த.துரைவேல்.
சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே அதை தூற்றுவது எனக்கொண்டிருப்பது ஒரு நோக்கமாகவும், அத்தகைய தூற்றல் தமிழ் மொழிக்கு சேர்க்கும் பெருமையாக எண்ணுவதும் இம்மடலின் நோக்கம் எனத்தோன்றுகிறது. இரண்டுமே தவறானது.
சமஸ்கிருதம் முற்காலத்தில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தினர் என்பதை ஒருவாறு ஒத்துக்கொள்ளும் ஒருவர் இப்போது பார்ப்பனர் மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பதால் அது பார்ப்பன மொழியாகிவிட்டது என்கிறார். அது மொழியின் தவறு இல்லை அல்லவா?. ஒரு மொழியை ஒரு மதத்தை ஒரு சாதியை சார்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அவற்றை அச்சாதியினருக்கே உரிமையாக்கிவிடுவது ஏமாளித்தனம் இல்லையா?
மற்றொன்று சம்ஸ்கிருதத்தை மற்ற சாதியினர் பயன்படுத்தவில்லை விரும்பவில்லை என எப்படி. சொல்லுகிறார்கள் என தெரியவில்லை. நான் தமிழுக்கு அடுத்தபடியாக விரும்பும் மொழியாக சமஸ்கிருதம் உள்ளது.
கோயிலுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் அர்ச்சகரின் அர்ச்சனை சமஸ்கிருதத்தில் இருப்பதையே வேண்டுகிறார்கள். அவர்களின் பெரும்பாலோர் தமிழ் கற்றவர்கள்,நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடல்களில் திளைப்பவர்கள் (தமிழ் விரோதிகள் அல்ல). இவர்களுக்கெல்லாம் சமஸ்கிருதம் பயன்படும் மொழியாகவே உள்ளது. இந்துமதத் தத்துவங்களில் ஈடுபாடுகொண்டவர்கள் கணிசமானவர்கள் அனத்து சாதியினரிலும் உள்ளனர். அவர்கள் சமஸ்கிருதத்தை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் திருக்குரான் அதற்கான மொழியில் ஒலிப்பதைப்போல் இந்தியா முழுவதும் கோயில்களில் சமஸ்கிருதம் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. சமஸ்கிருதத்தை செத்த மொழி என அனைவர் சார்பிலும் கூறுவேன் என்பது வெற்று அகம்பாவம் மட்டுமே.
செத்த மொழியென்பதற்கான வரையறை என்ன? மனிதர்களின் பேச்சுவழக்கில் இல்லாதது அதன் வரையறை என்பதாக யார் முடிவெடுத்தது?. சில நாட்டில் பல தலைமுறையாய் வாழும் தமிழர்கள் இடத்தில் தமிழ் பேச்சுமொழியாக இல்லை. அதற்காக தமிழை அவர்களைப்பொருத்தவரை ’அவ்வாறு’ கூறமுடியுமா?
என் தமிழ்மொழியின் பெருமையை மற்றொரு மொழியை தாழ்த்துவதன் மூலம்தான் உயர்த்தமுடியும் எனக்கூறுவது என் தமிழை பழிப்பதாக கருதுகிறேன். அவ்வாறு பழிப்பவர்கள் தமிழின் பெருமையை அறியாதவர்கள். அவர்களால் என்றுமே தமிழுக்கு நன்மை விளையப்போவதில்லை.
ஏன் சமஸ்கிருதத்தை வெறுக்கிறார்கள்? அது பார்ப்பனர்களை உயர்த்தி மற்றசாதியினரை தாழ்த்தும் சில வாசகங்களை கொண்ட நூல்களை கொண்டிருக்கிறது என்பதாலா? அவ்வாறிருந்தால்கூட அதற்காக ஒரு முழு மொழியையும் வெறுத்துவிட வேண்டுமா?
அறிவியலை எடுத்துக்கொண்டால் விமானம், அணுசக்தி, விண்வெளித்துறை ஆய்வு அனைத்தும் ஆதிக்க வெறியர்கள் போருக்காக பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவையே (இவற்றில் முக்கியமான ஆய்வுகள் ஹிட்லரின் ஜெர்மனியில் நடத்தப்பட்டவை) அவற்றில் தீங்கானவற்றை விலக்கி நல்லனவற்றை பயன்படுத்துவது தவறானதில்லை எனும்போது சமஸ்கிருதத்தில் நமக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையற்றவற்றை தவிர்த்துவிடுவதில் என்ன தவறிருக்கிறது?
சமஸ்கிருதம் மொழியின் பலநூல்கள் எழுதப்பட தமிழகத்தை சேர்ந்தவர்கள் காரணமாய் இருந்திருக்கின்றனர். பலர் பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். சமஸ்கிருதத்தை பழிப்பது அவர்களையெல்லாம் பழிப்பதாகும்.
பழிப்பதும் தூற்றுவதும் எதிர்மறை கண்ணோட்டமாகும். அவற்றால் எவ்விதப்பயனும் விளையப்போவதில்லை.
த.துரைவேல்.
- செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி
- முள் – முத்துமீனாள்- முதல் பதிப்பு வெளியீட்டு விழா
- தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…
- சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
- கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு
- கலை இலக்கிய விழாவில் ‘வல்லினம்’ இதழ் அகப்பக்கமாக புதிய அவதாரம்
- புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!
- கருத்தியல் தர்மம் காக்க!
- சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே
- புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்
- கோடை
- என்றாலும் கவிதையே
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 51 << மாறாத உன் தோற்றம் >>
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -3 (மரணத்தில் எஞ்சியவை)
- வேத வனம் –விருட்சம் 49
- அழகு
- தாயெனும்…
- புன்னகை
- முடிவாகவில்லை
- வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10
- யார் அந்த சண்முகம்?
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று
- தேவை கருணை பார்வை
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- பாதையையும் பயணமும்
- மிச்சாமி துக்தம் : (துக்டம்)
- சற்றுமுன் வந்த மின்னஞ்சல்
- தடை
- ’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”
- காட்டுவா சாகிப்
- தவிர்க்க விரும்பும் தருணங்கள்
- பண்டிகைகள்
- தலைகவிழல்
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)