முன்னாள் பிகார் டிஜிபி ஓஜா
ஸிவான் எம்பி-ஆக இருக்கும் மொகம்மது ஷஹாபுதீனின் ஐ.எஸ்.ஐ தொடர்புகள் மற்றும் குற்றவாளிகளுடனான தொடர்பு பற்றிய அறிக்கையை பிகார் அரசாங்கத்திடம் சமர்ப்பித்ததும் பிகார் டிஜிபி ஓஜா டிஸ்மிஸ் செய்யப்பட்டிருக்கிறார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழுக்காக அருண்குமார் எடுத்த பேட்டியிலிருந்து.
உங்கள்து டிஸ்மிஸ் அரசியல்ரீதியானது என்று கருதுகிறீர்களா ?
அரசாங்கத்தின் ‘மூளை ‘ என்றறியப்படுபவர் ஜெயிலுக்குச் சென்று குற்றம்சாட்டப்பட்ட எம்பியை எல்லோரும் அறிய கொண்டாட்டத்துடன் சந்திக்கிறார். நான் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முறையும் தவறு தான். வேறென்ன சொல்லமுடியும் ?
லாலு பிரசாத் யாதவ் ஜெயிலுக்குச் சென்று எம்பியை சந்தித்ததைச் சொல்கிறீர்களா ?
எல்லோருக்கும் அது தெரியும். மக்கள் முட்டாள்கள் அல்லர்.
லாலு உங்களை ஒரு சதுரங்கக்காய் போல தனது அரசியல் விளையாட்டில் பயன்படுத்திக்கொண்டாரா ?
யாரும் என்னை ஒரு சதுரங்கக்காய் போல பயன்படுத்திக்கொள்ளமுடியாது என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். அப்படிப் பயன்படுத்தமுடியும் என்றால் என்னை இப்படி டிஸ்மிஸ் செய்திருக்கமாட்டார்கள்.
நீங்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள் என்று சந்தேகித்தீர்களா ?
அது வருகிறது என்று எனக்கு எப்போதும் தெரியும். நான் ஷஹாபுதீன் பற்றிய வழக்குகளை நடத்தியவிதம், இந்த அரசாங்கத்துக்கு மிகவும் சங்கடம் தருவதாக இருந்ததுபோலத் தோன்றுகிறது.
உங்களால் சமாளிக்கமுடியாத படி அளவு மீறிவிட்டார்களோ ?
இல்லை. நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குத் தெரிந்தே இருந்தது. நான் சரியானபடிக்கு சட்டம் ஒழுங்கைக் கொண்டுவர முயற்சித்தேன். ஆனால் அரசாங்கம் துரதிர்ஷ்டவசமாக என் பக்கம் இல்லை. அரசாங்கம் தனது வேலையாளாக போலீஸ் இருக்க வேண்டும் என விரும்புகிறது.
இப்படி வெளிப்படையாகப் பேசும் குணம் உங்களது இந்த நிலைமைக்குக் காரணமா ?
தாங்கமுடியாத நிலை வந்தால் ஒரு போலீஸ் அதிகாரி என்னதான் செய்யமுடியும் ? ஒரு பெரும் காரியத்துக்காக சில தடைகளை உடைக்கத்தான் வேண்டும்.
இந்த டிஸ்மிஸ்க்கு எதிராக போராடுவீர்களா ?
நிச்சயமாக. இந்த விஷயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துக்கொண்டு செல்வேன். நான் ஏன் டிஸ்மிஸ் செய்யப்பட்டேன் என்பதை கண்டறிய முயல்வேன்.
ஷஹாபுதீனுக்கு எதிரான நீங்கள் திரட்டிய தகவல்களும் முடிவு பெறாத வேலையாய் இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அந்த விஷயம் நீர்த்துப்போய்விடும் என்று கருதுகிறீர்களா ?
சும்மா உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும் ஆள் இல்லை நான். நான் சுப்ரீம் கோர்ட்டிற்குச் செல்வேன். ஷஹாபுதீனுக்கு இருக்கும் தொடர்புகளைப் பற்றி போதுமான தடயங்கள் என்னிடம் இருக்கின்றன. இந்த வழக்கு நீர்த்துப்போகாது.
- சோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து
- யெளவனம்
- உள்வீடு
- கால் கொலுசு
- என்ன உலகமோ
- அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)
- வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
- ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்
- கடிதங்கள் – டிசம்பர் 11,2003
- கடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003
- நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்
- ‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘
- ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு
- மனித நல்லிணக்கம்.
- காபியிலும் ஆணாதிக்கம்
- கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்
- வைர வியாபாரமும் வன்முறையும்
- வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்
- சில எதிர்வினைகள்
- அன்புள்ள மனுஷ்யபுத்திரன்
- காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்
- முரசொலி மாறன்
- பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை
- எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘
- பாரதி, மகாகவி: வரலாறு
- பாரதி நினைவு நாள்
- யானை பிழைத்த வேல்
- பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்
- பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை
- விடியும்! – (26)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)
- வினைத்தொகை
- மேல் நாட்டு மோகம்
- அம்மண தேசம்
- காதல் மாயம்
- ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
- நட்பு
- கடவுள்கள் சொர்க்கத்தில்…..
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- கொஞ்சம் தள்ளிப்போனால்
- தேர் நிலைக்கு வரும் நாள்
- தேர்க்கவிதை
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு
- கங்கைகொண்டசோழபுரம்
- புதசுக்கிரயோகம்
- கவிதைகள்
- கவிதைகள்
- என் புத்திக்குள்
- அரவம்.
- காகம்.
- ஏ ! பாரதி
- ஆதாரம்
- கபிலர் பாறை
- நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?
- இணையம்