மனிதாபிமானம்

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

முரளி இராமச்சந்திரன்


‘அடுத்தது ‘, கணீரென ஒலித்தக் குரல் கூடியிருந்த அனைவாின் சப்தத்தையும் நிறுத்தியது. அப்போது, இருவர் அவனை கொண்டு வந்து நிறுத்தினர். குழுமியிருந்த அனைவர் பார்வையும் அவன் மேல்தான். அவன் கண்களில் ஒளியில்லை, முகத்தில் அடர்ந்த தாடி, தலை எண்ணெயைக் கண்டு குறைந்தது 2 வருடமாவது இருக்கும்,

உலகில் உள்ள அழுக்கெல்லாம் அவன் மீதுதான் என்று சொல்லும் அளவிற்கு அழுக்காக இருந்தான், உடம்பில் உள்ள எலும்புகளை எக்ஸ்-ரே இல்லாமலேயே எண்ணிவிடலாம் என்ற அளவிற்க்கு ஒல்லியாக இருந்தான். கையில் ஒரு நசுங்கின, அழுக்கான ஒர் அலுமினிய தட்டு வைத்து இருந்தான், அதில் கொஞ்சம் காசு இருந்தது. தோளில் ஒர் பழைய துணி மூட்டை இருந்தது, அவனுடைய துணிகளும் மிகவும் அழுக்காக இருந்தது, ஒரு பழைய கிழிந்த சட்டையும், கறையேறிய வேட்டியும் அணிந்து இருந்தான்.

அவனைப்பார்த்த கூட்டம் ஸ்தம்பித்து போனது. யாருக்கும் பேசக்கூட தோன்றவில்லை. அவர்கள் பார்த்துக் கொண்டு இருப்பது ஒரு 6 அடி உயர வண்ண ஓவியம் என்பது கூட அவர்களுக்கு மறந்து போனது. அந்த ஓவியத்தில் லயித்து அவனுடைய தட்டில் போட, சிலர் தன்னிச்சையாக தங்கள் சட்டைப் பைக்குள் கைவிட்டு பணத்தை எடுத்தனர். அப்போது அந்த ஓவியக் கல்லூாியின் தலைவரும், நிருவனருமான கலாதர் மைக் அருகில் வந்து தெளிவான ஆங்கிலத்தில் பேசத்துவங்கினார்.

‘இனிய கலா ரசிகர்களே, நீங்கள் ஏலம் கேட்க இருக்கும் இந்த பிச்சைக்காரனின் ஓவியத்தையும் இது போன்ற மேலும், 3 ஓவியத்தையும் நான் வெறும் விற்பனைக்காக வரையவில்லை. நீங்கள் இந்த ஓவியப் பள்ளிக்கு பக்கத்து சந்தில் இவனைப்பார்த்து இருப்பீர்கள். இவனைப்போல பலர் அங்கு இருக்கின்றார்கள். இந்த ஓவியக் கல்லூாிக்கு வரும் பலர், இவனையும், இவன் கூட இருக்கும் மற்ற பிச்சைக்காரர்களையும் இங்கிருந்து அப்புறப் படுத்த வேண்டினர். இவர்களை அடித்து விரட்டுவது ஒரு காட்டு மிறாண்டித்தனம் என்பது என்னுடைய தாழ்மையான் கருத்து. அதை விடுத்து இவனுக்கும், இவனைப்போன்ற பலருக்கும் ஒரு புது வாழ்க்கைக்கு வழி செய்யுமாறு ஒரு தொண்டு நிறுவனத்திடம் பேசினேன், அவர்களும் இதை ஒப்புக் கொண்டனர். அவர்களுக்கு இதனால் ஏற்படும் செலவை ஈடு கட்டவே இந்த ஓவியங்களை வரைந்து ஏலத்தில் விற்கிறேன். எனவே, இது ஒரு நல்ல காாியத்திற்க்கு என்பதை கருத்தில் கொண்டு தாராளமாக ஏலம் கேளுங்கள். அந்தத் தொண்டு நிருவனத்தின் தலைமைப் பொருப்பாளர் திரு. மோகன் இங்கு வந்துள்ளார், இன்று ஏலம் முடிந்ததும், அந்தப் பணம் அவாிடம் தரப்படும்.”

