செங்காளி
(வரண்டுபோன நிலத்தைக் கவலையோடு
பார்த்தபடி நின்றுகொண்டிருக்கும் அவனைப்
பார்த்து அவள் கேட்கின்றாள்)
நெலத்தநீங்க பாத்தபடி மச்சானே – ஏன்
நொந்துபோயி நிக்கறீங்க மச்சானே
பொன்விளைந்த பூமியிது பொன்னாத்தா – இப்ப
பொளந்துபோயி இருக்குதடி பொன்னாத்தா
பொளந்தபூமி வெளைவதெப்பொ மச்சானே – நானும்
பொண்டாட்டியா ஆவதெப்போ மச்சானே
காவிரியில் தண்ணிவந்தா பொன்னாத்தா – நல்லா
கழனிமுழுக்க வெளஞ்சிடுமே பொன்னாத்தாா
காத்திருந்தா வெளச்சலுக்கு மச்சானே – நான்
கிழவியாகிப் போயிடுவேன் மச்சானே
கிழவியாகிப் போனாலென்ன பொன்னாத்தா – இந்தக்
கிழவனுன்ன கட்டிக்குவேன் பொன்னாத்தா
கட்டிக்கிட்டா போதுமாயெம் மச்சானே – நமக்குக்
குழந்தகுட்டி வேணாமாயெம் மச்சானே
குழந்தகுட்டி ஏதுக்கடி பொன்னாத்தா – நமக்குக்
கூழுக்கே வசதியில்லே பொன்னாத்தா
கூழுகாச்சி ஊத்திடுவேன் மச்சானே – நல்லாக்
கூலிவேலை செஞ்சுநானு மச்சானே
கூலிவேலை வேண்டாமடி பொன்னாத்தா – நீயெங்
கூடயிருந்தாப் போதுமடி பொன்னாத்தா
(இப்படிச் சொல்லிக்கொண்டே அவன் அவள்
தலையை அன்புடன் வருடிக்கொடுக்க இருவரும்
தங்கள் கவலையை மறந்து நிற்கின்றனர்)
natesasabapathy@yahoo.com
- உடலில் மாற்றம்.
- ஆனந்த ‘வாசன் ‘
- சாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்
- சாத்திரமேதுக்கடி ?
- பூமத்திய ரேகை
- கடிதங்கள் – பிப்ரவரி 12, 2004
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- தேசபக்தியின் தேவை
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004
- பின் விளைவு
- அங்கீகாரம்
- உண்மை ஆன்மீகம்
- கவிதை
- குறியும் குறியீடும்
- காதலுக்கோர் தினமாம்
- உன்பெயர் உச்சரித்து
- புதிய கோவில் கட்டி முடியுமா ?
- நீ கூடயிருந்தாப் போதுமடி..
- காதலர் தினக்கும்மி
- சுவர் துளைக்கும் வண்ணத்துப்பூச்சி
- கவிதைகள்
- நான் கேட்ட வரம்
- ஈடன் முதல் மனிதம்
- இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
- மிளகுமாமி சொல்றது என்னன்னா
- அன்புதான் அனைத்துக்கும் அச்சாணி.
- புதிய சாதிகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6
- விடியும் -நாவல்- (35)
- இரு கதைகள்
- துகில்
- தேடல்
- கல்லூரிக் காலம் – 8 -சைட்
- ‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1
- இவர்களென்ன மார்க்கண்டேயர்களா… ?
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- எதிர்பார்ப்பு
- ஆனைச்சாத்தன் கவிதைகள்
- கண்ணா நீ எங்கே
- முதலா முடிவா ?
- அன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து
- ஒரு கவிதை
- எரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்
- பற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)
- விருமாண்டி – சில எண்ணங்கள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