– வேதா.
உன்
தீண்டலில் நனைந்து
கரைந்துவிட்ட காற்றோ ?
நீ
தொட்ட நீர்க்குமிழியாய் நான்!
சிதறிய நீர்த்துளியும்,
சிறைபட்ட காற்றும் போல்,
எதுவும் நிரந்திரமில்லை!
அசையாத மேகம், அழகான வானம்,
அலைந்து திரியும் பட்டாம்பூச்சி,
ஆர்ப்பரிக்கும் கடல் அலை,
எதுவும் நிரந்திரமில்லை!
உன் அருகில் நானும் தான்…!
ஆனால்,
நீ தந்த நிஜங்கள் மட்டும்,
நிறம் நிறமாய்! நிரந்தரமாய்!
நினைவால் அரவணைத்து – என்
அறிவினைச் செதுக்கிய காலங்களும்,
நீங்காமல் தொடரந்து வந்து – என்
நிம்மதி மீட்டிய நேரங்களும்,
திகட்டாத தாலாட்டாய்
நீ தந்த தீபாவளியும்,
உன்
தமிழும், தத்தளிப்பும்,
கரைத்து விடும் சிரிப்பும்,
நடையும், நறுமணமும் – என்னை
நனைக்கும் வார்த்தைகளும்
உக்கிரப் பார்வை உரசலும் – உன்
உள்ளத்தில் ஒளுத்த காதலும்,
அன்பும், பண்பும் – என்னை
அலைக்கழித்த அசைவுகளும்,
அலைய வைத்த கவிதைகளும்,
ஆசையாய் முகம் தொட்டு – நீ
ஆழம் புதைத்த அத்தனையும்,
ஆயிரமாயிரம் ஆண்டுகளாலும்,
அழிக்க இயலா அதிசயங்கள்!!
என் பிரியமே!
பிரிய மனமின்றி
பிரியப் போகிறேன்
பிரிந்தாலும் பிறைநிலவாய்
பின் தொடர்வேன் உன் வழியெல்லாம்!
விழி மூடித் திறக்கும் முன்
வழிந்து விழும் கோபம்தான்
விழித்திருக்கும் உன்னை
வழுக்கிவிடப் பார்க்கிறதோ ?
வழிநெடுக வருவேன்தான்
வானத்து நிலவாக,
வந்தாலும், வழிநடக்கும் கால்களே
உன்னை வழிநடத்தும்!
உன் மலர்ந்த முகம் மறைத்து
மடல் விரிக்கும் கோபத்தை
மறுப்பாயோ ?
இல்லை மறப்பாயோ ?
மனம் விரும்பிக் கேட்கிறேன் – என்னை
மன்னிக்கும் வரமொன்றை!
மனதாரத் தருவாயா ? – என்
மரணத்தின் பொழுதாவது
மாலைகொண்டு வருவாயோ ?
வந்தால்,
என் மனம் கொண்டு தரிசிப்பேன்
நீ மறக்காத என் நினைவை!
மன்னிக்க மறந்தாலும்,
மனம் ஏற்க மறுத்தாலும்,
உன் சந்தோசச் சிதறலுக்கும்,
பாசப் பகிர்தலுக்கும்,
நாளைக்கும் சேர்த்து
நான் நானாகவே!!
உன்னோடு நடைபழக,
மனதோடு மணம்பரப்ப,
கனவோடு கவிதை இறைக்க,
காதோடு கதைகள் பேச,
இன்னும் என்னவெல்லாமோ!!
என்றாலும் அவையெல்லாம்,
நான் நானாகவே…
மாற்றங்களும், ஏமாற்றங்களும்
ஏக்கமும், எதிர்பார்ப்பும்
என்னை எதுவும் செய்துவிட்டாலும்,
உன்னை மாற்றி வைத்து
மாற்றாதே! – மறுபடியும்
என்னை ஏமாற்றாதே!
***
– வேதா.
tamilmano@rediffmail.com
- கூலியில்லா வேலைக்காரி
- யாரிந்த தீவிரவாதி ?
- அறிவியல் மேதைகள் ஆல்ஃப்ரெட் பெர்னார்ட் நோபல் (Alfred Bernard Nobel)
- விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன் [Carl Sagan] (1934-1996)
- பாட்டிகளின் மகத்துவம்
- புதிய வகை உயிரை உருவாக்க அறிவியலாளர்கள் முனைகிறார்கள்.
- ராங்கேய ராகவின் படைப்புலகம்
- சந்தேகத்துக்கு மருந்தில்லை (எனக்குப் பிடித்த கதைகள்- 37 -லா.ச.ராமாமிருதத்தின் ‘ஸர்ப்பம் ‘)
- பிரியங்களுடன்
- காணிக்கை!
- பொதுவுடமை.
- ரசிக்க பிடித்தன..
- நீச்சல் பயிற்சி
- நட்பு
- நினைவு
- குறை தீர்ந்த குழந்தைகள்
- அப்பாவின் ஓவியம்
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது – 5 (தொடர்கவிதை)
- இந்த வாரம் இப்படி – நவம்பர் 24 2002
- கவிதா:
- ஞானோபதேசம்
- சிந்து சமவெளி நாகரிகமும் சாதிய சமுதாய அமைப்பும்
- மறக்கப்பட்டவர்கள் : மலேசியாவில் ஏழைகள் இந்திய வம்சாவளியினரே
- பாட்டிகளின் மகத்துவம்
- தண்ணீர் யாருக்குச் சொந்தம் ?
- தண்ணீர் இனவெறி
- தண்ணீர் : பொலிவியாவில் எதிர்ப்புகள்
- நாட்டு நாய்களும் நகரத்து நாய்களும்
- புகை
- பூவும் நாரும்
- கவர்ச்சி காட்டும் கண்ணகி
- மனமெங்கும் வாசமோ ?
- கனவு நாடு
- சா(சோ)தனை
- மத்யமர்(சுஜாதா மன்னிப்பாராக….)