வேதா
தமிழே நீயா ?
அந்திவானத்து
சுடரென ஒளுர்ப்பு!
அழகான மழலை
மொழியென உயிர்ப்பு!
இயல்பாய் இசையாய்
இளமையின் துடிப்பு!
இறப்பு-பிறப்பு
இணைக்கும் விழி எழுத்து!
உண்மை உணர்த்தும்
உன்னத சிரிப்பு!
உறங்கும் புரட்சியின்
புதுமையின் படைப்பு!
எனக்குள் உருவான
எழுத்துலகத் தொகுப்பு!
என்னையே கைதுசெய்து
ஏங்கவைத்த பொறுப்பு!
ஐந்தாம் வேதமாய்
ஆகிநின்ற கருத்து!
ஒப்பிலா பரம்பொருளாய்,
பிறக்க வைத்த பிறப்பு!
எல்லாமாகி நின்று
உயிர்கொடுத்த கண்மணியே,
நீயே தமிழா ?
தமிழே நீயா ?
முதல் ஸ்பரிசம்
உள்ளத்தின் மென்மையான உணர்வுகளை உள்வாங்கி ,
நரம்பு முடிச்சில் நாணேற்றி,
மூளையின் ஏவல் தாண்டி,
வெளுயேறத் துடிதுடித்து,
வசமான வாசல் தேடி,
ஒருவாசல் ‘வாய் ‘ போக,
ஒன்பது வகையாய் வெளுயேற்ற,
இருகை விரல்கள் இருபது கோடியாய்
நடனம் அரங்கேறும் நாட்டிய நாடகம்…
அன்பே,
உன் முதல் ஸ்பரிசம்!!
piraati@hotmail.com
- பொன்னீலன் – சாகித்ய அகாடமி பரிசு
- காதல் கிழியுமோ ?
- கவிதைகள் இரண்டு
- கரைந்த இடைவெளிகள்
- இரண்டு கவிதைகள்
- நானே நானா
- பைத்தியக்காரி
- அறிவியல் மேதைகள் சத்தியேந்திர நாத் போஸ் (Sathyendra Nath Bose)
- அமெரிக்காவின் வேகப் பெருக்கி அணு உலையில் ஏற்பட்ட விபத்து (Meltdown Accident in Michigan Fast Breeder Reactor)
- ‘வெள்ளிப் பனித்துளிபோல்… ‘
- இயற்கை விடுக்கும் செய்தி (பிரபஞ்சனின் ‘பிரும்மம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 64)
- சந்திப்பு
- சாதி இரண்டொழிய….
- வெளிப்பாடு
- சந்தோசமே உயிர் மூச்சு !(கவிதைக்குள் ஒரு கதை)
- நான் மட்டும்
- பெண்களை நம்பாதே
- இலக்குகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஒன்பது
- மனம்
- எமனுடன் சண்டையிட்ட பால்காரி!
- சிறுமை கண்டு பொங்குவாய் வா..வா..வா..
- இரண்டொழிய
- I..I.T. – R.E.C. காதல்:
- தளுக்கு
- இது ஒரு விவகாரமான கதை
- பறவைப்பாதம் 4
- வாரபலன் – 5 (மே இறுதி வாரம்) பாளம் பாளமாய்…
- கடிதங்கள்
- தியானிக்க மூன்று குரங்கு ‘கதைகள் ‘ ?
- குறிப்புகள் சில (ஜூன் 7, 2003)
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 6
- இரண்டு கவிதைகள்
- மனசே! இதோ ஒரு பர்கோலாக்ஸ் ப்ளீஸ்!