தமிழாக்கம் :புதுவை ஞானம்.
பேரறிவு என்பது பரந்துபட்டதாகவும் அனைத்தும் தழுவியதாகவும்
சிற்றறிவு என்பது குறுகலாகவும் தகவல்கள் தேடுவதாகவும்
இருக்கின்றன.
பேருரை என்பது வேகமும் விவேகமும் பொருந்தியதாகவும்
சிற்றுரை என்பது முடிவற்றதாகவும் விதண்டாவாதமாகவும்
இருக்கின்றன.
உறங்கும் போது அலைகின்றன அவர்களது ஆன்மாக்கள்
விழித்திருக்கும் போது பதறுகின்றன அவர்களது உடல்கள்
சிக்க வைக்கிறார்கள் உறையாடுகையில் மற்றவர்களை
சூழ்ச்சி வலை பின்னுகிறார்கள் நாள் முழுவதும்.
திட்டமிட்டுப் பேசுகின்றனர் சிலர்
வார்த்தைகளால் வலை விரிக்கின்றனர் சிலர்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்றனர் சிலர்
சிறிய அச்சமானது மிரள வைக்கிறது அவர்களை
பெரும் அச்சமானது பீதியடையச் செய்கிறது அவர்களை.
சீறி வருகின்றன அவர்களது வார்தைகள்
வில்லில் இருந்து விடுபட்ட அம்புகள் போல்
மற்றவர்களின் பலவீனமான பகுதிகளைக் குறிவைத்து
பலத்த காயம் ஏற்படுத்தும் விதத்தில்.
ஏதோவொரு உறுதிமொழி எடுத்துக் கொண்டதைப் போல
அவர்கள் மவுனம் காக்கும் போது கூட
காத்திருக்கின்றனர் வெற்றி வாய்ப்புக்காகவே.
தோல்வியுறும்போது தோன்றுகின்றது
இலையுதிர் காலமாகவும் உறைபனிக்காலமாகவும்.
நம்மால் சொல்ல முடியும் நாளுக்கு நாள்
அவர்கள் நலிந்து வருகிறார்கள் என்பதாக.
திரும்பவே முடியாது சுயநிலைக்கு அவர்களால்
இந்நச்சுச் சூழலில் சிக்கி இருக்கும் வரை.
கட்டுண்டது போலொரு தடை ஏற்படின்
மிரண்டு உதிர்ந்து போகிறார்கள்.
உயிர்ப்பினையும் வலிமையையும்
மீண்டும் பெற இயலாது
சாவினை நோக்கி விரையும் இதயம்.
இன்பம் துன்பம் கோபம் பெருமகிழ்ச்சி
கவலை துயரம் அச்சம் சபலங்கள்
கட்டுக்கடங்காமை ஒழுக்கமின்மை
முரட்டுத்தனம் வீண்பெருமை அனைத்தும்
ஓட்டைகளில் இருந்து வெளிவரும் ஓசைகள்
ஈரத்தில் படரும் பாசிகள்.
மோதுகின்றன இவை நம் கண்ணெதிரே
இரவும் பகலுமாக….எனினும் இவற்றின்
தோற்றுவாய் என்னவெனத் தெரியாது இவர்களுக்கு,.
போதும்போதும் இவர்களுக்கு இது புரிந்து விட்டால்
விளங்கிக் கொள்வார்களா ?
வாழ்க்கையின் தத்துவத்தை….*1
அது இல்லாமல் நான் இருக்க முடியாது
நான் இல்லாமல் யாரும் மதிப்பிட முடியாது
எனவே அதற்கு நான் நெருக்கமாக இருக்கிறேன்.
ஆனாலும் கூட ஆட்சி செய்வது எதுவென
எனக்குத் தெரியாது.
பெரும் ஆட்சியாளராக ஒன்று இருக்கக்கூடும்
ஆனாலும் அதன் அடிச்சுவடு கூட
எனக்குத் தெரியவில்லை.
அதன் செயற்பாடுகள் வாயிலாக
அது இருப்பதாக நான் நம்புகிறேன்.
அதன் வடிவம் எனக்குப் புலப்படவில்லை.
