ப்ரஹ்மபுத்ரா
நீ வாழ்ந்த அகம்
உன்னில் ஊறியது
உனக்காக தன்னில்
மாறுதல்களை ஏற்கும்
உன் வருகைக்காகவே
காத்திருக்கும்
உன் பொருள்களை
அவை அவை
இருக்க வேண்டிய இடத்தில்
நீ வைக்கா விட்டாலும்
யாராவது எடுத்து வைப்பார்கள்
உனக்கு தெரிவிப்பார்கள்
உன்னை தெரிவிக்க மாட்டார்கள்
அது உன் அகம்
நீ போனதிலிருந்து உனக்காக
துடிப்புகளின் தனிமையை
ஒரு விதமாக ஏற்றுக்கொள்ள
முயலும் உன் அகம்
நீ அறிந்தாலும் அறிய
மறந்தாலும்
என்றும் உன் அகம்
நீ அறிந்தே கொள்ள
வேண்டியது உன்
புது அகம்
புகு அகம்
உன் கணவனை
அறிந்து கொள்ள
உதவுவதே
இந்த அகம் தான்
நீ காதலித்தே
மணந்து கொண்டிருந்தாலும்
உன் அகம் தான்
அவன் வாழும் வகை காட்டும்
ஒரு விதத்தில்
காதலில் அறிந்து கொண்டவனை
மறந்து
இந்த அகம் உடையானாக
அறிந்து கொள்வது உனக்கு
புதுமையும் வலிமையும்
ஒரு சேரத்தரும் அனுபவம்
வீட்டுக்கு இரு முகங்கள்
ஒரு புறம்
ஒரு அகம்
எப்பொழுதும் உண்டு
இரண்டும் அறிய வேண்டிய முகங்கள்
உள்ளுணர்வின் விழிப்பு
ஒன்று இருந்தால் போதும்
ஒவ்வொரு விஷயமும்
பார்வையில் படும்
தகவல்களாக
தேவைகளாக
தவிப்புகளாக
எதிர்பார்ப்புகளாக
ஒரு வீட்டின்
செங்கல்களையும்
சிமெண்டையும்
ஓடுகளையும்
கடந்த அகம்
அறியப் பட வேண்டியதொன்று
அகத்தின் ஒரு
மகத்தான தோற்றம்
காலத்தின் பரிமாணத்தின் மூலம்
கிடைக்கும்
வீட்டில் வாழ்ந்த தலைமுறைகள்
வீட்டில் வளர்ந்த உறவுகள்
வீட்டை வாழ்த்திய சுற்றங்கள்
வீட்டைத் தேடி வரும் நட்புகள்
காலத்தின் கோலங்களாக பலவும்
காலம் காலமாக சிலவும் என்று
ஒரு பரிணாமம்
இவற்றை உணர நீ
போட்டோ ஆல்பங்கள் இலிருந்து
வீட்டின் பல அறைகளில்
உறைந்த காலத் துளிகளாக
உறையும் போட்டோக்கள் வரை
புதிய உறைவிடம்
பகிரப்படும் சுய சரிதைகளில் இருந்து
பகிரப்பட மறந்த வாழ்க்கைகள் வரை என்று
எவ்வளவோ அறியக் கிடைக்கும்
காலத்தின் வேறு
ஒரு கோணம்
தினசரி அலுவல்களின்
குடும்ப வாழ்க்கையின்
அன்றாட நெருக்கடிகளில்
நெருடல்களில்
புதைந்து இருக்கும்
இவற்றுடன் பழகாத
ஒரு புது உறவின்
பார்வைக்கு அந்த கோணம்
எளிதில் கிடைக்கக் கூடும்
இவற்றை
நேர்த்தியாகவும்
இன்னும் அழகாகவும்
எல்லோருக்கும் உற்சாகம்
கொடுப்பதாகவும்
செய்ய விரும்பிப்
பார்க்கும் பார்வைகளுக்கு
இந்த அகம்
அகத்தின் அடி நாதம்
ஒரு சில நாட்களில்
அத்து படியாகும்
ஒரு விதத்தில்
அவன் அகம் அறியும் முன்னர்
அகத்தின் அகம் அறிந்தால்
அவன் தலைவனாகாமல்
தொண்டன் ஆகி விடுவான்
தான் முழுமையாகவும்
தன் வேர்களின் பலத்தின்
முழு உணர்தல் ஒன்றுடனும்
அணுகப் பட்டதில்
அவனே அவன் அகம்
அறிவதில் ஒரு புத்துணர்வு பெறுவான்
அவன் வாழ்க்கையில்
இந்த திருமணம் சில
சலசலப்புகள் வரும்
என்ற ஒரு அச்சம் இருந்திருக்கும்
அவற்றை தன் குடும்பத்தினர்
எப்படி ஏற்றுக் கொள்வார்களோ
என்று அவனுக்குள் இருந்த
அச்சம் விலகி
அவன் ஒரு புதிய அத்தியாயம்
எல்லோருக்கும் இருக்கிறது
என்று உணரும் பொழுது
அது அவனுக்கும் ஒரு
புது அகமாக தோன்றும்
அந்த
அகம் அறி!
–
gopalan.parthasarathy@gmail.com
- குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்
- வல்லினம் இதழ் ‘கலை இலக்கிய விழா’
- புலம்பெயர் பறவைகளை இனி…
- சமாதானத் தூதுவர்கள்
- மியாவ் மியாவ் பூனை
- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
- screening of the film The Other Song
- NJTS 20th ANNIVERSARY/DEEPAVALI FUNCTION
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- கவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்
- மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
- ‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்
- மனிதன் 2.0
- ஆசிரியருக்கு
- முதிர் இளைஞா..
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)
- எச்சம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>
- வேதவனம்- விருட்சம் 48
- சியாமளாதேவியே சீக்கிரம் அருள்கவே!
- அகம் அறி
- குறுங்கவிதைகள்
- கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆவலுடன்
- பாராட்டலாம் பரிமாற்றம்தான் சாத்தியமில்லை
- தொலைத்தூர பயணம்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9
- வாரத் தேவை
- ரோபோ
- மிச்சம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- அஞ்சலி கட்டுரை: யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை – அழகியலும் தீவிரமும் (1958 – 2009)
- வெளிப்படுத்தப்படும் சில உண்மைகள்
- நினைக்கத் தெரிந்த மனம்…
- மாண்டு விட்ட கனவுகள்….
- அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…
- இறகுகள் தொலைத்த தேவதை
- விட்டுச்சென்ற…
- சித்திரக்காரனின் சித்திரம்
- குருவிகளின் சாபம்:
- தேடல் (ஒளிப்பட கவிதை)
- இடைத்தேர்தல்
- இந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)
- மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்
- யாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- கால்டுவெல் முதல் கவிதாசரண் வரை