இளங்கோ
1.
சடசடத்தோடும்
இரயில்களின் இடைவெளியில்
பூக்களின் தோழமையுடன்
நிகழ்கிறது
நமது முதல் சந்திப்பு
பேசுவதற்கான வார்த்தைகள்
திசைகளைத் துழாவும்
விழிகளில் புதைய
நமக்கான வெளிகளில் மட்டும்
நிரம்புகிறது நிசப்தம்
இணையத்தின்
இருப்பை வியந்தபடி
நேசத்தின் முதல்தளிர்
தண்டவாளத்தருகில் துளிர்க்கிறது
காலத்தின் அடுக்குகளைப் பிளந்தபடி
மழைக்கால இரவில்
ஒளியின் அரூபநடனத்துடன்
பயங்களற்று பயணிக்கின்றோம்
திசைகள் தெரியாப்
புராதனத் தெருக்களில்
புலம்பெயர்கையில்
ஓலமிட்டுப் பிளிறிய
ஆன்மாவின் அழுகுரல்
இனியேனும் சற்று அதிராதிருக்கக்கூடும்
உனையிறுகவணைக்கும்
இந்தக்கணத்திலேனும்
தாய்மொழியின் சுவையறியாது
சபிக்கப்பட்ட வாழ்வின் மீதியை
துயரங்கள் துலங்க
விழித்தெழும் நீண்ட இரவுகளை
தனிமைத்திரை கவிழ
வெளிறும் வெற்றுப்பகல்களை
பகிர்வதற்கான நம்பிக்கைகள்
உதடுகள் நனைக்க
கிற்ங்கிப்போகும் உன்விழிகளில்
மின்னலாய் வெட்டுகிறது
2.
நீளும்
இத்தொலைதூரப் பேரூந்துப்பயணத்தில்
உனது விழிநீரும் வியர்வையும் கலக்க
பிரிவுத்துயர் தாங்கிய ஆடையின் வாசத்திலிருந்து
இதமாய் விரிகிறது
ந்மக்கான முதற்கவிதை.
- மாற்றம்
- தேவகோட்டை – சிவகங்கை
- சீரணி அரங்கத்தில் பேரணி
- பயணம்
- மெளனம்
- இந்திய இளவரசர்களே!
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- கோயிலுக்கு
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- ஈழத்தில் சமாதானம்
- இழந்த யோகம்
- சின்னப் பூக்கள்
- தீ தித்திப்பதில்லை…
- காவல்
- குழந்தை யேசு
- தலைப்பாரம்…..
- உதிரும் சிறகு
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- விருந்துக்கு வந்த இடத்தில்
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- ஞாநிக்கு மீண்டும்
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- என் அக்கா
- பால்யகாலத்து நண்பன்!