இயற்பியல் வடிவம் ஒன்று இல்லையாயினும்
அதற்கு என்றொரு இருப்பு இருக்கிறது.
மூலம் :க்ஷுவாங்ட்சு
தமிழாக்கம் :புதுவை ஞானம்.
- கடிதம் – ஆங்கிலம்
- படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம்
- சேந்தனாரின் கடவுளர் இருவர், காதலியர் இருவர்
- நம்மாழ்வார்
- புதுமைப் பித்தனும், நடப்பியலும்
- உண்மையின் ஊர்வலம் .. (4)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 14. சிஷெல்ஸில் தமிழர்கள்
- வானகமே. வையகமே சுற்றுப் புற சூழல் இதழ் பற்றி
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -1
- கருவண்டாகி பறந்துபோகும் சித்தன் – நவீனம் தாண்டிய கவிதை பற்றி
- சுனாமி வைத்தியம்!
- ஈழத்தின் மறுமலர்ச்சிக் காலகட்டமும், அ.ந.க.வும்: சில குறிப்புகள்!
- வடக்கு வாசல் இசைவிழா-2006 – 31-03-2006
- கடிதம்
- குளமும் ஊருணியும்
- உண்மை தெய்வமான க(வி)தை
- கடிதம்
- திண்ணை என்ன செய்யும் என்று யாரிடமும் தெரிவிக்க வில்லை
- சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்வி
- சுந்தரமூர்த்திகளுக்கு….
- சுயபுராணமே வரலாறாக…,தொட்டாச்சிணுங்கிகள் எழுத்தாளர்களாக…
- செம்பை உள்ளே எடுத்து வைக்கும் முன், சில விசயங்கள்:
- நடேசனின் ‘வாழும் சுவடுகள் ‘ மின்நூல் வடிவில்
- கடிதம் – ஆங்கிலம்
- பரபரப்பு விற்பனையில் ஒரு புத்தகம்!
- உயிர்மெய் முதலாவது இதழ் வெளிவந்துவிட்டது
- சூட்டுக் கோட்டு சூடு கோடு
- செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் (2)
- கண்ணாடியில் தெரியும் பிம்பத்துடன் ஒரு விவாதம்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஆறு: வெளிக்கள ஆய்வுத் தகவல்கள்!
- அப்பாவின் மனைவி
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 12
- யதார்த்தம்
- ராகு கேது ரங்கசாமி (தொ ட ர் க தை -1)
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-12) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- சொல் இனிது சொல்வது இனிது
- சேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்
- ஒரு கிழவருடன் இரண்டு நாட்கள்
- புலம் பெயர் வாழ்வு (4)
- ‘வெடி மருந்து வீச்சமில்லாத தெருக்களில் நடக்கக் கனவு கண்டவன்’
- சொல்லிப் பிாிதல் உனக்குச் சுகமே! நினைவு நீங்கா எங்கள் தோழனுக்கு எங்கள் அஞ்சலி!
- ராணுவம், காவல் துறைகளில் முகமதியர்: நிஜங்களை நோக்கி ஒரு பயணம்
- அவுரங்கசீப் : மதச்சார்பின்மையின் முன்னோடி
- சனிக்கோளின் துணைக்கோளில் நீர் ஊற்றுகள் எழுச்சி! செவ்வாய்க் கோளை வலம்வரும் விண்சுற்றி! [Water on Saturn ‘s Moon & Mars Orbiter Or
- ஒருநாள் கிறிக்கற் (புதிய) விதியை ஏற்றிடலாமா ?
- காற்றோடு திரிகின்ற யமன்
- கோபால்சாமியா ? கோயாபல்ஸ்சாமியா ?
- குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை
- பெரியபுராணம் – 80 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- யாழன் ஆதி கவிதைகள்
- மகத்தானதும் அற்பமானதும் – ( மூலம் :க்ஷுவாங்ட்சு )
- உலகம் என்பது வண்ணம்
- வன்மழை
- மனிதனாய் தவிர்த்து
- எல்லம் வாத்துக்களே
- டான் கபூர் கவிதைகள்
- கீதாஞ்சலி (64) வீணாகும் தீபங்கள்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )