். இந்த நான்காவது மனைவி பிற்காலத்தில் மாவின் அரசாங்கத்தில் பெரும் பங்கு வகித்து வாழ்வின் உச்சத்தையும் பின்னர் அதளபாதாளத்தையும் தொட்ட கதையைப் பிறகு பார்ப்போம்.

1940களில் மா கட்சியில் தனது ஆதிக்கத்தைப் பெருமளவு வளர்த்துக் கொண்டார். கட்சியும் 10000லிருந்து 1.2 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாக வளர்ந்தது. 1943ம் ஆண்டு மா CCPயின் மத்திய கமிட்டிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவின் சிந்தனைகள் சிகப்புப் புத்தகமாக (Red Book) அச்சிடப்பட்டு கட்சியின் புதிய உறுப்பினர்கள் அப்புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டார்கள். 1945ம் ஆண்டு CCP சிகப்புப் புத்தகத்தை அதிகாரப்பூர்வமாக தனது கட்சியின் கோட்பாட்டுப் புத்தகமாக ஏற்றுக் கொண்டது.

இனி இரண்டாம் உலகப்போரும் இரண்டாம் சீன-ஜப்பானியப் போரும் முடிவுக்கு வந்த பிறகு மா சே துங் கோமிண்டாங்கின் ஆதிக்கத்தை முறியடித்து சீனாவின் முடிசூடா மன்னனான வரலாற்றை கடைசி பாகமாக அடுத்த வாரம் பார்ப்போம்.

கே.ஜே.ரமேஷ்

kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்

புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 1

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

கே ஜே ரமேஷ்


உலகத்தில் இதுவரை வாழ்ந்த, வாழுகின்ற தலைவர்களுள் மிகச் சக்தி வாய்ந்தவராக இருந்த ஒருவரை உங்களுக்குத் தெரியுமா ? இன்றைய கணக்குப்படி பல ஆயிரம் பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் மதிப்புள்ள நாட்டை (இன்று கிடைத்த தகவலின்படி வாங்கும் திறனை அடிப்படையாகக் கொண்ட குறியீடு அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை சீனா பிடித்துவிட்டதை உறுதி படுத்துகிறது. ஜப்பான் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது), 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை, 100 கோடி மக்களை 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்தவர் – வேறு யாருமில்லை, சீனாவின் முந்தைய தலைவரான மா சே துங் தான். மா தனது அரசியல் வாரிசாகத் தேர்ந்தெடுத்த லின் பியாவ் கூற்றுபடி மார்க்ஸியத்தையும் லெனினிஸத்தையும் கலந்து புத்தாக்கச் சிந்தனையோடு முழுமையான ஒரு சிந்தனையைக் கொடுத்ததோடு அதை ஒரு புதிய உயரமான தளத்திற்கும் கொண்டு சென்றார். இந்தப் புதிய சித்தாந்தத்திற்கு மாவோயிஸம் என்ற பெயரும் உண்டு. ஆனால் மாவோயிஸம் என்ற வார்த்தையை அவரது எதிரிகள் இழிவாகப் பயன்படுத்தியதால் அதிகாரப்பூர்வமான அறிக்கைகளில் மாவோயிஸம் என்ற வார்த்தை புறக்கணிக்கப்பட்டது. மிதமிஞ்சிய அதிகாரத்தைப் பெற்று மக்களின் ஏகோபித்த ஆதரவையும் அனுபவித்தவரே பல மில்லியன் கணக்கான மக்களின் இறப்புக்குக் காரணமாகிவிட்டது ஒரு வகையில் எதிர்ப்பாராத எதிர்வினையாகிவிட்டது. அவருடைய ‘Great Leap Forward ‘ என்ற அதிவேக தொழிற்துறை முன்னேற்றத்திற்கானத் திட்டம் அவர் எதிப்பார்ப்பிற்கு மாறான விளைவுகளை உண்டாக்கி விட்டது. அந்தத் திட்டத்தின் படி விவசாயத்திலும் தொழில் துறையிலும் ஒருசேர முன்னேறுவதற்காக கிராமப்புறங்களில் உள்ள மிஞ்சிய மனித வளத்தை தொழிற்சாலைகளிலும் கட்டுமானப் பணிகளிலும் ஈடுபடுத்தினர். தொழிற்சாலைகளில் வேலை செய்யாதோர் குடிசைத் தொழிலாக இரும்பு தயாரிக்கும்படி (backyard furnaces என்று இதைக் கூறினர்) வற்புறுத்தப்பட்டனர். ஒவ்வொரு குடிமகனும், CCP உறுப்பினர்கள், படித்தவர்கள், அறிவாளிகள், பொறியியலாளர்கள், விவசாயிகள் என்ற எந்த பாகுபாடுமின்றி தொழிசாலைகளிலும் சுரங்கங்களிலும் வேலை செய்ய வற்புறுத்தப்பட்டனர். அவர்கள் எல்லோரும் கம்யூன் என்று அழைக்கப்பட்ட இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதன் விளைவாக விவசாயிகள் நிலம் உழுவதைப் புறக்கணிக்க வேண்டியதாயிற்று. அதனால் ஏற்பட்ட பஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியால் செத்து விட்டனர். சில அதிகாரப்பூர்வமற்ற அறிக்கைகளின் படி சுமார் 30 மில்லியன் மக்கள் வரை மடிந்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டது.

