ஸ்ரீனி.
கனவுக்கோட்டைகளின் கதவுகளினின்று
வெளியே தள்ளப்பட்டு
போர்வை வாயிலில் சூரியனை எதிர்கொண்டு
முகம் சுருங்கும் சோம்பல் காலைப்பொழுதுகள்.
காலத்தின் நகர்தலை காலண்டரின் படபடப்பு சொல்லினும்,
நேற்று போல் தோன்றும் உன்னோடிருந்த நாட்கள்..
பிரிவுக்கு விடைகொடுத்து பின்னிப்பிணைந்த நாட்கள்..
பனிமூட்டக் காலைகளில் பனித்துளி தாங்கும் புதுமலராய்
ஒற்றை முடியில்
சொட்டும் ஈரத்துடன் நீ என்னை எழுப்பிய நாட்கள்..
என் சோம்பல் நேரங்களில்
உன் படபடக்கும் விழிகளும்,துடிக்கும் உதடுகளும்
கடிகாரக் கால்களும் கண்டு
நீ சொன்னதை மறந்தாலும், சோர்விழந்து நான் எழுந்த நாட்கள்..
மணநாள் மறுபடி வருமெனும் சமாதானத்தை மறுத்து,
எங்கோ வெறிக்கும் உன் குளிக்கும் விழிகளின்
கொந்தளிப்பை மறந்து, ஊடல் இன்பத்தில்
இந்த டாவின்சியின் மோனொலிசாவாய்
உன்னை ரசித்து மகிழ்ந்த நாட்கள்…
‘மலருக்குள் மலர் ‘ – என் கவிதையைக் காட்டி
வெட்கத்தின் சாயலை உன் விழிகள் முதலாய் காட்ட
குழம்பிய என்னை, சற்று அழுந்தவே குட்டி
உயிரொன்று புதிதாய் உருகொண்ட சேதியை
என் காதிற்குள் ரகசியம் சொல்லி,
என் கழுத்தைக் கட்டிக்கொண்ட நாட்கள்…
இன்று,
மஞ்சள் மாலை நேரங்களிலும்
இதமான காலை நேரங்களிலும்
தேடுகிறேன் தேவதையே உன்னை
‘உன்ன போலவே இருக்காடா உன் கொழந்த ‘
அதிலும் கூட என்னை தவிக்க விட்டு விட்டாய்,
உணர்வுள்ள என் பிரதிபலிப்பாய் நம் மகள்
உணர்வற்ற உருவப்படங்களாய் நீ..
அதிகாலை அவசரங்களிலும்,
மாலை மயக்கங்களிலும்,
மறந்து போய் உன்னிடம் உன்னைப்பற்றிச் சொல்லாதது பல..
ஒரேயொரு முறை உன் முகத்தோடென் முகம் உராய்ந்து
சொல்லாத சிலவற்றை சொல்ல நினைத்து
தேடுகிறேன் தேவதையே உன்னை.
மறுபடி எழுந்து வாயேன் !
- புராதன ஏரியின் தட்பவெப்ப ரகசியங்கள்
- எட்டாத தொலைவு
- பனி
- குழவிக் கூடு குவலயம்..
- தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)
- குமட்டும் குறள் ஹைக்கூக்கள்
- பிறவழிப் பாதைகள் – சிறுபத்திரிக்கைகள், புனைகளம், கதைசொல்லி, அட்சரம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 1 – புதுமைப் பித்தனின் ‘மனித யந்திரம் ‘
- தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)
- திலகபாமாவின் கவிதைகள் – ஒரு மதிப்புரை
- காஷ்மீர் புலாவ்
- சிந்தி காய்கறி கூட்டு
- கண்ணுக்குள் உடலின் கடிகாரம்
- பாஞ்சாலி ராஜ்யம்
- தேடுகிறேன் தேவதையே !
- விளையாட்டுப் பொம்மை
- மீட்டிங்…
- கொடியேற்றம்
- முகங்கள்
- குளிர்! குளிர்! குளிர்!
- எதற்கும் தயாராகி நிற்போம்!
- தெளிவு
- குமட்டும் குறள் ஹைக்கூக்கள்
- ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா ‘ (அறத்தைக் காப்பாற்றினால், அது காப்பாற்றும்)
- பெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதனின் கட்டுரைக்கு எதிர்வினை
- குரு தட்சிணை