தமிழ் நாட்டு அரசியலில் நடிகர்கள்
-அருளடியான்-
தமிழ் நாட்டு அரசியிலில் எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா மூவரும் முதல் அமைச்சர் பொறுப்பைப் பெற்ற நடிகர், நடிகைகள். திமுகவில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்கப் பட்ட நடிகர் டி.ராஜேந்தர் தான். ஆனால் அவர் தனக்கு, கட்சியில் எந்தப் பொறுப்பும் தரப்படாததால் கட்சியை விட்டு நீங்கியுள்ளார். தமிழ் நாட்டு அரசியலில் பதவி தான் முக்கியம் என்று நடிகர் நடிகைகள் நினைக்கிறார்கள். இதே போல, மன்சூரலிகான் அஇஅதிமுகவில் இருந்து தனக்கு பதவி எதுவும் தரப்படாததால் விலகியுள்ளார். இவர் தரங்கெட்ட மூன்றாந்தர பேச்சாளர்.
திமுகவில் மாநிலங்களவை எம்.பியாக இருக்கிறார் சரத்குமார். அவரை விட அப்பதவிக்கு பொறுத்தமான ரகுமான் கான், ஆலடி அருணா போன்றவர்களுக்கு தராத பொறுப்பை சரத்குமாருக்கு கொடுத்துள்ளார் கலைஞர். ரகுமான் கான், ஆலடி அருணா போன்றவர்கள் மாநிலங்களவைக்குச் சென்றால் தமிழ் நாட்டு உரிமைக்காக வாதாடுவார்கள். சரத்குமார் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கும், தன் துணைவிக்கும் சாதகமாக அதிகார மட்டத்தில் பயன்பெறுவார். இவர் திமுகவில் இருக்கும் போதே அஇஅதிமுகவுடன் ரகசிய உறவு கொண்டவர். திமுகவின் எதிரியான காஞ்சி சங்கராச்சாரியாரை தன் துணைவியுடன் காணச் சென்றவர்.
ராதாரவி அஇஅதிமுகவில் எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் திமுகவிலிருந்த போதே மிகவும் தரக்குறைவாகப் பேசுவார். அஇஅதிமுகவிலும் அதனையே தொடர்கிறார். எஸ்.எஸ். சந்திரன் அஇஅதிமுகவில் மாநிலங்களவை எம்.பி. இவர் ஆபாசமாகவும், அறுவறுப்பாகவும் பேசுபவர். திமுகவில் இருந்த போதும் இதனையே செய்தார். இவர்களால் தமிழ் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. அஇஅதிமுகவில் தகுதி வாய்ந்த பலர் இருக்கும் போது இவர்களுக்கு ஏன் இப்பொறுப்புகள் கொடுக்கப் பட்டன என்று தெரியவில்லை.
ரஜினியைப் பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துள்ளதால் அதனைத் தனியே இங்கு குறிப்பிட விரும்பவில்லை. இவரை விட, விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்களை நான் ஆபத்தானவர்களாக நான் கருதுகிறேன். பா.ஜ.க வினோத்கன்னா, சத்ருகன் சின்ஹா என்ற இரு நடிகர்களை அமைச்சராக்கியது போலவே, காங்கிரஸும் சுனில் தத்தை அமைச்சராக்கியுள்ளது. இவையெல்லாம் சரியான முடிவுகளல்ல.
—-
aruladiyan@netscape.net
- ஹிண்டு பேப்பரும் குத்துவிளக்கும்
- பிறந்த மண்ணுக்கு – 4
- தீர்ப்பு
- பாலைவன மூளைகளும் பேரீத்தமரங்களும்- மத்திய கிழக்கை முன்வைத்து
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -22
- மஸ்னவி கதை 9.1 — சிங்கமும் முயலும் (தொடர்ச்சி)
- சோனியா காந்தி – ஒரு நடுநிலைப் பார்வை
- வாரபலன் ஜூன் 3 , 2004 – மலேசியா ஸ்பெஷல் சேடிஸம் – இத்தாலிய பிட்ஸா எமெர்ஜென்ஸி – கேரள புஷ் மாங்கல்ய பிரஸ்னம்
- கலை வளர்க்கும் பூனைகள்
- உறுத்தல்
- தமிழ் நாட்டு அரசியலில் நடிகர்கள்
- விகிதாச்சார பிரதிநிதித்துவம் – பல்வேறு முறைகள்
- அதனதன் இரகசியங்கள்
- நிறம்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 5)
- கருணையினால்தான்..
- தமிழவன் கவிதைகள்-எட்டு
- அம்மா+ அப்பா+காதல்
- கவிக்கட்டு – 9 -அன்றொருநாள் அம்மா
- ஈன்ற பொழுதில்….
- ஆதிமூலம்
- அன்புடன் இதயம் – 20 – பனிரெண்டாம் குடியரசுத் தலைவா
- அன்பு
- நயாகரா நீர்வீழ்ச்சிப் பள்ளத்தாக்கில் இயங்கும் நீரழுத்த மின்சக்தி நிலையங்கள் [Hydroelectric Power Stations in the Niagara Falls E
- வாக்கிய அமைப்புகள்
Thinnai – Weekly Tamil Magazine - தேனீ – கட்டுப்பாடும் கலகமும்
- அன்னமிட்ட வெள்ளெலி
- மெதுவாக உன்னைத் தொட்டு..
- மெய்மையின் மயக்கம்: 2
- மலட்டுத்தனம் என்ற குறியீடு : செம்பனே ஓஸ்மனே அவர்களது க்ஸாலா நாவலில் ஆண் பெண்கள் பாத்திரப் படைப்பு பெறும் தலைகீழ் மாற்றம்
- வன்முறையின் நிறம் (போராட்டம் -கன்னட நாவல் அறிமுகம்)
- சூதாட்டமும் காதலும் (ஒரு சங்கீதம்போல – மலையாள நாவல் அறிமுகம் )
- நி னை வு ப் பு கை
- ஆட்டோகிராஃப் ‘செந்தமிழ் தேன் மொழியாள் ‘
- கடிதம் ஜூன் 3,2004
- கடிதம் ஜூன் 3, 2004
- கடிதம் ஜூன் 3,2004
- கடிதம் ஜூன் 3 , 2004
- மலை ஆமணக்கு எண்ணெயிலிருந்து கார் ஓட்டும் எண்ணெய்
- கடிதம் – ஜூன் 3,2004
- எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு என் அஞ்சலி
- கவிதைகள்
- சிகரெட் நண்பன்
- அச்சம்
- கவிதைகள்…
- நீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்