நீந்துவதில் மாவுக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவர் சீனாவின் முடிசூடா மன்னனாக இருந்த போது நீச்சல் அவரது வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக ஆகிவிட்டது. அவரது முக்கியமான முடிவுகளை எல்லாம் தலைவர்களுக்காகக் கட்டப்பட்ட அந்தப் பெரிய பிரத்யேக நீச்சல் குளத்தில் தான் எடுக்கப்பட்டது என்று கூறுவார்கள். பல சமயம் அவரது மருத்துவர்களின், மெய்க்காப்பாளர்களின் அறிவுரைக்கெதிராக தெற்கு சீனாவில் இருக்கும் கழிவுப் பொருள்கள் நிறைந்த நதிகளில் பல மைல் தூரம் மிதந்து கொண்டே செல்வாராம். அப்போது நீந்துவதற்குத் தயங்கும் மற்ற தலைவர்களை நீரில் மூழ்கிவிடுவோம் என்ற பயமா என்று கடிந்து கொள்வாராம். ஆனால் மா மூழ்குவதைப்பற்றிக் கவலையே பட்டதில்லை – நீரிலும் சரி, அரசியலிலும் சரி. ‘மூழ்குவதைப்பற்றி சிந்தனையே இருக்கக்கூடாது! அதைப்பற்றிச் சிந்தித்தால் மூழ்குவது நிச்சயம். அதைப்பற்றி நினைக்காவிடில் மூழ்கவே மாட்டார்கள் ‘ என்று கூறுவாராம். அரசியலில் மூழ்காமலிருப்பதைப் பற்றி முற்றிலுமறிந்த அதிபுத்திசாலி அவர். இத்தனைக்கும் அவருக்கு, ராணுவ அதிகாரிகளின் திறமையின்மையைப்பற்றி அவர் இடித்துரைத்ததினால் அவர்களது எதிர்ப்பு, கோமிண்டாங்கிடம் அவருக்கிருந்த பற்றுதலினால் அதிருப்தியடைந்த அவரது உட்கட்சி எதிரிகளின் எதிர்ப்பு, ஏழை விவசாயிகளுக்கு அவர் அளித்த ஆதரவினால் கோபமடைந்த நிலச்சுவாந்தார்களின் எதிர்ப்பு, சீனாவின் வடக்குப் பகுதியில் அவருக்கிருந்த செல்வாக்கை உடைக்கத் துடித்த ஜப்பானியர்களின் எதிர்ப்பு, கொரியப்போரில் பங்கெடுத்தமைக்காக அமெரிக்காவின் எதிர்ப்பு, குருஷ்சேவின் ஸ்டாலினுக்கு எதிரான கொள்கைகளைத் தாக்கியதற்காக ரஷ்யாவின் எதிர்ப்பு என்று பன்முனைத் தாக்குதல்கள் இருந்தவண்ணமிருந்தன. அவற்றையெல்லாம் சமாளித்து சீனாவை தொடர்ந்து நீண்ட காலம் ஆண்ட தலைவர் அவர்.

