வ.ந.கிரிதரன்
1.
கவிந்து கிடக்குமிரவின் அமைதியில்
இளவேனிற்பொழுதொன்றின்
துணையுடன் கழியுமொரு பொழுதொன்றில்
‘டொராண்டோ’ப் பெருநகரின் நடைபாதைகளில்
‘இடவெளி’ வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்
வீடற்றவாசிகள் சிலர்.
விரிந்து கிடக்கிறது வெளி.
எதற்கிந்த முடக்கம்?
தாராளமாகவே உங்கள் கால்களைக் கைகளை நீட்டி,
நிமிர்ந்து, ஆசுவாசமாகத் துயில்வதற்குமா
தயக்கம் வேண்டிக் கிடக்கிறது.
2.
பகலவனாட்சியில்
பல்வகை வாகனங்கள்!
பல்லின மானிடர்கள்!
விளங்குமிப் பெருநகரின்
குணம்
இரவுகளில்தான்
எவ்விதமெல்லாம்
மாறிவிடுகிறது!
மாடப்புறாக்களே!
நள்ளிரவில் துஞ்சுதல் தவிர்த்து
இன்னும் இரைதேடுவீர்!
உமதியல்புகளை
எவ்விதம் மாற்றிக் கொண்டீர்?
நகரத்துப் புறாக்களா?
இரவுப் புறாக்களா?
சூழல் மாறிடினும்
கலங்கிடாப் பட்சிகளே!
உம் வல்லமைகண்டு
பிரமித்துத்தான் போகின்றதென்
மனம்.
3.
நகரில் துஞ்சாமலிருப்பவை
இவை மட்டும்தானென்பதில்லை!
துஞ்சாமலிருப்பவர்களும்
நிறைந்துதான் இருக்கிறார்கள்.
ஆலைத் தொழிலாளர், ஓரின,
பல்லினப் புணர்வுகளுக்காய்
வலைவிரிக்கும்
வனிதையர், வாலிபர்.
‘மருந்து’விற்கும் போதை
விர்த்தகர்கள்,
திருடர்கள், காவலர்கள்….
துஞ்சாதிருத்தல் பெருநகரப்
பண்புகளிலொன்றன்றோ!
4.
இவ்விதமானதொரு,
வழக்கமானதொரு
பெருநகரத்தின்
இரவுப் பொழுதொன்றில்,
‘பின்இல்’ புல்வெளியில்
சாய்கதிரை விரித்ததில்
சாய்ந்திருக்கின்றேன்.
பெருநகரத்தின் இடவெளியில்
ஒளிந்திருக்கும் இயற்கையைச்
சுகிப்பதற்காக.
சிறுவயதில்
‘முன்இல்’ தந்தையின்
‘சாறத்’தொட்டிலில்
இயற்கையைச் சுகித்ததின்
நீட்சியிது.
பல்வகைக் கூகைகள் (கோட்டான்கள், நத்துகள்)
சப்திக்கும் இரவுகளில், விண்சுடர் ரசித்தல்
பால்யத்துப் பிராயத்து
வழக்கம்.
இன்னும் தொடரும் -அப்
பழக்கம்.
தோடஞ்சுளையென
அடிவானில்
கா(ல)ல்மதி!
அந்தரத்தில் தொங்குமந்த
மதி!
அதனெழிலில் தெரிகிறது
வெளிதொங்குமென்னிருப்பின்
கதி!
5.
பெருநகரத்துப் பரந்த ‘காங்ரீட்’ வனத்தின்
மத்தியில் ஒளிந்திருக்கும் இயற்கைக்
கன்னியின் வனப்பினை
இவ்விதமான இரவுப் பொழுதுகளில்தான்
ஆறுதலாக, உணர்ந்து, சிந்தித்து,
இரசிக்க முடிகிறது.
சில சமயங்களில் நகரத்தின்
மயானங்களினருகில்
நரிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன்.
பள்ளத்தாக்குப் பகுதிகளில்
மானினங்களைக் கண்டிருக்கின்றேன்.
குழிமுயல்களை, இன்னும் பல
உயிரினங்களையெல்லாம்
இத்தகைய இரவுப் பொழுதுகளில்
கண்டிருக்கின்றேன்.
அப்பொழுதெல்லாம்
வ்ளைகளுக்குள் வாழ்ந்து
இரவுகளில்
இந்தக் ‘காங்ரீட்’ வனத்தினுள்
சஞ்சரிக்கும் அவற்றின்
படைப்பின் நேர்த்தியில்
மனதிழந்திருக்கின்றேன்.
6.
வெளியில் விரைமொரு
வாயுக் குமிழி! – உள்
உயிர்
ஆடும் ஆட்டம்தான்
என்னே!
ஒளியாண்டுத் தனிமை!
வெறுமை! -உணராத
ஆட்டம்!
பேயாட்டம்!
இந்தத்
– தனிமையெல்லாம்,
– வெறுமையெல்லாம்,
– தொலைவெல்லாம்,
ஒளியணங்கின் ஓயாத
நாட்டியமோ! – மாய
நாட்டியமோ?.
ஆயின்,
விழியிழந்த குருடருக்கு
அவை
ஒலியணங்கின்
சாகசமோ?!
7.
இந்தப் பெருநகரத்திருப்பில்
நான் சுகிக்கும் பொழுதுகளில்
இந்த இரவுப் பொழுதுகள்
சிறப்பு மிக்கவை.
ஏனெனில் -அவை
எப்பொழுதுமே
என் சிந்தையின்
– விரிதலை,
– புரிதலை
– அறிதலை
அதிகரிக்க வைப்பவை;
அதனால்தான்.
ngiri2704@rogers.com
- ஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி
- உங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்
- நினைவுகளின் தடத்தில் – (10)
- செவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7
- அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !
- கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன?
- ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- தாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)
- மரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”
- அம்மாவின் ஆசை
- அவனுக்கு நீங்களென்று பெயர்
- உங்கள் சாய்ஸ்
- 35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.
- மனவெளியின் மறுபக்கம்
- கடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)
- பரிவிற் பிறந்த இலக்கியம்
- தனித் தமிழ்
- இலக்கியச் சந்திப்பு
- நூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு
- ஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா
- ஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்
- காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது
- தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
- ஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்
- ஈஸ்வர அல்லா தேரே நாம்
- என்னை மட்டும்.. ..
- கடிதம்
- குற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்
- Last Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச
- விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி
- த.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’
- மீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்
- பேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்
- கூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13
- கவிதைகள்
- மரம் தாவும் சிலந்திகள்
- முன்கர்நகீர் என் தோழர்
- அவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்
- அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி
- பெண்மை விலங்கில்
- ‘தொராண்டோ’வின் இரவுப் பொழுதொன்றில்….