உயிருள்ள அதிசயம்..

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

பனசை நடராஜன்


மொழியின் நாற்றங்கால்

முப்பரிமாண ஓவியம்..

தவழும் மெய்க்கடவுள்..

தலைமுறையின தொடர்ச்சி..

உடலால் வளர்பிறை..-கள்ளமில்லா

உள்ளத்தால் பெளர்ணமி..

கடலளவு துயரத்தையும்

கண்டவுடன் மறைய வைக்கும்

‘கையடக்க சந்தோஷம் ‘!

குடும்பப் பிணக்கைப் போக்கி

குதூகலம் மட்டுமே தரும்..

இருவரால் உருவான இந்த

உயிருள்ள அதிசயம்..!!

-பனசை நடராஜன், சிங்கப்பூர்

feenix75@yahoo.co.in

Series Navigation

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்