“முதல் படம் துவக்க மதிப்பு ரூ.5000/-“

அப்போது, கூட்டத்தில் ஒருவர், எழுந்து, “ரூ. 10,000” என்றார், மற்றொருவர் “ரூ.20,000” என்றார். 5 நிமிடத்தில் அது 2 லட்சமாக ஆகிவிட்டது.

கலாதர் முகத்தில் சந்தோஷம் கொப்பளித்தது. கூடியிருந்தவர்களின் அன்பின் மிகுதியால் அவருக்கு அதிகம் பேசவும் தோன்றவில்லை. அனைவரையும் பார்த்து ‘2 லட்சம் ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் ‘ என்று கூறி முதல் படத்தின் ஏலத்தை முடித்தார்.

இதை அடுத்து மேலும் 3 படங்களை கலாதாின் உதவியாளர்கள் கொண்டுவந்து மேடையில் வைத்தனர். எல்லாம், முதல் படத்தைப் போலவே மிக அற்புதமாக இருந்தது. எல்லாப் படங்களும் முதல் படத்தைப் போலவே நிமிடத்தில் விற்று தீர்ந்தது.

பிறகு கலாதர், தழுதழுத்த குரலில் ‘ உங்கள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தொியவில்லை. ஒரு நல்ல காாியத்திற்க்கு என்றவுடன் இப்படி தாராளமாக ஏலம் கேட்டு இந்த நாட்டில் மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை என்பதை உணர்த்தியுள்ளீர்கள், உங்கள் அனைவருக்கும், நீண்ட ஆயுளையும், நல்ல வசதியையும், எப்போதும் இது போன்ற நல்ல எண்ணத்தையும் ஆண்டவன் தரட்டும் ‘ என்று பொங்கி வந்த கண்ணீரைத் துடைத்த படி கூறினார்.

பிறகு பள்ளியின் மற்ற ஓவியர்களின் ஓவியங்கள் விற்பனைக்கு வந்தது. ஓர் உதவியாளர் ஒவ்வொரு ஓவியமாக கொண்டு வந்து மேடையில் வைக்க, மற்றோர் உதவியாளர் அதன் விலையை கூறினார். அவற்றில் பல நல்ல விலைக்கு விற்கப்பட்டது, சில சாதாரண விலைக்கு விற்கப்பட்டது.

ஏலம் முடிவுக்கு வந்ததும், அவரவர்கள் ஏலம் எடுத்த படத்தை பணத்தைச் செலுத்தி வாங்கிக் கொண்டனர்.

பிறகு கலாதர் மேடைக்கு வந்து “4 படங்களின் ஏலத்தின் மூலம் கிடைத்த 7 லட்சத்திற்கான காசோலையையும், இந்த கல்லூாியின் சார்பில் ரூ.25,000/- க்கான காசோலையையும் திரு.மோகனிடம் உங்கள் சார்பாக அளிக்கிறேன்” என்றார்.

திரு. மோகன் மேடைக்கு வந்து காசோலையை பெற்றுக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினபிறகு எல்லோரும் கலைந்து சென்றனர்.

அனைவாின் கார்களும் சென்றபின் கடைசியாக திரு. மோகன், கலாதாிடம் கை குலுக்கி விட்டு, “நீங்கள், மிக நல்லவர், மிக நல்ல ஒரு செயலை இன்று செய்து இருக்கின்றீர்கள், மிக்க நன்றி” என்றார்.

“மோகன், இது நாம் இருக்கும் சமுதாயத்திற்கு, நாம் எல்லோரும் செய்ய வேண்டிய கடமை, அதனால் இதை பொிதாக்காதீர்கள். அந்த பிச்சைக்காரகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தால் அதுவே போதும். நீங்கள் எப்படி போகப்போகிறீர்கள், நான் உங்களை என் காாில் ட்ராப் செய்யட்டுமா ?”

“வேண்டாம், நான் வழக்கம் போல் பஸ்சில் போயிடுவேன்”.

மோகன் கல்லுாியை விட்டு வெளியில் வந்து சிறிது தூரம் நடந்து அங்கிருந்த ஒரு காாில் பின் கதவைத்திறந்து ஏறிக்கொண்டார். அதன் ட்ரைவர் திரும்பிகூடப் பார்க்காமல், “ஐயா, போன காாியம் என்னங்க ஆச்சு ?” என்றான்.

