சி. ஜெயபாரதன், கனடா
பாலின் நிறம்
வெண்மை என்று
சுண்ணாம்பின் சான்றிதழ் வேண்டுமா ?
மீன் குஞ்சு
நீந்து மென்று
கொக்குவின் முத்திரை வேண்டுமா ?
ரோகினி
விண்மீன் என்றோர்
எரி நட்சத்திரம்
பறைசாற்ற வேண்டுமா ?
வைகறைப் பொழுது புலர்ந்ததென
சேவல் கூவித்தான்
காவலர் விழித்தெழ வேண்டுமா ?
மாதவியின்
மடிமேல் தலைவைத்த
கோவலனை
நெற்றிக் கண்ணால் சுட்டெரித்தாய்!
தீக்குளித்த
கர்ப்பிணி சீதாவைக் காட்டுக்கு மீண்டும்
அர்ப்பணம் செய்த
வில்லாதி வில்லன்
இராமனைச்
சொல்லால் அடித்த சூடாமணி நீ!
நள்ளிராப் பொழுதில்
தூங்கும்
நங்கையை விட்டு
நழுவிச் சென்ற
நளச் சக்கரவர்த்தியை
கழுவிச் சென்ற காவியப் பெண் நீ!
மோதிர மிட்ட மாதை மறந்து
நோக விட்ட
துஷ்யந்த மன்னனை
மாலை சூடாது
காலால் எற்றிய வனிதாமணி நீ!
கரையான் தின்னாத,
கால வெள்ளம் அடித்துச் செல்லாத
நூல்களை வடித்த
நூதனப் பெண்ணே!
ஆதிக்க வர்க்கமாய் அடிமைப் படுத்தும்
ஆடவர் முத்திரை நீ
நாட வேண்டுமா ?
ஊன்றுகோல் எதற்கு ஊமைக் குயிலே ?
‘தேன்முட்கள் ‘
என்னும்
உன்னரும் கீதாஞ்சலிக்கு
நோபெல் பரிசளிக்க
ஒளவை ஒருத்தியோ,
ஆண்டாள் ஒருத்தியோ
உன்குலத்தில்
இன்னும் உதிக்க வில்லையா ?
****
jayabar@bmts.com
- நாம் புதியவர்கள்
- வீீடு
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)
- 2004 ஆம் வருட ராசிபலன்
- பட்டேல்கிரி
- கடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக ?சுரேஷ் அவர்களின் நண்பருக்கு
- கடிதம் – பிப்ரவரி 26,2004
- “பக்தர்களான மார்க்சிய பெரியாரிஸ்டுகள்!”(தினமலர் ) பற்றி
- நூல் வெளியீட்டு விழா
- கடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்
- கடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.
- யுத்தம்
- யாழன் ஆதி கவிதைகள்
- சரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”
- ஒளவை பிறக்க வில்லையா ?
- விந்தையென்ன கூறாயோ ?
- மாலைநேரத்தின் பிரவேசம்
- கவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘
- மழையாக நீ வேண்டும் – 1
- பாட்டி கதை
- கவிதைகள்
- அழவேண்டும்
- இந்தியா ஒளிர்கிறது (India shining)
- உள்ளத்தனைய உயர்வு
- அன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை
- பேசாத பேச்சு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு
- விடியும்!- நாவல் – (37)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)
- நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8
- ‘தொட்டு விடும் தூரம்… ‘
- அறம்: பொருள்: இன்பம்: வீடு
- வாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை
- பணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.
- அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 2
- சில நேரங்களில் சில மனிதர்கள்
- மத மாற்றம்
- மரம்
- பிறவி நாடகம்
- வரமொன்று வேண்டும்
- இறைவன் எங்கே ?
- சுண்டெலி
- பூரணம்
- என் கேள்வி..
- நீயின்றி …
- ஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)
- உயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘
- தீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)
- கவிதைக் கோட்பாடு பற்றி…