திருப்பிக்கொடு

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

விஜய் ஆனந்த் சி


உன்னை முதலில் பார்த்ததும் என்னை மறந்தேன்
என்னை மறந்த வேளை என் இதயம் திருடினாய்
வேல் விழி ஆயுதம் காட்டி சிறை செய்தாய்
காட்டாற்று வெள்ளமாய் இருந்தவனை!

குயில் பேசியதும் நாட்டியம் நடந்ததும்
சுடர் விழிப்பார்வையால் பாறையைப் பனியாக்கியதும்
உன்னில் நான் கண்ட உலக அதிசயங்கள்!

சொல்ல நினைத்த நேரம் வார்த்தைகள் போயின தூரம்
சொல்ல வந்ததை சொல்லாமல் சொல்லியது கண்களின் ஈரம்
மாயமாய் மறைந்துவிட்டாய் என் மனதை மயானமாக்கி!

என் இன்னல் தீர்க்க இதயத்தை திருப்பிக்கொடு
துக்கம் களைய தூக்கத்தை திருப்பிக்கொடு!

vijayanandc@hotmail.com

Series Navigation

விஜய் ஆனந்த் சி.

விஜய் ஆனந்த் சி.