எஸ்ஸார்சி
அக்கினி போற்றப்படுவோன்
உதார குணமுடையோன்
அவன் அதிதி
எம் வேள்வியகம் வருக
பகைவரையொழித்து
அவர் தம் செல்வம்
கொணர்ந்து எம்வசம் தருக
ஏ அக்கினியே ஆற்றலின் இருப்பே
நினது படையால்
தச்யுக்கள் ஒழிய
அவர்தம் உணவுப்பண்டங்கள்
உம் வசமாகட்டும்
தேவர்களை வசமாக்கும்
நீவிர் எம்மையும் பாலிப்பீராக ( 5/4)
சூரியனே நின்னை
சுவபானுனென்னுமொரு
அசுரகுமாரன் இருள் கொண்டு மூடினான்
உலகங்கள்
திக் பிரமை கொண்டன
இந்திரன் வச்சிராயுதன்
சூரியன் சிக்கிய மாய வலைகள் விலக்கிட
அத்திரியே சூரியனைக்
கண்டு கொணர்ந்தான்
அத்திரி எனும் அப்பிராமணனே
கற்கள் சேர்த்து தித்திக்கும்
சோமம் பிழிந்தான்
தேவர்களைப்போற்றிய அத்திரி
கதிரவனின் கண்ணை
எடுத்து விண்ணிலே நாட்டினான் ( ரிக் 5/40 )
எவன் விழித்திருக்கிறோனோ
அவனையே
கவித்வம் விரும்புகிறது
இசைபொழியும் சாமம்
விழித்திருப்பவன் வசமாகிறது
அவன் நட்பிலே
சோமன் வாழ்வு அமைகிறது ( ரிக் 5/44)
மருத்துக்கள் மண்மீது மழையைச்செலுத்துகிறார்கள்
மேகங்களை உலுக்கி
நீரைச்சொரிகிறார்கள்
புவி அவர்களது
விண்ணும் அப்படியே
வான் வழி தெரிந்த அவர்ட்கு
மேகங்கள் இணங்கி
செல்வம் தருன்றன
சூரியன் உதிக்கும் போது
சோமம் இன்பமாய்ப் பருகி
துரிதப்புரவி மீதேறி
வான் வழியின் எல்கை தொடுகிறார்கள்.
மருத்துக்களே
சாமம் அறிந்த என்னைக்காத்து
பரதனாம் எனக்குக்குதிரையொடு
உண்ணும் உணவு தாரும்
அரசன் சுகம் பெறட்டும் உம்மால்
எமக்கு நிறை மக்கட்பேறும்
குன்றாச்செல்வமும்
நூறு பனிக்கால வாழ்வும் தாரும் மருத்துக்களே. ( ரிக் 5/ 54)
——————————————————————
- கடித விமர்சனம் – 7 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)
- நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள்
- ஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 – 25.5.2009)
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2
- தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1
- துரோகிக்கு மிகவும் நன்றி
- வாஷிங்டன் டிசியில் ஜெயமோகன் மாபெரும் பொதுக்கூட்டம்
- வேத வனம் விருட்சம்- 43
- ஜாதி மல்லி
- நிலவிலிருந்து செவ்வாய்ச் சென்று மீளும் நாசாவின் ஓரியன் பயணத் திட்டம் ! (கட்டுரை : 1)
- சங்க இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ள மரபு பாலியல்
- வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்
- இந்திராபார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா
- ” புறநானூற்றில் கைக்கிளை “
- நண்பர் சின்னக்கருப்பனுக்கு நட்புடன் சில கேள்விகள்
- இஸ்லாம் குறித்த நேசக்குமாரின் கட்டுரை: வஹ்ஹாபியிடம் என் சில கேள்விகள், மேலும் நேசக்குமாருக்கு என் சில விளக்கங்கள்
- ஒரு பதிவை முழுமை செய்கிறேன்
- மழை கோலம்
- அலைதலின் பின்னான குற்றச்சாட்டு
- உதிரிகள் நான்கு
- பால்டிமோர் கனவுகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஒரு காதலனின் அழைப்பு கவிதை -14 பாகம் -1
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 46 எப்போது விளக்கொளி மீளும் ?
- ஆரோக்கியத்தின் பாடல்
- குதிரைகள் கடந்து செல்லுதல்
- அடிவானத்திலிருந்து நகரத்திற்கு
- மேம்பால இடிதல்களும் மேல்பூச்சு நடவடிக்கைகளும்
- அரசியல் சூறாவளியால் அதிர்ந்த இங்கிலாந்து
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திஐந்து
- சோறு
- காதலிக்க ஒரு விண்ணப்பம்
- விரியும் வலை
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிமூன்று