“எல்லாம் நல்ல படியா முடிஞ்சது, அந்த எஸ்.ஐ. செல்லதுரைக்கு ஃபோன் போட்டு அந்த பிச்சைக்காரங்களை நாளைக்கு ஒரு லாாியில கூட்டி கிட்டு போய், ஊருக்கு 20 கி.மீ. தள்ளீ இறக்கி விட்டுட சொல்லு.” என்றார்.

அப்போது அவருடைய செல் ஃபோன் ஒலித்தது. அதை எடுத்து அவர்,

“சொல்லு!”

“ம், ம், அப்படியா!, வொிகுட்”, என்றார்.

பிறகு ட்ரைவரைப் பார்த்து, “எஸ்.ஐ. க்கு ஃபோன் செய்து விட்டாயா ?”

“இன்னும் இல்லை, இப்பவே பண்ணட்டுமா, இல்ல ஆபிஸ் போய் பண்ணட்டுமா ?”

“இப்பவே பண்ணிடு, செல் ஃபோன்ல இருந்து பண்ணாதே, அந்த பி.சி.ஓ. -ல இருந்து செய், அந்த பிச்சைக்காரங்களை ஊருக்கு வெளியில கொண்டு போய் விடச்சொல்லாதே, அவங்களை போன மாசம் திறந்தாங்களே அந்த 5-ஸ்டார் ஓட்டல் பக்கத்தில விடச்சொல்லு, அப்படியே அவருடைய கவர் ரெடி, இன்னிக்கு ஈவினிங் அவர் வீட்டுக்கு வந்துடும்- னு சொல்லிடு”

ட்ரைவர் ஃபோன் செய்யப் போனபோது மனதில் குத்து மதிப்பாக ஒரு 20 லட்சம் அந்த 5-ஸ்டார் ஓட்டலில் இருந்து கறந்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அதை நினைக்கும் போதே அவர் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடியது.

—-

murmal@gmail.com

Series Navigation

முரளி இராமச்சந்திரன்

முரளி இராமச்சந்திரன்

மனிதாபிமானம்

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

கோமதி கிருஷ்ணன்


அந்த பெண் குழந்தை,2 ,2 1/2 ,வயதிருக்கும் அழகென்றால்கொள்ளை அழகு.குங்குமப்பூவும்,ரோஜப்பூவும் கலந்த நிறம்.கண்ணும்,மூக்கும் , நிறமும்கதுப்பு கன்னங்களும்,காச்மீரிகளுக்கே உரித்தான, விவரிக்கத்தெரியாத,ஒருதேஜஸும் .பகவானே;;இந்த குழந்தைக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை ? அது விதும்பி ,விதும்பி ,ஏங்கி ஏங்கி அழுவதைப்பார்த்து ,கமலின் நெஞ்சுஞ்சு உருகினாலும் ,கண்ணீர் விட முடியாத நிலைமை.

காரணம் ,அந்த குழந்தைகளின் காப்பகத்தில் வித்தியாசம் பாராட்டமுடியாது .தெரிந்தவா , தெரியாதவா பாகுபாடு கூடாது .தீவிரவாதிகளின் ஈவிரக்கமற்ற , கொலை வெறியால் , தாய் ,தந்தை உற்றம் உறவுகளை இழந்து , பாக்யத்தாலோ , துர்பாக்யத்தாலோ ,தப்பிப்பிழைத்த பிஞ்சுகளை- மாதங்களே ஆன குழந்தைகளிலிருந்து 7-8 வயதுவரைக்குமுள்ள ,குழந்தைகளுக்கு- அடைக்கலம் கொடுக்க ,இந்திய அரசாலும்,செஞ்சிலுவை , சங்கத்தாலும் ,ஏற்ப்படுத்தப்பட்ட காப்பகம் . அது தாற்க்காலிகமானதுதான் . கொஞ்ச நாளில்,குழந்த்தைகளை ,10-15 ,என்று பிரித்து ,பல இடங்களுக்குமாக அனுப்பிவிடுவார்களாம்.

