பசுபதி
கண்கள் இழந்தபின்பு –மில்டன்
. கண்டதே கவிதையென்பர் -நாம்
பண்ணும் கற்பனைதான் — ஆன்மா
. பார்க்கும் விழிகளென்பர் (1)
‘கற்பனை காட்டுமெழில் — அதுவே
. காலம் கடந்தமெய்யாம் ‘ — என்று
நற்கவி ‘கீட்ஸு ‘ரைத்தான் –அது
. நமக்கும் பொருந்திடுமே ! (2)
கற்பனை ஊரென்ற — பாரதி
. கவிதைப் பொருளென்ன ?
‘புற்புத வாழ்வினையே — புனைவெனப்
. புரிந்திடில் மோட்சமுண்டு! ‘ (3)
‘இழந்த இன்பங்கள் –பெறவே
. ஏகுதீர் கற்பனையூர் ‘ – என்றார்
‘குழந்தை நிலையதனை — அவ்வூர்
. குறித்திடும் ‘ என்றபொருள் ! (4)
குழவிபோல் தூயநிலை — கவிஞர்
. கோரல் சரியன்றோ ?
அழகுறு கவிபடைக்க — நமக்கு
. அதுவே இயற்கையன்றோ ? (5)
கலைகள் மிளிர்ந்திடவே — உயர்
. கற்பனை ஒளிவேண்டும்; –எண்ண
அலைகள் கவியாக — புனையும்
. ஆற்றல் மிகவேண்டும் (6)
உணர்வெனும் விதைவேண்டும் — கவிதை
. உளத்தில் பிறந்திடவே — ஆனால்
மணமிகு கற்பனைகள் — வேண்டும்
. மலர்கள் சிறந்திடவே ! (7)
தணலைக் கனலாக்க — காற்றைச்
. சரியாய் ஊதவேண்டும்
உணர்வைக் கவியாக்க — கற்பனை
. யுக்தி பலவேண்டும் (8)
மனத்தில் மின்னிடுமோர் –உணர்வால்
. வாசகன் நனைவதில்லை!
கனத்த கருமுகிலாம் — புனைவே
. மனத்தில் மழைபொழியும் (9)
உதிக்கும் நிலாபோல –உணர்வு
. உள்ளத் தையொளிர்க்கும்
கதிரோன் கற்பனைதான் — மூலம்
. . கற்றை மதியொளிக்கு ! (10)
பகுக்கும் அறிவுக்கு — முதலிடம்
. படித்தோர் தருவதில்லை ;
வகிக்கும் தலைமையிடம் — புனைவே
. மனத்தின் திறன்களிடை. (11)
படைக்கும் திறனதனால் — கற்பனை
. பரமனை அணுகிவிடும் — அது
உடைக்கும் கட்டுகளை ! — மாந்தர்
. உணர்வின் விதிமீறும். (12)
படிப்பவன் மனமுலுக்கல் — வேண்டும்
. பாடல் தரமெட்ட !
படைத்தவன் மனவுணர்வை — கற்பனை
. படிப்போன் உணர்வாக்கும். (13)
அநுபவ தளைக்குள்தான் — உணர்வு
. அடிமையாய் நடைபோடும்
கனவுசெய் கற்பனையோ — எந்தக்
. கட்டையும் மீறிவிடும். (14)
புவியில் நாம்காணும் — உணர்வில்
. புதுமைகள் ஏதுமில்லை –அதைக்
கவியாய் செய்வேதம் — அது
. கற்பனை ரசவாதம் (15)
ஆர்த்திடும் கவியுணர்வை — நமது
. ஆய்வுத் திறனுடனே
சேர்ப்பது கற்பனையே — பாடல்
. சிறக்க நற்றுணையே (16)
கற்பனை செய்திடுவீர் — நம்மைக்
. . கடவுள் படைத்தகணம்!
கற்பனை செய்தன்றோ — உணர்வைக்
. கடவுள் படைத்திருப்பான் ? (17)
கனவில் புனைந்தளித்தான் — உலகே
. கடவுளின் முதற்கவிதை !
தனது கற்பனையால் — நமக்குத்
. தந்தனன் கவியாற்றல் ! (18)
~*~o0o~*~
pas@comm.utoronto.ca
- வரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா!
- காதல் கடிதம்
- அழகு
- மழை
- விமரிசனம்
- வேடிக்கை உலகம்
- மனம்
- இறுதிவரை….
- அறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)
- விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி
- பாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station
- கடிதங்கள்
- பசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1
- எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை
- தமிழர் உணவு
- கால பூதம்…
- பெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்
- குறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10
- வாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)
- காமராஜர் 100
- உலக அரங்கில் தமிழ் இலக்கியம்
- அரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி ?
- சா. கந்தசாமியின் படைப்புகள்
- ‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்
- மானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)
- விலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)
- சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-2
- ஸுகினி சட்னி (Zucchini chutney)
- கற்பனை
- அழகான ராட்சசி
- ஒண்டுக் குடித்தனம்
- திரிசங்கு
- விடியும்! நாவல் – (5)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து
- முக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்![பெருங் கதை]
- ஊர்க்கதை
- ஜெனிபர் லோபஸ்:
- ஒரு பூட்டுக்குப் பின்னால்….
- அன்பே வெல்லும்
- மீண்டும் பிறவி வேண்டும்
- ஆதங்கம்!
- இருதலைகள்…
- காலம்
- மரக்கூடு
- உறைவிடம்
- நீதித் தேவதையே நீ சற்று வருவாயா ?
- பிழைக்கத் தெரிய வேணும் கிளியே!
- மருதாணி
- வருத்தம்
- விமர்சனத் தீ
- அஞ்சாதே! கெஞ்சாதே!
- கல்யாணப் பயணம்
- Langston Hughes கவிதைகள்
- ‘திரும்பிப் பார்க்கின்றேன் ‘
- இரண்டு கவிதைகள்
- கோபத்துக்கும் கோபம் வரும்