மா பிறந்த ஆண்டான 1893ல் சீனாவில் பொருளாதாரச் சரிவும் அதனால் ஏற்பட்ட சமூகக் கலவரங்களும் கொழுந்து விட்டெரிய அதனைக் கட்டுப்படுத்த முடியாத ஆயின் டைனாஸ்டி வெளிநாடுகளின் உதவியை நாடி தனது நாட்டின் பொருளாதாரத்தையும் இயற்கை வளங்களையும் அவர்களிடம் அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நான்கு குழந்தைகளில் மூத்தவராகப் பிறந்த மாவின் குடும்பம் ஒரு வசதியான கிராமப்புர விவசாயக் குடும்பம். தனது எட்டாவது வயதில் அருகிலிருந்தப் பள்ளிக்குச் சென்ற மா, தந்தையின் விருப்பப்படி தனது 14வது வயதில் ஒரு பெண்ணை மணந்தார். ஆனால் அந்தப் பெண்ணுடன் அவர் வாழவே இல்லை. மேலும் அந்தத் திருமணத்தையே அவர் அங்கீகரிக்கவில்லை. அடுத்த இரண்டாண்டுகளில் தனது தந்தையின் விருப்பத்திற்கெதிராக தனது படிப்பைத் தொடர்ந்தவர், அரசியலில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். பின்பு சாங்ஷாவில் தனது முறையான கல்வியைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்றார். முதல் மனைவியை வெறுத்தாலும் திருமணத்தையோ பெண்களையோ அவர் வெறுக்கவில்லை. தனது ஆசிரியரின் மகளான யாங் கய்ஹூய் என்பவரை 1921ம் ஆண்டு மணந்தார். ஆனால் யாங் கய்ஹூய்யை கோமிண்டாங் அரசு 1930ம் ஆண்டு மரணதண்டனை நிறைவேற்றி கொன்றுவிட்டது. அவர் இறப்பதற்கு முன்பே ஹி சிஷென் என்பவரை 1928ம் ஆண்டு மணந்தார். பின்பு அவரும் இறந்த பிறகு 1939ம் ஆண்டு ஜியாங் சிங் என்பவரை மணந்தார். அவர் மா இறக்கும்வரை அவருடைய மனைவியாகவே வாழ்ந்தார். இந்த நான்காவது மனைவியைப் பற்றி பிறகு பார்ப்போம்.

இதற்கிடையில் 1912ம் ஆண்டு தேசிய மக்கள் கட்சியான கோமிண்டாங் தொடங்கப்பட்டு அதற்கு அடுத்த ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சி மாபெறும் வெற்றி பெற்றது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்தப் புதிய இரண்டு அடுக்குப் பாராளுமன்ற ஆட்சிக்கு யுவான் ஷிகாய் என்ற கொடுங்கோலனை அதிபராக நியமிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. உலகளாவிய அங்கீகாரம் பெறும் பொருட்டு அந்தப் புதிய ஆட்சி, மங்கோலியாவின் ஒரு பகுதிக்கும் திபேத்திற்கும் சுயாட்சி கொடுக்க முன்வந்தது. அந்த ஆண்டின் கடைசியில் யுவான் ஷிகாய் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தனக்கு பூரண அதிகாரம் கிடைக்குமாறு அரசியல் சட்ட சாசனத்தையே மாற்றி அமைத்துக்கொண்டான். இதன் விளைவாக 1916ம் ஆண்டு யுவான் ஷிகாய் இறந்த போது சீனா பற்பல மாகாணங்களின் படைகளுக்கிடையேயான உட்பூசலில் சிக்கித் தவித்தது. இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட ஜப்பானிய ராணுவம் ஷாண்டோங் மாகாணத்தைக் கைப்பற்றியது.