ஒரு நடு வயது பெண்மணி , அந்த குழந்தையிடம் ஒரு ரொட்டித்துண்டையும் , ஒரு டம்பளர் பாலையும் கொடுத்து சாப்பிடச்சொல்லி மிரட்டிக்கொண்டிருந்தாள். கொஞ்சம் ,முரட்டுத்தனமான முகத்துடன் இருந்தவளை , பார்த்தே , மிரண்ட குழந்தை ,பாட்டிலில் பால் வேண்டுமென்று -பக்கத்தில் பாட்டிலில் பால் குடித்துக்கொண்டிருந்த ,ஒரு சின்னப்பாப்பாவை சுட்டிக்காட்டி- அழுதுகொண்டிருந்தது .அந்த பெண்மணிக்கு எவ்வளவோ வேலை .எத்தனையோ ,குழந்தைகளை-பலதரப்பட்ட ,பலவயதுப்பட்ட-கவனிக்கவேண்டிய பொறுப்பு .பாவம்;;அவளைச்சொல்லி ப்பிரயோஜனமில்லை .அழும்குழந்தைகள், அடம்பிடிக்கும் குழந்தைகள் ,உடம்பு சுகமில்லாத குழந்தைகள் ,அசிங்கம்பண்ணிவிட்டு,சுத்தம்பண்ணகாத்திருக்கும் குழந்தைகள் இப்படி பல.மொத்தமே15-ஆயாக்கள் தான் எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும். கமலும் , அதில் ஒருவள்தான். பாதி பெண்மணிகளும்,சம்பள்ளமில்லாமல் , சேவைமனப்பான்மையில் த்தான் வேலை பார்க்கிறார்கள் . கொஞ்சம் பொறுமையும் குறைவுதான்.

தன், பேரைக்கூட,சரியாக , சொல்லத்தெரியாத,அந்த சின்னக்குழந்தையிடம் வந்த கமல் , ‘அழாதே, பாப்பா; நீ,பெரியவள் ஆயாச்சே;;பாட்டிலில் பால் குடிக்கலாமா ?ரொட்டியை நான் விண்டு தரவா ?சமத்தா ,டம்ப்லரை எடுத்து பால் குடி பார்க்கலாம். நீ,ரொம்ப சமத்துப்பாப்பா இல்லையா ‘ என்று கொஞ்சி , அணைத்து , பாலை குடிக்க வைத்தாள் .அந்தகுழந்தை ,கமலின் கழுத்தை கட்டிக்கொண்டு ,விம்மினாலும் கொஞ்சம் சமாதானமானாள்.

அந்த குழந்தை ‘சரஞ்சீத் ‘த்தின் அம்மாவை ,கமலுக்கு நன்றாகவே தெரியும் .டில்லியில் , கமலுடன் ஸ்கூலில் படித்தவள் . பஞ்சாபில்,விவசாயியாயிருந்த,படித்த ‘ப்ரமீத் ‘த்தை காதலித்து, கல்யாணம் பண்ணிக்கொண்டாள் .டில்லி போலுள்ள , நகரத்தில் வளர்ந்தவளை ,கிராமத்தில் கொடுக்க ஸோனியாவின், பெற்றவர்கள்,இஷட்டப்படாதபோதும் , பெண்ணின் இஷ்ட்டப்படி,கல்யாணம் பண்ணி வைத்தாலும் ஸோனியா ,ப்ரமீத்துடனும் ,மாமியார்,மாமனார் , நாத்தனார்,மச்சினர்,தாத்தா ,பாட்டிஎன்று பெரியகூட்டுக்குடும்பத்தில் , கோதுமை , நெல் வயல்கள் , எருமைமாடுகள்,கன்றுகள் ,செம்மறிஆடுகள் என்று,எல்லோருடனும் ,எல்லாத்துடனும் ஒன்றி ,ஆனந்தமாகத்தான் வாழ்ந்துவந்தாள் .

