சாமியின் தந்தை..
T.V.ராதாகிருஷ்ணன்
தன் மகன் தன்னை கவனிப்பது இல்லை..தனியாக விட்டு விட்டான்..என
அறுபத்திரெண்டு வயதுள்ள முதியவர்..அந்த ஊர் காவல்நிலையத்தில் புகார்
அளிக்க..காவல்துறை அதிகாரி அருணாசலம் ..உடன் அவர் மகன் சாமியை கைது
செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தார்..
சாமியைப் பார்த்து இன்ஸ்பெக்டர்..’இதோ பாருய்யா..இப்ப எல்லாம்
அப்பா,அம்மாவைக் கவனிக்கலைன்னா கைது பண்ணிடுவோம்..நீதிமன்றத்தில உன்
பேர்ல வழக்கு போடுவோம்..சிறையில் அடைப்போம்’ என்றார்.
அதற்கு சாமி..’ஐயா..இதுநாள் வரை என் தந்தையை நான் காப்பாற்றி
வந்தேன்..ஆனால்..அவர் செய்ய வேண்டிய கடமை ஒன்றை அவர்
செய்யவில்லை..அதனால்..தந்தை விட்டுச் சென்ற பணியை மேற்கொள்ள வேண்டியதும்
ஒரு மகனின் கடமை என்பதால்..அக்கடமையைச் செய்துக் கொண்டிருக்கிறேன்.என்
தந்தை அவர் கடமையை ஏற்றுக் கொள்ளட்டும்..பின் நானும் என் தந்தையை
காக்கும் பணியை குறைவில்லாமல் செய்கிறேன்’ என்றான்..
‘இது என்னய்யா..புதுக்கதை’ என்ற அருணாசலம்..’உன் தந்தை செய்ய மறந்த கடமை
என்ன?’ என்றார்,
இவ்வளவு நேரம் வாசலில் நின்றுக்கொண்டிருந்த் 85 வயது முதியவரை
‘தாத்தா..உள்ள வாங்க’ என்று அழைத்தான் சாமி.
முதியவர் உள்ளே வர..சாமி அதிகாரியைப் பார்த்து..’ இவர் என்
தாத்தா..அதாவது..நான் அவரைக் கவனிக்கவில்லை என உங்களிடம் புகார்
அளித்தாரே..அவரின் தந்தை..இவரை இவர் மகன்..என் தந்தை..பல்லாண்டுகாலமாக
கவனிக்கவில்லை..இவர் இருக்கிறாரா..இல்லையா..என்பது கூட அவருக்குத்
தெரியாது..சமீபத்தில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் சென்ற நான் இவரைப் பார்த்து
பேச..அப்போதுதான் இவர் என் தந்தையின் தந்தை என்பதை அறிந்தேன்..முதலில்
என் தந்தை தன் கடமையைச் செய்யட்டும்..எனக்கு வழிகாட்டியாய் இருக்கட்டும்’
என்றான்.
சாமியின் தந்தையை இன்ஸ்பெக்டர் பார்க்க அவர் தலை குனிந்தார்.
T.V.ராதாகிருஷ்ணன்
- நாலுபேருக்குநன்றி
- மழை ஏன் பெய்கிறது
- விதை
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)
- குருவிக் கூடு
- குமார் அண்ணா
- நினைவுகளின் சுவட்டில் – 64
- விதியை மேலும் அறிதல்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3
- சாமியின் தந்தை..
- சட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- நீ….. நான்…. மழை….
- ஒற்றை மீன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30
- கனவுகள் இனிதாகட்டும்!!
- இடைவெளி
- தன்னிலை விளக்கம்
- உயிர்ப்பு
- இரவின் தியானம்
- எங்ஙனம்?
- ஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை
- ‘‘காடு வாழ்த்து’’
- இவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்
- ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு
- சாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2
- மரணம் பயணிக்கும் சாலை!
- எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது
- சென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை
- விடுமுறை நாள் கல்லூரி
- முரண்பாடு
- சாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்
- எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்
- அந்தவொரு மழை நாள்..
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)
- இரண்டு கவிதைகள்
- தேவைகள்
- அக்கறை பச்சை
- “புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்
- இருக்கை…
- கொடிய பின்னிரவு
- இருக்கை
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- ப மதியழகன் கவிதைகள்
- கைகளிருந்தால்…
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)