பசுபதி
சின்னஞ் சிறுவயதில் — நீயொரு
. . சிட்டாய்த் திரிநாளில்
இன்பம் விளைசூழல் — இன்றது
. . எங்கே மறைந்ததடி ? (1)
தூய உலகமதின் — சுற்றுச்
. . சூழல் இறந்தாச்சோ ?
தாயெனும் மண்ணினையே — நன்கு
. . சாக அடிச்சாச்சோ ? (2)
நாசி திறந்தவுடன் — சேய்கள்
. . நஞ்சை முழுங்குதடி!
காசினி சாகுதடி — காண்போர்
. . கலங்கும் போக்கிதடி ! (3)
எத்தனை கோடியின்பம் — இன்று
. . எங்கே தொலைந்ததுவோ ?
வித்து விதைப்பதற்கே — ஈசன்
. . மெத்தத் தயங்குவனோ ? (4)
நீலக் கடல்வானம் — புவி
. . நிறைய மாசுமயம் ;
காலம் விளைத்ததல்ல — காரணம்
. . காட்டிட வெட்குதடி ! (5)
பன்னரு பூக்களையே — முகரப்
. . பரமன் தந்திருந்தான் ;
கன்னெஞ்சன் நானன்றோ — அவற்றைக்
. . கசக்கி விட்டெறிந்தேன் ! (6)
ஞாலம் நசித்துவிட்டேன் — விஞ்
. . ஞானத் துணையுடனே !
ஆலம் கடைந்தெடுத்தேன் — சூழல்
. . அவலம் ஆக்கிவிட்டேன் ! (7)
வேதனைப் பாதையிலே — வழுக்க
. . வெண்ணெய் தடவிவிட்டேன் ;
மேதினித் தற்கொலைக்கே — இனி
. . மீளும் வழியுமுண்டோ ? (8)
ஐந்திணை ஒன்றாகி — பாலை
. . அண்டம் படர்ந்திடுமோ ?
என்னைமன் னித்துவிடு ! — மகளே!
. . யாவுமே என்பிழைகள் ! (9)
உன்னெதிர் காலமதை –மகளே!
. . ஒட்ட எரித்தேனோ ?
என்னை எரித்திடுமுன் — மகளே!
. . என்னைமன் னித்துவிடு ! (10)
*~*~*
pas@comm.utoronto.ca
- மின்மினிப் பூச்சிகள்
- சித்தார்த் வெங்கடேசன் கவிதைகள்
- பல வகையான அமீபா
- அன்பும் ஆசையும் (எனக்குப் பிடித்த கதைகள் -23 -முல்க்ராஜ் ஆனந்த்தின் ‘குழந்தை மனம் ‘)
- தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்
- தேவதேவன் கவிதைகள் : 2. மரம்
- சுந்தர ராமசாமிக்கு அன்புடன்
- மு.தவின் மரணம்
- வயதானவர்களுக்கான தொழில்நுட்பக் கருவிகள்
- பூமகளே! மன்னித்துவிடு!
- தேவதேவன் கவிதைகள் : 2. மரம்
- கோபம் எதற்கு ?
- சில முற்றுப் புள்ளிகள்
- ஆர்வம் அபூர்வம்
- நான்காவது கொலை!!! (அத்தியாயம் : மூன்று )
- கனவும் வாழ்வும்
- தாகம்
- மின்னுயர்த்தி
- பாபா :முந்நூறுகோடி மோசடி
- இந்தியாவின் வட கிழக்கில் மற்றொரு அல்-கொய்தா
- பங்களாதேஷின் பாகிஸ்தானிகள்: பாரதப் பிரதமருக்கு ஒரு வேண்டுகோள்
- தளையசிங்கத்தின் பிரபஞ்ச யதார்த்தம்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19 2002 (நடிகர்கள், ராமதாஸ், குஜராத் தேர்தல்)
- ஏதோ எனக்குத் தெரிந்தது …..
- கலைகளும் கோடம்பாக்கமும்
- பிறந்த நாள் கொண்டாட்டம்
- சஞ்சிவினி மலைகள்