கமலும் அனாதை தான். ஒரு தமிழ்தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவள் .தத்துத்தந்தை ராணுவத்தில் பணிபுரிந்தவர் . பங்களாதேஷ்,இந்தியா யுத்தத்தில் உயிரிழந்தார். சர்க்காரிலிருந்து எல்லாவித உதவிகளும் கிடைத்தும் ,படிப்பறிவில்லாத தாயை,உறவுக்காரர்கள் ஏமாற்றியதால் ,வறுமையால் வாடி,அம்மா , நோய்வாய்ப்பட்டு இறந்தாள்.உருப்படியாய் கிடைத்தது , கமலுக்கு ஸ்கூல்படிப்பு மட்டும்தான் . கடைசிக்காலத்தில் அம்மா , நோயால் அனுபவித்த துக்கத்தை நேரில் பார்த்த கமல் , ‘ நர்சிங்க் ‘ ப்ப்ப்படித்து , ராணுவத்திலேயே , பணியில் சேர்ந்தாள் .அம்மா,அடிக்கடி சொல்லுவாள். ‘கமல்;என் கண்ணே;; நீ , நன்றாய் இருப்பாய்.உன்னைப்போல் இரக்கமும் , சேவை மன்ப்பான்மையும் உள்ளவர்களை , பாருக்கறது ரொம்ப அபூர்வம். ஒரு அம்மா இப்படி சொல்கிறாளே , பெற்ற தாயாயிருந்தால் இப்படி சொல்லுவாளா ?என்று எண்ணாதே . நீ,கல்யாணமே பண்ணிக்காதே . நம் இந்தியாவில் குழந்தைகளுக்கும் , அனாதைகளுக்கும் பஞ்சமே இல்லை .மேலும் குழந்தைகளை பெற்று ,ஜனப்பெருக்கத்துக்கு, நீ,- சின்ன அளவில்க்கூட-காரணமாக வேண்டாம். கஷ்ட்டப்படும் ,ஜனங்களுக்கு , உன்னால் முடிந்த அளவு உதவி செய்.அதில் உனக்கு கிடைக்கும் மன நிம்மதி வேறெதிலும் கிடைக்காது . ‘என்று கமல் அதை வேதவாக்காய் எடுத்துக்கொண்டு ,பணி புரிந்து வருகிறாள் .

புக்ககம் போனபிறகும் , ஸோனியாவை ,கமல் அடிக்கடி பார்த்திருக்கிறாள். ஸோனியா வீட்டிர்க்கும் ,சென்றிருக்கிறாள் . குழந்தை சரஞ்சீத்தை ,அவளுக்கு நன்றாகத்தெரியும். ஆனால் ,இந்த காப்பகத்தில் , அதை வெளிக்காட்டிக்க முடியாது .

எல்லோரையும் , சுட்டு ,வெட்டி ,கொன்ற தீவிரவாதிகள் கண்ணில் ‘ப்ஹாம்ஹெளஸ் ‘ ஸில் தூங்கி க்கொண்டிருந்த ‘ சரஞ்சீத் ‘ படாத போனதும் , அந்தகுடும்பத்திலேயே ,அந்த பிஞ்சு மட்டும் தப்பி ப்பிழைத்ததும் ஏன் ? யாரோ கொண்டு விட்டுப்போன அந்தக்குழந்தை , மற்ற அனாதைக்குழந்தைகளுடன், _ குஜராத்பூகம்பம், பீஹார்வெள்ளம் , காஷ்மீர்தீவிரவாதம் , பஞ்சாப்கலவரம்_எல்லா, இடங்களிலிருந்தும் , கொண்டு வரப்பட்ட , குழந்தைகள் , குழந்தைகள் , குழந்தைகள் தான் .

அதுகளைத்தேடி ,உறவினர்கள் , தெரிந்தவர்கள் என்று வந்தவர்கள், ரொம்பவும் , குறைவு தான்.கொஞ்சம் விவரம் தெரிந்த குழந்தைகளுக்கும் ,உறவினர்கள்முகவரியோ , மற்ற விவரங்களோ சரியாக ச்சொல்ல த்தெரியவில்லை . பட்டுக்கொண்டு ,பொறுப்பேற்று , மாட்டிக்கொள்ள ,இஷ்ட்டப்படா தவர்களும் இருக்கலாம். அபூர்வமாக ,சில குழந்தைகள், வெளி நாட்டாரால் , முறையாக , தத்தெடுக்க ப்பட்டு ,போனார்கள். அந்தகுழந்தைகளின் இப்போதைய நிலைமை யாருக்குமே தெரியாது . ஆயிரம் சட்ட திட்டங்கள் இருந்தாலும் ‘தத்து ‘ என்று கொடுத்த பிறகு , யாரும் , அதைப்பற்றி கவலைப்படவில்லை என்பது தான் உண்மை .

