முந்தைப் பெருநகர்
பா அகிலன்
(பதுங்குகுழி நாட்கள் : பா அகிலன் : குருத்து வெளியீடு , தாய்த் தமிழ் பள்ளி வளாகம், கோபி செட்டிப் பாளையம் வட்டம் ஈரோடு மாவட்டம் 638476. விலை ரூ 45 மின் அஞ்சல் sundarprs@hotmail.com)
இழந்து போன
அற்புதமான கனவின்
நினைவுத் துயரென படர்கிறது நிலவு.
பகலில் புறாக்கள் பாடி
சிறகடித்துப் பறந்த
வெள்ளைக் கட்டிடங்களுடைய
முந்தைப் பெருநகர்
இடிபாடுகளோடு குந்தியிருக்கிறது யுத்த வடுப்பட்டு
பாசி அடர்ந்த பழஞ்சுவர்களின்
பூர்வ மாடங்களில்
கர்வ நாட்களின்
முன்னைச் சாயல் இன்றும்
பண்டையொரு ஞானி,
சித்தாடித் திரிந்த
அதன் அங்காடித் தெருக்களில்
சொல்லொண்ணா இருளை இறக்கியது யார் ?
பாடியின் தந்திகளிலோ தோய்கிறது துக்கம்
விழாவடங்கிய சதுக்கங்கள்
காலமிறந்த ஆங்கிலக் கடிகாரக் கோபுரம்
ஊடே
புடைத்தெழுகிற பீதியிடை
கடல் முகத்தில்
விழித்திருக்கும் காவலரண்கள் ஓயாது,
தானே தனக்குச் சாட்சியாய்
யாவற்றையும் பார்த்தபடிக்கு
மாநகரோ மெளனத்துள்
ஓங்கி
இன்னும் இன்னும் முரசுகள் முழங்கவும்
சத்தியத்தின் சுவாலை நெருப்பு உள்ளேந்தி
மாநகரோ மோனத்துள் அமரும்.
(மார்கழி -1993)
1. கடையிற்சுவாமி – ஈழத்துச் சித்தர் பரம்பரையின் மூலவர்களுள் ஒருவராகக் கருதப்படுபவர். யாழ்ப்பாணக் கடைத்தெருவில் எப்போதும் சுற்றித் திரிவாராம்.
2. யாழ்பாடி: அந்தகனான ஒரு யாழ்பாடிக்கு பரிசாக முன்னொருகால் வழங்கப்பட்ட நகரமே யாழ்ப்பாணம் என்றொரு ஐதீகம் உண்டு.
*************
- கறுப்பு வெளிச்சங்கள்
- கடிகாரம்..
- இன்னொரு ஜனனம்
- நினைவுகள்
- பனி மழை
- இயல்பு
- தன்னகங்காரத்தின் மூன்று பக்தர்கள்
- ஒரு பேனா முனை (துன்ப்)உறுத்துகிறது
- ஜார்ஜ் வில்லியம் ஃப்ரெடெரிக் ஹெகல் (1770-1831)
- சூஃபி இஸ்லாம் : அமைதிப்புறா
- சிற்பிகளைச் செதுக்கும் சிற்பிகளே!
- கோவில்களில் அன்னதானம் செய்ய முதல்வர் ஜெயலலிதாவின் திட்டம் தவறானது
- இந்த வாரம் இப்படி – மார்ச் 31 2002 (சங்கரலிங்கபுர கலவரம், ஜெயலலிதா ஆறுதல், கோத்ரா மற்றும் ஜம்மு, மீண்டும் மூன்றாம் அணி)
- இரக்கம்
- ஓட்டப் போட்டி
- உன்னுள் நான்
- சொன்னால் விரோதம்
- முந்தைப் பெருநகர்
- நலமுற
- வளர்ச்சி
- அனிச்சமடி சிறு இதயம்
- நீல பத்மநாபன் விமரிசனத்தொகுப்பு
- நீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை
- ‘Amores Perros ‘ அமோரஸ் பெர்ரோஸ்- நாய் போல அன்பு மெக்ஸிகோ சினிமா (விமர்சனம் அல்ல)
- நூல் விமர்சனம் – நகரம் – 90 (சுப்ரபாரதிமணியன்) -போராட்ட வாழ்க்கை
- திருவனந்த புரம் தமிழ்ச்சங்கம்- விமரிசனக் கூட்டம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 7 – கி.ராஜநாராயணனின் ‘கன்னிமை ‘ – எதிர்பார்ப்பும் ஏக்கமும்
- நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்களின் ஆரம்பம் இருக்குமென்ற ஆராய்ச்சி
- அமெரிக்காவில் பறந்த அபூர்வ சகோதரர்கள்
- இன்னும் கொஞ்சம் வெண்பா
- ப்ரியமுள்ள தொலைபேசிக்கு