‘திரும்பிப் பார்க்கின்றேன் ‘
கவியோகி வேதம்
திரும்பியே பார்க்கின்றேன்;தினமும்-யின்று நெஞ்சையெல்லாம்
அரிக்கின்ற நினைவுகளை அலட்சியமாய்ப் போட்டுவிட்டு,
..
திரும்பியே பார்க்கின்றேன்;தெளிந்துவரும் பதநீர்போல்
உரிமையுடன் நம்மனத்தில் உல்லாசம் பொங்குகின்ற
..
அந்தயிளம் நாளையெல்லாம் அசைபோட்டேன் மாடுபோல!
சந்ததமும் பரவசத் தாலாட்டைப் பாடிநின்ற
..
சிறுவனாம்-என் பருவத்தைச் சிறப்பாக எண்ணுகின்றேன்;
சுறுசுறுப்பைத் தூண்டுகின்ற ‘தாம்ரபர்ணி ‘ ஆற்றிலே,
..
மண்டபத்தின் மேலேறி மளார்-என்று கீழ்குதித்து
பண்டையக் கிழவிகளைப் பதற வைத்ததுவும்,
..
சரித்திரச் சான்றெனவே ‘ஒருகையை ‘ யிழந்துநின்ற
அருமை ‘அய்யனாரின் ‘ தோளேறி,.. தொங்கும்-அவர்
..
நீள்நாக்கைத் தடவிமிக நெகிழ்ந்துபோ னதுவும்-அவர்
வாள் ‘தொட்டு, ‘அஞ்சாமல் வளர்ந்தபையன் நான் ‘-என்றே
..
தோழப் பசங்களிடம் சூளுரைத்து நிமிர்ந்ததுவும்,
ஆழநீர்ச் சுனைதனிலே முக்குளித்துப் பெண்களையே
..
பயங்காட்டி,மூச்சடக்கி, பலயிடத்தில் தோன்றியதும்,
அயனான சேதி ‘என நினைவில்தங்கும் அலைகளன்றோ ?
..
மரமேறி ‘கொடுக்காப் புளியுடனே வெல்லமும்
அரைமிளகாய்,உப்பும்கலந்(து) அறுசுவையாய் உண்டதுவும்
..
யிடித்துத் தந்த-அந்த எச்சுமிமுத்தம் பெற்றதுவும்,
பொடி-அளவும் சிதறாமல் பொன்-நினைவாய் நிற்கிறதே!
..
யிலக்கியப் பாடலெல்லாம் யிவ்வயதில் மறக்கிறதே!
கலக்கிய யிளம்பருவக் குறும்புநினை வுகள்மட்டும்,
..
வெண்பாவில் தளைதட்டா வெல்லுசொல்போல் நிற்கிறதே!
கண்சிமிட்டும் நேரத்தில் மாங்காய்த் தோப்பினிலே
,..
பாலருடன் வேலிதாண்டிப் பலகாய் பறித்ததுவும்,
கால்வரைக்கும் புளிக்குமந்த காய்களைத் தின்றதற்காய்
..
பரிசெதுவும் கொடுக்காமல், காவல்-ஆள் அடித்ததுவும்,
கருப்புத் தேன்-கூட்டில் திறமையுடன் கைவிட்டு
..
சிலதுளி தேனுக்காய் சில்மிஷம் செய்துநின்று
கலகலப்பாய்த் தோழருடன் கைநக்கிப் பெருமிதமாய்,
..
கண்ணன் ‘நான்! என்பதுபோல் காலரைத் தூக்கியதும்
திண்ணமாய் என் நினைவுச் செவுளில் அறைகிறதே!
..
அந்தநாள் நினைவெல்லாம் அக்குள்வரை சிலிர்ப்பதனால்,
யிந்தநாள் வெப்பத்தை எப்படியோ சகிக்கின்றேன்!..(கவியோகிவேதம்)
^^^
sakthia@eth.net
- கால பூதம்…
- காமராஜர் 100
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10
- குறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)
- பெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்
- வரதட்சணை மீது வழக்குப்போர் தொடுத்த புரட்சிப் பெண் நிஷா ஷர்மா!
- கடிதங்கள்
- மீண்டும் பிறவி வேண்டும்
- அன்பே வெல்லும்
- ஒரு பூட்டுக்குப் பின்னால்….
- ஜெனிபர் லோபஸ்:
- ஊர்க்கதை
- முக்கோணக் கிளையில் ஆடும் மூன்று கிளிகள்![பெருங் கதை]
- உலக அரங்கில் தமிழ் இலக்கியம்
- பாரதத்தில் முதல் அணுசக்தி பரிமாறிய தாராப்பூர் கொதிநீர் அணுமின் நிலையத்தின் பிரச்சனைகள் [Problems in Tarapur Atomic Power Station
- விளாதிமீர் ஐவனோவிச் வெர்னாட்ஸ்கி
- அறிவியல் மேதைகள் சர் ஜேம்ஸ் சாட்விக் (Sir James Chadwick)
- இறுதிவரை….
- மனம்
- வேடிக்கை உலகம்
- விமரிசனம்
- மழை
- அழகு
- காதல் கடிதம்
- கல்யாணப் பயணம்
- ஆதங்கம்!
- அரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி ?
- வாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)
- ஸுகினி சட்னி (Zucchini chutney)
- தமிழர் உணவு
- இருதலைகள்…
- எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை
- பசுமை – அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினைந்து
- விடியும்! நாவல் – (5)
- திரிசங்கு
- ஒண்டுக் குடித்தனம்
- அழகான ராட்சசி
- சுஜாதாவும் இலக்கியமும்-புனைவுகளுக்கு அப்பால்-2
- விலைகொடுத்துக் கற்கும் பாடம் (துாமகேதுவின் ‘போஸ்டாபீஸ் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 69)
- மானுட உறவின் புதிர்கள் ( திருகோணமலை க.அருள் சுப்பிரமணியனின் ‘அம்மாச்சி ‘ சிறுகதைத் தொகுதி-நூல் அறிமுகம்)
- ‘அனைத்தும் அறிந்த ‘ ஒரு விமர்சகருக்கு ‘ஒன்றுமே அறியாத ‘ ஒரு வாசகனின் பதில்
- கற்பனை
- சா. கந்தசாமியின் படைப்புகள்
- கோபத்துக்கும் கோபம் வரும்
- இரண்டு கவிதைகள்
- ‘திரும்பிப் பார்க்கின்றேன் ‘
- Langston Hughes கவிதைகள்
- அஞ்சாதே! கெஞ்சாதே!
- விமர்சனத் தீ
- வருத்தம்
- மருதாணி
- பிழைக்கத் தெரிய வேணும் கிளியே!
- நீதித் தேவதையே நீ சற்று வருவாயா ?
- உறைவிடம்
- மரக்கூடு
- காலம்