எம்.ரிஷான் ஷெரீப்,
அவன் சோலைகள் பூத்த காலமொன்றில்
ஏகாந்தம் உலவி ஏழிசையும் இசைத்திற்று
காடுலாவி மணம் பூசித்தென்றலும்
கால்தொட்டுக் கெஞ்சிற்று
அப்பொழுதில்
சொல்லொணாப் பிரியத்தினைக் கொண்டு
சேமித்துப்பிதுங்கி வழிந்திடும் மன உண்டியலைப்
பலகாலங்களாகப் பத்திரப்படுத்திவந்தான்
எடுத்துச் செலவழிக்கவோ
எவர்க்கும் தானம் செய்திடவோ
உளமொப்பாமல் ஒரு துணைக்கு மட்டுமே
கொடுத்துக் களித்திடக் காத்திருந்தான்
சூழப் பெருவெளி, ஆழப்பெருங்கடலின்னும்
நீலவானெனப் பார்க்கும் அத்தனையிலும்
அதனையே நினைந்திருந்தான்
இராப்பொழுது தோறும்
விழிசோரும் கணம் தோறும்
முப்பொழுதும் ஒரு துணையே
தப்பாமல் கனாக் கண்டான்
இணையெனச் சொல்லிக் கொண்டு
நீ வந்தாய்
ஏழு வானங்கள், ஏழு கடல்கள்,
ஏழு மலைகளை விடப் பாரிய அன்பை
வழிய வழிய இரு கைகளில் ஏந்தி
உன்னிடம் தந்து பின் பார்த்து நின்றான்
பாழ்நதிக்கரையோரம் இரவுகளில்
கருங்கூந்தல் விரித்து ஓலமாய்ச் சிரிக்கும்
ஒரு பிடாரிக்கு ஒப்பாக
நீ சிரித்தாய் – பின்
அவனது அன்பையும் பிரியங்களையும் அள்ளியெடுத்து
ஊருக்கெல்லாம் விசிறியடித்தாய்
ஒரு கவளம் உணவெடுத்து
அதில் சிறிது நஞ்சூட்டிக்
கதறக் கதற அவன் தொண்டையில்
திணித்திடவெனத்துடித்தாய்
இன்று இடையறாது வீழும்
அவனிரு விழித்துளிகளில் உயிர் பெற்று
உனது ஆனந்தங்கள் தழைக்கட்டும்
– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி – அநங்கம் (மலேசியா இலக்கிய இதழ்)
mrishanshareef@gmail.com
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- நிருத்தியதானம்
- இது பின்நவீனத்துமல்ல-2 (மொழி அறிவும் ஆதிக்க மனோபவாமும்)
- சமஸ்க்ருதம்: யோசிக்கும் வேளையில்…..
- குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009
- கவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை – ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டுவிழா
- தேறுக தேறும் பொருள்
- தமிழ் இலக்கியத்தோட்டம் விண்ணப்பப்படிவம்
- ஜெயமோகன் நிகழ்ச்சி நிரல்
- யுகமாயினியின் ஆகஸ்ட் மாத இலக்கியக் கூடல்
- படைத்தல் விதி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 47 << காதலி கனல் அரங்கு >>
- நஞ்சூட்டியவள்
- பாரமா ? ஞானமா?
- நான்கு கவிதைகள்
- என் காதலி வருவது போல்
- வேத வனம் – விருட்சம் 45
- வழியனுப்பு
- சிங்கப்பூர் தேசிய தினம் 44
- சுவர்கள்
- மூனாவது
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஏழு
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினைந்தாவது அத்தியாயம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – 1
- மக்களாட்சியும் மணிமண்டபங்களும்
- பேருந்து பயணத்தில் ஏற்பட்ட சிறு அனுபவம்
- ‘ரிஷி’யின் கவிதைகள்
- பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா (1925-2004)
- பசி:
- நேற்று தொடங்கிய ஒரு மழைக்காலம்
- உடைந்த பொம்மைகள்
- சம்பவம்
- இடைவெளி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -2 (முன் பாகத் தொடர்ச்சி)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -6