ஹெச்.ஜி.ரசூல்
தலையால் நடந்து கொண்டிருக்கும்
ஒரு வினோத பட்சியின் பின்னே
துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன்
கைகால் முளைத்த மரங்கள்
ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை
பூமியில் வரைந்து செல்கிறது
எனக்கென தென்பட்ட திசையெங்கும்
வருடிப் புணர்ந்த கனவின் துளிகள்
ஒன்றின் மேல் மற்றொன்றாகி
சமாதிகளில் புதைக்கப்பட்ட
உடல்களின் பெருங்கூட்டம் எங்கும்
அலையடித்து கிளம்பும் பரவெளியில்
மூங்கில் காடெங்கும் சாய்ந்தலைந்து
அறுபட்ட காதுகள் தொங்க
விழிகளற்ற கொடிமர வேலிகள்
உமிழ்நீர் துப்பல் சிதறல்களில்
துருப்பிடித்து கருகி சாம்பலாகின.
பேராறுதல் சொல்ல வார்த்தைகளற்ற
தலைகீழ் பட்சியின் நாவுகளில்
பிரபஞ்ச ரகசியம் ஒளிந்து கிடந்த்து.
நீலக்கண்கள் சூடி பட்சியை தொட எத்தனித்த
ஒவ்வொரு விரல்களின் நுனிகளையும்
நெருப்புப் பந்துகள் பற்றி எரித்தன.
போதை வெறியூட்டப்பட்ட சுழற்சியில்
இறக்கையின் திமிறடக்கி
பட்சியை இறுகி கட்டியணைத்தபோது
நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.
mylanchirazool@yahoo.co.in
- மருத்துமலை எங்கே இருந்தது (பாகம் 2)
- ஹோமரின் ‘இலியட்’ காவியத்தின் முழு தமிழாக்கம்
- காரைக்காலில் ஒரு தனித்துவமான சுனாமி நிவாரணக் கட்டுமானப் பணி
- உயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு
- இலை போட்டாச்சு ! -20 அடை – இரண்டாம் வகை
- தண்ணீரை தனியார் மயமாக்காதே – பசுமை தாயகம் பிரசாரம்
- நான்கு சங்கர மடங்களையும் அலங்கரித்த ஞானியர் பரம்பரை
- கடிதம்
- ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 10
- சுக்கிர நீதியை – அர்த்த சாஸ்திரத்தை தமிழாக்கம் செய்த பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
- தூர்மண(¡) குச்சு
- கடித இலக்கியம் – 48
- சிங்கப்பூர் வாசகர் வட்டம் – கதை விவாத நிகழ்வு
- பெண் எழுத்து
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:4
- இலை போட்டாச்சு ! – 19 – சிற்றுண்டிகள் அடை – ஒரு வகை
- வால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் நுட்பக் கருவிகள் -3
- காதல் நாற்பது (13) – காதலை அழைத்தது காதல் !
- தைத்திருநாள் விழா கவியரங்கம்—–3
- கவிதை வடிக்கலாம் – தமிழிசைப் பாடல்
- நீலக்கண்கள் சூடிய வினோத பட்சி
- என் பெயரை நான் மறந்து/பெயர் அழகு/போதி மரம்
- அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!
- தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் இரண்டு: நள்ளிரவில்…
- மடியில் நெருப்பு – 29
- நீர்வலை – (15)
- மறை வாள் வீச்சு