பிறகு முதலாம் உலகப்போர் முடிவடைந்த போது வெர்ஸெயில்ஸ் ஒப்பந்தம் ஏற்பட்டு அதன் படி ஷாண்டோங் மாகாணத்திற்கான உரிமையை ஜெர்மனியிடமிருந்து ஜப்பானுக்கு மீண்டும் மாற்றினார்கள். இந்த முறை அதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு சுமார் 3000 மாணவர்கள் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் கூடினார்கள். அது நடந்த தேதி 1919ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி. இந்தப் போராட்டமே பின்னர் ‘மே 4 இயக்கம் ‘ (May Fourth Movement) ஆக உருப்பெற்றது. அந்த இயக்கத்தின் கீழ் கல்வியாளர்களும் அறிவாளிகளும் ஒன்று கூடி சமூகம் நவீனமயமாக்கப் படவேண்டும் என்றும் ஜனநாயகம் கோரியும் போராட்டம் தொடங்கினர். அந்த சமயத்தில் மா பெய்ஜிங்கில் ஒரு நூலகத்தில் வேலையில் இருந்தார். அந்த காலக்கட்டத்தில் தான் அவர் ஒரு மார்க்ஸீய-லெனினிச வாதியாக மாறினார் என்று நம்பப்படுகிறது. ஆனால் மார்க்ஸீய-லெனினிச கருத்துக்கு மாறாக மாவின் நம்பிக்கை சீனாவின் கிராமப்புற பகுதிகளிலேயே இருந்தது. சீனாவில் புரட்சி ஓங்க வேண்டுமென்றால் அதற்கான வாய்ப்பும் ஆதரவும் நகர்ப்புற படித்த மக்களைவிட கிராமப்புற விவசாயிகளிடமிருந்தே கிடைக்கப்பெறும் என்று தீவிரமாக நம்பினார். அதன் விளைவாக இயக்கத்தை வழிநடத்தும் பொருட்டு மீண்டும் சாங்ஷாவிற்கே திரும்பினார். ஆனால் அங்குள்ள படைகளினால் விரட்டியடிக்கப்பட்டார். மா சாங்ஷாவில் தோல்வியுற்றாலும், மே 4 இயக்கத்தினால் ஊக்கமடைந்த கோமிண்டாங் கட்சி அந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் நிறுவப்பெற்று மாகாணத் தலைவர்களின் உதவியுடன் சீனாவின் தெற்குப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதற்கு அடுத்த ஆண்டு மீண்டும் சாங்ஷாவிற்குத் திரும்பிய மா, ஒரு தொடக்கப்பள்ளியின் முதல்வராக இருந்து கொண்டே பொது மக்களுக்குக் கல்வி புகட்டும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்த அவரது முயற்சிக்கும் பங்கம் வந்துவிடவே அரசியலில் நுழைவது ஒன்றே வழி என்று கண்டு கொண்டவர், அதன் முதல்படியாக ஒரு சிறிய கம்யூனிஸ குழுவை சாங்ஷாவில் தொடங்கினார்.

1921ம் ஆண்டு Chinese Communist Party (CCP) அக்கட்சியின் முதல் தேசிய மாநாட்டை ஷாங்காயில் நடத்தியது. அதில் கலந்துகொண்ட மா, ஹுனான் மாகாணத்துக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் பெற்றார். மாநாட்டிலிருந்து திரும்பிய மா தொழிலாளர் சங்கங்களை தோற்றுவித்து அதன் மூலம் போராட்டங்களை நடத்தினார். அதே ஆண்டு தேர்ந்த கம்யூனிஸ்ட்டாக இருந்த தனது ஆசிரியரின் மகளையே மணந்து கொண்டார்.

1922ம் ஆண்டு கோமிண்டாங் மாகாணத்தலைவர்களின் ஆதரவை இழந்தபோது அப்போது புதிதாகத் தோன்றிய சோவியத் யூனியனின் உதவியை நாடியது. சோவியத் யூனியன் தனது ஆதரவை தேசிய ஒருமைப்பாட்டுக்காகப் பாடுபடும் கோமிண்டாங் மற்றும் CCP ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே கொடுப்பதாகக் கூறியது. இதனால் CCPயின் உறுப்பினர்கள் மிகக்குறைந்த அளவே இருந்த போதிலும் கோமிண்டாங்-CCP கட்சிகளுக்கிடையே ஒப்பந்த உடன்பாடு ஏற்பட்டு, மா பொதுவான மத்திய செயற்குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டாண்டுகள் கழித்து CCP கட்சியின் மூன்றாவது மாநாட்டில் அக்கட்சியின் மத்திய கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1925ம் ஆண்டின் கடைசியில் கோமிண்டாங் கட்சியின் கொள்கைப் பரப்பு (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு இல்ல!!) செயலமைப்புக்கு தற்காலிகத் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.

இதற்கிடையில் கோமிண்டாங் கட்சியின் மிக வேகமாக வளர்ந்து வந்த இளைய தலைவர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய ‘சியாங் கை ஷெக் ‘ ராணுவப் பயிற்சிக்காகவும், அரசியல் பயிற்சிக்காகவும் மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டார். பயிற்சியிலிருந்து திரும்பிய போது கோமிண்டாங்கின் ஸ்தாபகரும் தலைவருமான ஸூன் யாட் சென் இறந்துவிடவே அக்கட்சியின் தலைவர் பதவியை சியாங் கைப்பற்றினார். பதவிக்கு வந்தவுடனேயே CCPயுடன் ஏற்பட்ட உடன்பாட்டில் விரிசல் காணத்தொடங்கியது. தலைவரான பிறகு சியாங் நடத்திய அதிரடி மாற்றங்களையும் அதனால் பாதிக்கப்பட்ட CCPயும் மாவும் என்னவானார்கள் என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்.

கே.ஜே.ரமேஷ்

kalelno5@yahoo.com

Series Navigation

கே.ஜே.ரமேஷ்

கே.ஜே.ரமேஷ்