புதுப்புனல்
புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!
கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலாண்டிதழாக வெளிவந்து நவீன தமிழிலக்கியத்திற்கு குறிப்பிடத்த பங்காற்றிய பன்முகம் இதழைக் வெளியிட்டுவந்த புதுப்புனல் பதிப்பகம் புதுப்புனல் என்ற பெயரில் ஒரு மாத இதழை இந்த மாதத்திலிருந்து வெளியிடத் தொடங்குகிறது. புதுப்புனல் பதிப்பகம் நடத்தி வரும் திரு. ஆர்.ரவிச்சந்திரன் இதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளார். கதை, கவிதை, கட்டுரை, புதிய எழுத்தாளர்கள் அறிமுகம், பதிப்பகத்தின் குறிப்பிடத்தக்க நூல் வெளியீடுகள் குறித்த விவரங்கள் என பல பகுதிகளைக் கொண்டதாக அமையும் புதுப்புனல் இதழுக்கு படைப்புகள் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்குக் கடிதம் எழுதவும் அல்லது கீழ்க்கண்ட கைபேசியைத் தொடர்பு கொள்ளவும்.
மாதாமாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை புதுப்புனல் அலுவலகத்தில் புதுப்புனல் வாசகர் வட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
சந்தா விவரங்கள் தரப்பட்டுள்ளன. விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன.
விலாசம்: புதுப்புனல்
பாத்திமா காம்ப்ளெக்ஸ்
117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
முதல் தளம்(ரத்னா கபே எதிரில்)
திருவல்லிக்கேணி
சென்னை – 600 005
கைபேசி:9962376282 (சாந்தி ரவிச்சந்திரன்)
- செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி
- முள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா
- தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…
- சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
- கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
- கலை இலக்கிய விழாவில் ‘வல்லினம்’ இதழ் அகப்பக்கமாக புதிய அவதாரம்
- புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!
- கருத்தியல் தர்மம் காக்க!
- சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே
- புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்
- கோடை
- என்றாலும் கவிதையே
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)
- வேத வனம் –விருட்சம் 49
- அழகு
- தாயெனும்…
- புன்னகை
- முடிவாகவில்லை
- வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10
- யார் அந்த சண்முகம்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று
- தேவை கருணை பார்வை
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- பாதையையும் பயணமும்
- மிச்சாமி துக்தம் : (துக்டம்)
- சற்றுமுன் வந்த மின்னஞ்சல்
- தடை
- ’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”
- காட்டுவா சாகிப்
- தவிர்க்க விரும்பும் தருணங்கள்
- பண்டிகைகள்
- தலைகவிழல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)