‘ அடோப்ஷனு ‘ க்கென்று , குழந்தைகளை ,பார்க்க வருபவர்கள் ,எல்லோருமே , அழகாகவும் , நல்ல நிறமாகவும் , ஆரோக்கியமாகவும்,உள்ள குழந்தைகளைத்தான் , பார்த்து ,ப்பார்த்து தேர்ந்தெடுக்கிறார்கள் .கறுப்பு , ஒல்லி ,ஊனம் யாருக்குமேவேண்டாம். புதையுண்ட இடங்களிலிருந்தும் இடிபாடுகள்க்கிடையிலிருந்தும் ,காப்பாற்றப்பட்ட அனாதைகள் ,கலவரத்திலும் , அதிர்ச்சியிலும் , மூளை குழம்பின குழந்தைகள்,கைகால் ஊனமான, தலையிலும் ,உடம்பிலும் பலவித ,வெட்டுக்காயங்கள் பட்டு சற்றுவிகாரமான, தீக்காயம்பட்ட, இப்படி பலவித ,மன, உடல் ஊனம்பட்ட குழந்தைகள். ‘ஐய்யோ;;கடவுளே;;இந்த குழந்தைகளை ஏன் உயிரோடு , விட்டு வைத்திருக்கிறாய் ?தாய் தந்தையருடன் , இவர்கள் உயிரையும் எடுத்திருக்கக்கூடாதா ?இரக்கமற்ற ,இந்த உலகத்தில் , இந்த பிஞ்சு களை காப்பாற்றின கடவுளை ‘கருணைப்பிரபு ‘ என்று சொல்ல முடியவில்லையே ‘ கமல் தான் ,இப்படி மனதிர்க்குள் , புலம்புகிறாள் .

தாய், தந்தையர்களை இழந்து ,அனாதையாய் நின்ற ,தன்னை, பக்கத்து வீட்டிலிருந்த நல்லவர்களான, அவள் வளர்ப்பு பெற்றோர், எடுத்து வளர்த்து , ஆளாக்கியிரா விட்டால் , ஒரு கால் சற்று ஊனமாயிருந்த , அவள் கதி , என்னவாகியிருக்கும் ?

குழந்தை ‘ சரஞ்சீத்தை ‘ , தான் , எடுத்து வளர்க்கலாம் , என்று அபிப்பிராயம், அவள் மனதில் தோன்றியது உண்மைதான் . ஆனால் அழகும் , ஆரோக்கியமும், தாமரைப்பூவின் நிறமும் கொண்ட , அவளை , யாராவது விரும்பி ‘தத் ‘ எடுத்துக்கொண்டு போய் , வளர்ப்பார்கள் . ஊனமுற்ற , அழகில்லாத ,குழந்தைகளை த்தான், யாரும் விரும்ப மாட்டார்கள். ராணுவத்தில் , நர்ஸாகவும், நல்ல பணவரும்படியுமுள்ள எல்லோராலும், நல்லவள் , என்று ,போற்றப்படுபவளுமான ,கமலுக்கு, சிரமமில்லாமல்,குழந்தையை ,இங்கிருந்து , எடுத்து வளர்க்க, அனுமதி கிடைக்கும் . ‘பகவானே;;எனக்கு மன உறுதியும் நல்ல மனஸும்கொடு. உன் , லீலைகளை புரிந்து கொள்ளும் அறிவு என்க்கில்லை . ஒரு குழந்தைக்காவது, நல்வாழ்வும், படிப்பும், அன்பும், கொடுக்க ,எனக்கு அருள்புரி .அதர்க்குள்ள ஆரோக்கியமும், ஆயுளும், பொறுமையும் எனக்குக்கொடு . வளர்த்து ,குறைந்த பக்ஷம், இந்த சமூகத்தில் ,கொஞ்சம்,மனிதர்களுக்காவது ,ஏதாவது விதத்தில் ,சேவைபுரியும் படியாக ,உள்ள நிலையில் , ஒரு மனித ஜீவனை , வளர்த்து ஆளாக்க , சக்த்தியையும் அதிர்ஷ்ட்டத்தையும் , எனக்கு க்கொடு . முயன்றால் ,எந்த வித ஊனத்தையும், சரிபண்ணி , மனிதாபிமானியாக ஒரு குழந்தையை ,அளாக்க முடியுமே;;அதர்க்குள்ள , சக்த்தியைக்கொடுத்து, என்னை ஆசீர்வதியுங்கள் ஈசா ‘

கமல் ,திடமான ,மனத்துடன், மேற்க்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களுக்காக , குழந்தை காப்பகத்தின், ஆபீஸை நோக்கி , நடந்தாள் .

———-

viswanathan@rogers.com

Series Navigation

கோமதி கிருஷ்ணன்

கோமதி கிருஷ்ணன்